Sunday, January 31, 2016

சந்திரதோஷம் போக்கும் புஷ்பகரணி

தஞ்சை மாவட்டம் திருவையாறுக்கு அருகில் திங்களூர் எனும் பாடல் பெற்ற தலம் உள்ளது.இதுசந்திரன் கோவில். இங்கு பெரியநாயகி சமேத கைலாசநாதர் உள்ளார்.பவுர்ணமி, அமாவாசை வரும் திங்கட்கிழமை அன்றுஅவரை வணங்கினால் கூடுதல் பலன் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. ரோகிணி, கார்த்திகை நட்சத்திரங்கள் திங்கட்கிழமைகளில் வந்தால் அன்று வழிபாடு செய்வது மிகவும் நல்லது. கடக ராசிக்க£ரர்கள் கட்டாயம் வணங்கவேண்டும். சந்திர தலத்தில் புஷ்பகரணி தீர்த்தமுள்ளது.குஷ்டம், சித்தப்பிரமையால் அவதிப்படுபவர்கள் இங்கு வந்து நீராடி சந்திரனை வணங்கினால் அவை நீங்கப்பெறும். இங்கு தினந்தோறும் காலை 7மணி முதல்1மணி வரையும், மாலை 4 மணி முதல் 9 மணிவரையும் பூஜைகள் நடைபெறும். 

கோவிலுக்கு சென்று விட்டு வரும் வழியில் நுழைவுவாயிலில் திருநாவுக்கரசர் தண்ணீர் பந்தல் உள்ளது. இங்கு தண்ணீர் பருகிச் சென்றால் உத்தமம். தஞ்சையில் இருந்து திருவையாறு–கும்பகோணம் சாலையில் திருவையாறில் இருந்து 4கிலோமீட்டர் தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது. வெண்ணிற மலர் அர்ச்சனை, வெண்ணிற ஆடை, முத்து மாலை அணிந்து வழிபடுதல், பவுர்ணமி விரதம் இருத்தல், வெண்ணிற வஸ்திர தானம் செய்தல், அரிசி தானம் கொடுத்தல் இவற்றால் சந்திர கிரக தோஷம் நிவர்த்தி ஆகும்.

No comments:

Post a Comment