Monday, June 27, 2022

பெளர்ணமி தினத்தின் சிறப்புகள் என்ன - 12 மாதத்திலும் வரும் பெளர்ணமியின் முக்கியத்துவம்

பெளர்ணமி தினத்தின் சிறப்புகள் என்ன? 12 மாதத்திலும் வரும் பெளர்ணமியின் முக்கியத்துவம் என்ன பெளர்ணமி என்பது முழு நிலவு வானில் பிரகாசமாகத் தோன்றும் அற்புதமான நாள். இந்தநாளில், நல்ல அதிர்வலைகள் ஏற்படும். அப்பேர்ப்பட்ட சக்தி மிகுந்த நாளில், தேவி வழிபாடு செய்வது தீயசக்தியில் இருந்து நம்மைக் காக்கும். அம்மன் கோயிலுக்குச் சென்று பெளர்ணமி நன்னாளில் வழிபடு ச்செய்தால் வாழ்வில் இதுவரை பட்ட கஷ்டங்கள் அனைத்தும் விலகும். அதேபோல், வீட்டில் விளக்கேற்றி, லலிதா சகஸ்ரநாமம் சொல்லி வழிபடுவதும், வீடு மனை முதலான செல்வங்களை வாங்குகிற பாக்கியத்தைக் கொடுக்கவல்லது. ஒவ்வொரு பெளர்ணமியிலும் மாலையில், சந்திரன் தோன்றும் வேளையில், வீட்டில் சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து அம்பாளை ஆராதிப்பது விசேஷமானது. தம்பதி இடையே ஒற்றுமை மேலோங்கும். முக்கியமாக, பெளர்ணமி நாளில், குல்தெய்வ வழிபாடு மிக மிக முக்கியமானது. இந்த நன்னாளில், குலதெய்வக் கோயில் அருகில் இருந்தால், சென்று வழிபட்டு வருவது நன்மைகளை வழங்கும். சந்ததியினர் சிறப்பாக வாழ்வார்கள். குலதெய்வம் பூர்வீகக் கிராமத்தில், வெளியூரில் என்றிருந்தால், வீட்டில் விளக்கேற்றி குலதெய்வ வழிபாடு செய்யலாம். குலசாமி படத்துக்கு மாலையிட்டு, அல்லது பூக்களால் அலங்கரித்து, குலசாமிக்கி சர்க்கரைப் பொங்கல் அல்லது வெண் பொங்கல் முதலான குலதெய்வத்துக்கு படையலிடும் உணவை நைவேத்தியமாகச் செய்து, வேண்டிக்கொள்ளலாம் ஐப்பசி பெளர்ணமி மட்டுமின்றி, சித்திரை முதற்கொண்டு பன்னிரு மாதங்களிலும் வரும் பெளர்ணமி திருநாளில் விரதம் இருந்து சிவனாரை வழிபடுவது மிகவும் சிறப்பு. அமாவாசை மற்றும் பௌர்ணமி என்பது ஆன்மீகத்தில் மட்டுமல்ல, அறிவியலிலும் மிகவும் முக்கியமான நாட்கள். இந்த இரு நாட்களிலும் விரதம் இருந்து இறைவனை வழிபாடு செய்வது இந்து மதத்தில் ஒவ்வொரு மாத பவுர்ணமிக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. மாத பவுர்ணமிகளின் முக்கியத்துவம் என்ன என்பதை தெரிந்துக் கொள்வோம். சித்திரை தமிழ் ஆண்டின் முதல் மாதமான சித்திரையில் வரும் பெளர்ணமி சித்ரா பௌர்ணமி. மனிதராக பிறந்த அனைவரின் செயல்களையும் சித்ர குப்தன் தான் கணக்கு வைத்துக் கொள்வார் என்பது நம்பிக்கை. சித்திரை மாதம் வரும் பெளர்ணமி சித்ரகுபதனை வணங்கும் நாள். மதுரையில் மிகவும் சிறப்பாக அனுசரிக்கப்படும். சித்திரை மாதத்தில் பிறந்தவர்கள், சித்ரா பெளர்ணமி அன்று சித்ரகுப்தனுக்கு பொங்கல் வைத்து வழிபடுவார்கள். மேலும் சித்ரா பௌர்ணமி அன்று அம்பாள் வழிபாடு செய்வதால் திருமண யோகம், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்துடன் கூடிய சித்ரா பௌர்ணமி வந்தால் மிகவும் விசேஷமானது. வைகாசி அரக்கன் சூரனை அடக்க முருகன் அவதரித்த நாள். தீமைகள் அழியும், நன்மை நிலைக்கும் என்பதை உறுதிப்படுத்தும் தினம். திருச்செந்தூரின் அருகே இருக்கும் உவரி என்ற தளத்தில் வைகாசி மாதம் வரும் பௌர்ணமி மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். முருகன் கோவில்களிலும் வைகாசி விசாகம் என்று வைகாசி மாத பெளர்ணமி கொண்டாடப்படுகிறது. ஆனி ஆனி மாத பௌர்ணமி அன்று மா, பலா, வாழை உட்பட கனிகளை படைத்து இறைவனை வணங்குவது சிறப்பு. ஆனி பெளர்ணமி திருவையாற்றில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். ஆடி ஆடி மாத பௌர்ணமி காக்கும் கடவுள் கலிவரதனுக்கு உகந்த நாள். காஞ்சிபுரத்தில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும். ஆவணி ஆவணி மாத பௌர்ணமி அவிட்டம் நட்சத்திரத்தன்று வரும். இன்று தான் சகோதர-சகோதரிகளை இணைக்கும் ராக்கி எனப்படும் ரக்ஷாபந்தன் பண்டிகை கொண்டாடப்படுகிறது. புரட்டாசி புரட்டாசி பௌர்ணமி சிவசக்தியாக அருளும் உமாமகேஸ்வரரை வணங்கும் முக்கிய நாள். புரட்டாசி பெளர்ணமி தினத்தில் வீட்டில் விரதமிருந்து சிவபெருமானை வழிபடுவதாலும், அருகிலுள்ள சிவாலயங்களுக்குச் சென்று வில்வார்ச்சனை செய்து, நெய்தீபங்கள் ஏற்றிவைத்து வழிபடுவதாலும் விசேஷ பலன்கள் கைகூடும். ஐப்பசி ஐப்பசி பௌர்ணமியன்று லட்சுமி விரதமும், சிவனுக்கு அன்னாபிஷேகமும் செய்வது சிறப்பு. கங்கை கொண்ட சோழபுரத்தில் மிகச் சிறப்பாக அனுசரிக்கப்படுகிறது. கார்த்திகை கார்த்திகைப் பௌர்ணமியன்று திருவிளக்கு தீபத் திருநாள். மும்மூர்த்திகளும் சேர்ந்து திருவிளையாடல் நடத்திய நாள். திருவண்ணாமலையில் மலையே ஜோதிப்பிழம்பாக நின்று மக்களுக்கு அருளும் நாள். பெளர்ணமி தினத்தில் பொதுவாக கிரிவலம் செய்வது சிறப்பானது. அதிலும் கார்த்திகை பெளர்ணமி அன்று திருவண்ணாமலையில் கிரிவலம் செய்வது சிறப்பாகக் கருதப்படுகிறது. மார்கழி மார்கழி மாதப் பௌர்ணமி திருவாதிரை நட்சத்திரத்தன்று வரும். இறைவன் நடராஜனாய் காட்சியளித்த திருநாள். சிதம்பரத்திலும், திரு உத்தர கோசமங்கையிலும் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது மார்கழி மாத பெளர்ணமி. தை தை மாதத்தில் வரும் பௌர்ணமி பூச நட்சத்திரத்தன்று நிகழும். மதுரையிலும், பழனியிலும் மிகுந்த சிறப்புடன் கொண்டாடப்படுகிறது. மாசி மாசி மாதம் மகம் நட்சத்திர நாளன்று பெளர்ணமி வரும். இது மிகவும் சிறப்பு வாய்ந்தது. தெற்கே கும்பகோணத்திலும், வடக்கே அலகாபாத்திலும் மிக்க சிறப்புடன் கொண்டாடப்படும். அனைத்து ஆலயங்களிலும் அனுசரிக்கப்படும் மாசி மகத்தன்று புனிதத் தலங்களில் நீராடி சிவனை தரிசிப்பது சர்வ பாபங்களையும் போக்கி வீடு பேற்றை அருளும். பங்குனி பங்குனிப் பௌர்ணமி உத்திரம் நட்சத்திரத்தன்று வரும். சிவபெருமானுக்கும், அன்னை உமையாளுக்கும் திருமணம் நிகழ்ந்த நாள். பழனியில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. திருவண்ணாமலையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆவணி மாத பௌர்ணமி கிரிவலம் வர பக்தர்களுக்கு தடை இன்று விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் 24 முதல் பிரசித்தி பெற்ற பௌர்ணமி கிரிவலம் மேற்கொள்ள பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. அந்த வகையில் இந்த மாதம் ஆவணி பௌர்ணமியை முன்னிட்டு இன்றும், நாளையும் கிரிவலத்திற்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதனால் பக்தர்கள் அனைவரும் வீட்டிலேயே தங்களுக்கு இஷ்டமான அம்மனையும் குலத்தெய்வத்தையும் மனதில் நினைத்து எளிமையாக வணங்குதல் நல்லது.

பஞ்சமியில் வாராஹியை வழிபாடு செய்தால் சிறப்பு...

சப்த கன்னியர்களில் ஒருவரான வராஹி தேவியை பஞ்சமியில் வழிபடுவது மிகச் சிறப்பு. சக்திவாய்ந்த தேவதையாக போற்றப்படுகிறாள் வாராஹி தேவி. மகா சக்தியாகத் திகழும் பராசக்தி, தன்னில் இருந்து ஒவ்வொரு சக்தியாக வெளிப்படுத்தினாள் என்றும் அவர்களைக் கொண்டு அசுரக் கூட்டங்களையும் தீய சக்திகளையும் அழித்தாள் என்றும் விவரிக்கிறது புராணம். இந்த சக்திகள் ஏழு என்றும் இவர்களை சப்தமார்கள் என்றும் விவரிக்கிறார்கள் ஸாக்த வழிபாடு செய்பவர்கள். சப்த மாதர்களில் அதீத வீரியமும் தீய சக்திகளை அழிப்பதில் வேகமும் துடிப்பும் கொண்டு ஓடோடி வருபவள் வாராஹிதேவி. சப்தமாதர்களுக்கு சந்நிதி என்பது சோழர்கள் காலத்தில் பல ஆலயங்களில் அமைக்கப்பட்டன. யுத்தம் முதலான முக்கிய நிகழ்வுகளின் போது, சப்த மாதர்களுக்கு படையல் போடப்பட்டு, வழிபாடுகள் நடத்தப்பட்டன. சப்தமாதர்களில், கெளமாரி, மகேஸ்வரி என தெய்வங்களுக்கு தனித்தனியே ஆலயங்கள் எழுப்பப்பட்டன. பின்னாளில், அடுத்தடுத்த கட்டங்களில், வாராஹிக்கு கோயில்கள் எழுப்பப்பட்டு, பூஜைகளும் வழிபாடுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. தஞ்சாவூர் பெரியகோயிலில் வாராஹியை தரிசிக்கலாம். இவள் ஆதி பரமேஸ்வரி அல்லது ஆதி பராசக்தியின் சக்தி ஸ்வரூபம். மகிஷனை அழித்த மகிஷாசுர மர்த்தினியின் குதிரைப் படை தலைவி எனவும் கூட சிலர் இவளைச் சொல்வதுண்டு. கோபத்தின் உச்சம் தொடுபவள். ஆனால் அன்பிலே, ஆதரவிலே அன்னைக்கு நிகரானவள். இவள் லலிதையின் படைத்தலைவியாக, சேனாதிபதியாக போருக்கு சென்று வெற்றி வாகை சூடியவள். இந்த தெய்வத்திற்குரிய காயத்ரி மந்திரத்தை ஜெபிப்போருக்கு கேட்ட வரங்களை மிக விரைவில் தரக்கூடியவள். அப்படியான அந்த காயத்ரி மந்திரம் பின்வருமாறு... மேலும் படிக்க... ஏழரைச் சனி என்றால் என்ன? யாருக்கு பாதிப்பு வரும்? வராஹி காயத்ரி மந்திரம் "ஓம் ச்யாமளாயை வித்மஹே ஹல ஹஸ்தாயை தீமஹி தன்னோ வாராஹி ப்ரசோதயாத்" இம்மந்திரத்தை சொல்லி வர கிடைக்கும் சிறப்புக்கள் என்ன? வாராஹியை முறையே வழிபடும் பக்தர்களிடம் தோல்வி கூட தோற்றே விடும். குறிப்பாக, பஞ்சமி திதி, அமாவாசை திதி மற்றும் சொந்த ஜாதகத்தில் லக்கினத்திற்கு குரு 6 ஆம் இடத்தில் ஆட்சி அல்லது உச்சம் பெற்று பிறந்தவர்கள் மேற்கண்ட வாராஹியின் காயத்திரி மந்திரத்தை வாழ்நாள் முழுவதும் முறைப்படி ஜபித்து வந்தால் மந்திர சித்துக்கள் கூட வசப்பட இடம் உண்டு. குறிப்பாக இந்தத் தேவியை பஞ்சமியில் வழிபடுவது மேலும் பல சிறப்புக்களை வழிபடுபவர்களுக்குத் தரும். ஏன் பஞ்சமி திதியில் வராஹி வழிபாடு செய்ய வேண்டும் என்பதை தெரிந்துக் கொள்ளலாம் வாங்க... சிறப்பான திதிகளில் ஒன்று பஞ்சமி. "பஞ்சம்" என்றால் சமஸ்க்ருதத்தில் "ஐந்து" என்று பொருள் படும். ஐந்து என்றாலே விசேஷம் தான். 1. பஞ்சாங்கம் – திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம். 2. பஞ்சபுராணம் : தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருத்தொண்டர் புராணம். 3. பஞ்சபூதத் தலங்கள் : காஞ்சிபுரம், திருச்சி திருவானைக் காவல், திருவண்ணாமலை, திருக்காளத்தி, சிதம்பரம். 4. பஞ்ச ஆரண்யம் – உஷத் காலம், கால சாந்தி, உச்சி காலம், சாயரட்சை, அர்த்தஜாமம். 5. பஞ்சலோகங்கள்: செம்பு, வெள்ளி, தங்கம், துத்தம், ஈயம் (copper, silver, gold, zinc and lead). 6. பஞ்ச சபைகள் – ரத்தின சபை, கனக சபை, வெள்ளி சபை, தாமிர சபை, சித்திர சபை. 7. இறைவனின் ஐந்தொழில்கள் - ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் 8. பஞ்சபாண்டவர்கள் – தர்மன், அர்ச்சுனன், பீமன், சகாதேவன், நகுலன். 9. பஞ்சாமிர்தம் - பால். தயிர், சர்க்கரை, நெய், தேன். 10. பஞ்சமுகங்கள் (சிவன்)- தத்புருஷம், அகோரம், சத்யோஜாதம், வாமதேவம், ஈசானனம். மேற்கண்டவற்றின் மூலமாக நமக்கும் கூட புரிந்து இருக்கும் ஐந்தாம் எண் எவ்வளவு சிறப்புக்கு உரியது என்று. காரணம், இதன் அடிப்படையில் தான் பஞ்சமி திதியும் வருகிறது. அதாவது அமாவாசை அல்லது பெளர்ணமி கழிந்து வரும் ஐந்தாவது நாளே பஞ்சமி எனப்படும். அதேபோல, சப்த கன்னிகள் என்னும் எழுவரில் ஐந்தாமானவள் வராஹி. அம்பிகையிடம் இருந்து தோன்றிய நித்திய கன்னிகள் தான் சப்த கன்னியர். அவர்கள் முறையே, ப்ராம்ஹி, மாகேஸ்வரி, வைஷ்ணவி, கௌமாரி, வராஹி, இந்த்ராணி மற்றும் சாமுண்டி ஆவார்கள். அதனால் தான் பஞ்சமி திதியில் வராஹி தேவியை வழிபட்டு வர வெற்றி வீட்டின் வாசலை அழைக்காமலேயே வந்தடையும் என்பர். மேலும் படிக்க... கந்த சஷ்டி கவசத்தின் பாடல் வரிகள்... வாராஹியை எப்படி முறைப்படி வழிபடுவது? நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வாசனை மலர்கள் சாற்றி வாசனை தூபங்கள் ஏற்றி ஐம்புலன்களும் ஆன்மீகத்தில் ஒடுங்க மேற்கண்ட வராஹி தேவியின் காயத்திரி மந்திரத்தை பஞ்சமி திதி பிரம்ம முகூர்த்தத்தில் ஆரம்பித்து தொடர்ந்து ஜபித்து வர வேண்டும். பசும்பால் அல்லது இனிப்புகளை நிவேதனமாகப் படைக்கலாம். கண்டிப்பாக புளிப்பு இருக்கக்கூடாது. புளிப்பு அந்த அம்பாளுக்கு ஆகாது. 1. வழக்குகள் சாதகம் ஆகி... எதிரிகளின் பலம் குறைந்து உங்களது பலம் அதிகரிக்கும். உடன், வெற்றி உங்கள் வாகை சூடும். 2. கல்வி, தொழில் அல்லது உத்யோகம் மேம்படும். 3. கண்திருஷ்டி, செய்வினை கோளாறுகள் அகலும். 4. புத்தி நல்ல விதத்தில் வேலை செய்யும். இதனால் ஞானம் சித்திக்கும். 5. பயம் தெளிந்து மனதில் துணிச்சல் - தைரியம் - தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

வாராஹி அன்னையை வணங்கும் முறை

வாராஹி என்பவர், பெரும் ஆற்றல் வாய்ந்த பெண் தெய்வமாக விளங்குகிறார். சப்த மாத்ரிகைகள் எனப்படும் 7 அன்னை இறைவிகளுக்குள், இவரும் ஒருவராகத் திகழ்கிறார். பகவான் விஷ்ணுவின் வராக அவதாரத்தின் சக்தி வடிவமாக, அதாவது பெண்மையின் ஆற்றலாக இவர் விளங்குகிறார். எனவே இவர் வாராஹி என அழைக்கப்படுகிறார். விஷ்ணுவின் வராக வடிவத்தைப் போலவே, இவரும், காட்டுப் பன்றியின் முகத்துடனும், மானுடப் பெண்ணின் உடலுடனும் காட்சி தருகிறார். விஷ்ணுவுடன் தொடர்புடையவராக இருந்தாலும், வைணவத்தில் மட்டுமின்றி, சிவபெருமானை வழிபடும் சைவ சமயத்திலும், சக்தி எனப்படும் தேவியை வழிபடும் சாக்த சமயத்திலும் கூட, இவர், மக்களால் மிகவும் பக்தியுடன் போற்றி வணங்கப்படுகிறார். வாராஹி மாதா வழிபாடு வாராஹி வழிபாடு என்பது பண்டைய காலங்களிலிருந்தே மக்களிடையே பிரபலமாக இருந்து வருகிறது. மார்க்கண்டேய புராணம், வராக புராணம், தேவி புராணம் போன்ற பல புராணங்களும், இவரது அவதாரம், பெருமை, இவர் நிகழ்த்திய வீர தீரச் செயல்கள் போன்றவற்றைக் குறித்து, விரிவாகவும், புகழ்ந்தும் பேசுகின்றன. பல நூற்றாண்டுகள் பழமையான வாராஹி ஆலயங்களும், இந்தியாவிலும், அண்டை நாடான நேபாளத்திலும் உள்ளன. மா வாராஹியையும் நாம், மற்ற தெய்வங்களை வணங்குவது போலவே வணங்கலாம். பூஜை அறையிலோ, அதற்குரிய தூய்மையான இடத்திலோ வாராஹி மாதாவின் சிலையையோ, படத்தையோ வைத்து, அதை சந்தனம், குங்குமம், மலர்கள் போன்றவற்றால் அலங்கரித்து, பழங்கள், பிரசாதங்கள் போன்றவற்றைப் படைத்து, அவருக்கு உரிய மந்திரங்கள் ஓதி, அர்ச்சனை, பூஜை முதலியன செய்து, அவரை வழிபட்டு, அவரது அருளை நாம் பெறலாம். மா வாராஹி வழிபாடு என்பது இது போன்று செய்யப்படுகிறது என்றாலும், அவரை வணங்கும் முறை என்பது, இது போன்ற சடங்கு, சம்பிரதாயங்களுக்கு அப்பாற்பட்டது என்பது தான் உண்மை. வாராஹி வேண்டுவது என்ன? கடவுள் என்பவர், உண்மையான பக்தியையே எதிர்பார்ப்பவர்; அதையே ஏற்றுக் கொள்பவர் ஆவார். மக்கள் அவரை ஆணாகக் கருதி வழிபட்டாலும் சரி, இல்லை பெண்ணாகக் கருதி வழிபட்டாலும் சரி; அல்லது எந்தப் பெயரிட்டு அழைத்தாலும் சரி; அவர் உண்மையான அன்பு ஒன்றுக்கே வசப்படுபவர். இது அன்னை வாராஹிக்கும் பொருந்தும். ஆம், அவரை வணங்குபவர்களிடமிருந்து அவர் எதிர்பார்ப்பதெல்லாம், உண்மையான பக்தி ஒன்றையே. உண்மையான பக்தி என்பது, தூய்மையான உள்ளத்திலிருந்தே உருவாகக் கூடியதாகும். எனவே தான், தூய்மையான உள்ளத்தையே இறைவன் குடியிருக்கும் இடம் என, மகான்களும், புராணங்களும் உறுதியாகக் கூறுகின்றன. எனவே, மாசு, மலங்கள் எதுவும் அண்டாத, நிர்மலமான மனமே, வராஹி அன்னை வழிபாட்டிற்கு அடிப்படையாக விளங்குகிறது. சரி, இது போன்ற தூய்மையான மனதை அடைவது எப்படி? இது போன்ற விலைமதிக்க முடியாத ஒன்றுடன் இந்த தேவியை அணுகுவது எப்படி? இந்தக் கேள்விகளுக்குக் கிடைக்கும் விடையே, வாராஹி தேவியை வணங்கும் முறையாக அமைகிறது. வாராஹி அன்னையை வணங்கும் முறை பெரும் ஆற்றலும், உக்கிரமும் கொண்ட வராஹி தேவி, கருணையும் நிறைந்தவள் ஆவார். தூய பக்தியுடன் அவரைச் சரணடைந்தவர்களின் பயத்தைப் போக்கி, துன்பங்களை நீக்கி, வேண்டியதைத் தரக் கூடியவர் ஆவார். இவரது அருளைப் பெறுவதற்கு, நாம், நம் உள்ளத்தையே பண்படுத்திக் கொள்வது அவசியம். பொய், புரட்டு, கோபம், பொறாமை, பேராசை, அகம்பாவம் போன்றவற்றை, நம் மனதிலிருந்து முழுமையாக அகற்றி விட வேண்டும். இது போன்ற எதிர்மறை உணர்வுகளுக்கு இடம் அளித்து விடாமல் விழிப்புடன் இருப்பது, அன்னையை நம் உள்ளத்தில் வரவேற்று, அமர வைத்து, வணங்குவதற்கு மிகவும் தேவையான ஒன்றாகும். பிறர் மீது பகைமை பாராட்டுவது, வெறுப்பை உமிழ்வது, தூற்றுவது, சபிப்பது, மனதை வருந்தச் செய்வது, அவர்களைப் பற்றி மற்றவர்களீடம் தவறாகப் பேசுவது, பிறருக்குத் துன்பம் விளைவிப்பது, பிறர் படும் துயரத்தைக் கண்டு மகிழ்வது, போன்றவற்றை எந்த நிலையிலும் செய்யாமல் இருப்பதும், வாராஹியின் அருள் பெற அவசியமாகும். வாழ்க்கையில் நமக்கு எது தேவை, அதை எப்பொழுது நமக்குக் கொடுக்க வேண்டும் என்பதெல்லாம், நம்மை விட, இந்த அன்னைக்கு நன்றாகவே தெரியும். எனவே, ‘இது வேண்டும், அது வேண்டும்’ என்றெல்லாம் அவரிடம் நாம் கேட்க வேண்டிய தேவையே இல்லை. ஆனால், நாம் படும் துன்பம், நமக்குள் எழும் ஆசை போன்றவை, பல நேரங்களில் நம்மை, இறைவியிடம் பலவற்றை வேண்டிக் கேட்கத் தூண்டுகின்றன. இதில் தவறொன்றும் இல்லை. ஆனால், எந்தக் காரணத்தைக் கொண்டும், நமக்குப் பிடிக்காதவர்களுக்கோ, நாம் எதிரி எனக் கருதுபவர்களுக்கோ துன்பம் தரும் படி தேவியை வேண்டுவது, மிகவும் தவறான செயலாகும். அனைத்தும் அறிந்த இந்த தெய்வத்திற்கு, யாருக்கு எதைத் தர வேண்டும் என்பது நன்றாகவே தெரியும். எனவே, இது போன்று பிறருக்குத் தீமை தர இறையருளை வேண்டுவது, நமக்கே தீங்கு விளைவிக்கும் ஒன்றாகவே அமைந்து விடும். இதற்கு பதிலாக, மற்றவர் எப்படி இருந்தாலும் சரி, அவருக்காகவும், அவர் நலனுக்காகவும் அன்னையிடம் நாம் பிரார்த்தனை செய்தால், அன்னையின் கருணை, நமக்குப் பலமடங்கு கிடைக்கும். இவற்றுடன் நாம், எப்பொழுதும், நியாய தர்மத்தை ஆனுசரித்து நடந்து கொள்வதும் அவசியம். நம் ஒவ்வொரு அசைவையும் அன்னை அறிவாள் என்பதால், எண்ணம், பேச்சு, செயல் என அனைத்திலும் நேர்மையைக் கடைபிடிப்பது, இந்த இறைவியை மகிழ்விக்கும் வழியாக விளங்குகிறது. ‘அன்னையை நான் சிறப்பாக வழிபடுகிறேன்; அவரது அருள் எனக்கு முழுமையாக இருக்கிறது; எனவே, பிறரை விட நான் உயர்ந்தவன்; எனக்கு ஈடு, இணை இல்லை’ என்றெல்லாம், பெருமை பேசுவது, கர்வம் கொள்வது போன்றவை, இந்த இறைவியின் கோபத்தைத் தான் பெற்றுத் தரும். இதன் விளைவுகள் கடுமையாக இருக்கக் கூடும். எனவே, இவற்றைத் தவிர்ப்பது அவசியம். இது போன்ற நடைமுறைகளைத் தவறாமல் பின்பற்றி, அவரைத் தூய உள்ளத்துடன் உண்மையாக வணங்குபவர்களின் இதயத்தில், அன்னை வாராஹி, மகிழ்ச்சியுடன் குடியேறுவார். தடுக்க வேண்டியதைத் தடுத்து, அளிக்க வேண்டியதை உரிய நேரத்தில் அளித்து, வருங்கால நிகழ்ச்சிகள் குறித்து முறையாக எச்சரித்து, அவரது அருளாசியுடன் நம் வாழ்க்கையை, நன்கு வழி நடத்திச் செல்வார்.

வாராஹி தேவியின்

வாராஹி தேவியின் அருளை உடனடியாக பெறக்கூடிய வாராஹி தேவி இயல்பாகவே உக்கிரமானவள் என்பதால், இந்த அம்மனை வணங்குவதற்கு அனைவருக்குமே மனதில் பயம் இருக்கும். வீட்டில் வாராகி திருவுருவப் படத்தை வைத்து வணங்குவதற்கு அஞ்சுவார்கள். ஆனால் நாம் எல்லோரும் நினைக்கும் அளவிற்கு வாராஹி தேவி கோப குணத்தை கொண்டவள் இல்லை. குழந்தை மனம் கொண்ட வாராஹி தேவியை தன்னலம் பாராமல், கெட்ட எண்ணங்களை மனதில் வைத்துக்கொள்ளாமல் வணங்கினால் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து உதவி செய்யும் தெய்வம் தான் இந்த வாராஹி அம்மன். வாராஹி அம்மனை தொடர்ந்து வழிபட்டு வந்தால் நமக்கு இருக்கும் எப்பேர்பட்ட பெரிய கஷ்டங்கள் கூட, சுலபமாக விரைவாக தீர்ந்துவிடும் என்பது உண்மை. ஆனால் நம்மில் பலர் வாராஹி அம்மனை வழிபடுவது ஆபத்து என்று நினைத்துக் கொண்டிருக்கின்றோம். நிச்சயமாக இல்லை. வாராஹி அம்மன் வேண்டிய வரத்தை, நம் கையில் கொடுக்கும் சக்தி வாய்ந்தவள் என்பதை மறந்துவிடாதீர்கள். நமக்கு காவல் தெய்வமாக நின்று, நம்மை கெட்ட சக்திகளிலிருந்து பாதுகாத்து அருள் பாவிப்பால் என்பதும் உண்மை. வராஹி அம்மனை எப்படி வழிபட்டால் தீராத கஷ்டங்கள் கூட, விரைவாக, சுலபமாக தீர்ந்துவிடும் என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். பொதுவாகவே கிருத்திகை, பூரம், மூலம், ரேவதி இந்த 4 நட்சத்திரங்களை கொண்டவர்கள் வாராஹி அம்மனை மனதார வழிபட்டாலே போதும். அவர்களுக்கு உடனடியாக பலன் கிடைத்துவிடும். இந்த நட்சத்திரம் இல்லாதவர்கள், இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் வாராஹி அம்மனை வழிபடுவது சிறந்தது. நமக்கு இருக்கும் தீராத கஷ்டமாக இருந்தாலும், தீராத நோயாக இருந்தாலும், தீராத மன கஷ்டம், பணக்கஷ்டம், எப்படிப்பட்ட கஷ்டமாக இருந்தாலும் வாராஹி அம்மனை நினைத்து, தலைவாழை இலை விரித்து, அதில் பச்சரிசியை கொட்டி பரப்பி, அதன் மேல் ஒரு தேங்காயை உடைத்து இரண்டுமுடிகளாக வைத்து, அதில் இலுப்ப எண்ணெய் ஊற்றி, சிவப்பு திரி போட்டு, தீபம் ஏற்றினால் போதும். இந்த பரிகாரத்தை உங்கள் வீட்டின் அருகில் வாராஹி அம்மன் கோவில் இருந்தால் அங்கு செய்யலாம். கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே சிறிய வாராகி அம்மன் திருவுருவப் படத்தை வைத்து அதன்முன் செய்து வரலாம். எப்படிப்பட்ட கஷ்டமாக இருந்தாலும் அந்த கஷ்டம் கூடிய விரைவில் நீங்குவதை நீங்கள் கண்கூடாக பார்க்க முடியும். இந்தப் பரிகாரத்தைச் செவ்வாய்க்கிழமை எமகண்ட வேளையில் செய்ய வேண்டும். தொடர்ந்து 5 வாரம் செய்து பாருங்கள். பலனை நிச்சயம் உங்களால் உணர முடியும். வாராஹி அம்மனுக்கு சிவப்பு மலர் மிகவும் விருப்பமானது அதிலும் சிவப்பு தாமரை மிகவும் பிடிக்கும். பஞ்சமி திதி அன்று வராகியை மனதார நினைத்து வழிபடுவது நல்ல பலனைத்தரும். வராகி அம்மனை மாதம்தோறும் வரும் பஞ்சமி திதி அன்று சிவப்பு மலர் சூட்டி, அவளுக்கு பிடித்த பிரசாதத்தை நைவேத்தியமாக செய்து வைத்து தொடர்ந்து வழிபட்டு வந்தால் நம்மை எந்த விதமான கெட்ட சக்தியும் அண்டாது. நம்முடைய வாக்கு வன்மையும், தைரியமும் அதிகரிக்கும். வராகி அம்மனுக்கு பூண்டு கலந்து தோல் நீக்கப்படாத உளுந்து வடை, நவதானிய அடை, மிளகு சேர்த்த வடை, வெண்ணை நீக்காத தயிர்சாதம், நவதானிய அடை தோசை இவைகள் அனைத்தும் மிகவும் பிடிக்கும். இதில் உங்களால் முடிந்த ஏதாவது ஒன்றை நைவேத்தியமாக படைப்பது மிகவும் சிறந்தது. வாராஹி அம்மன் வழிபாட்டில் ஒருபோதும் அடுத்தவர் கெட்டு போக வேண்டும் என்ற எண்ணத்தோடு வழிபடவே கூடாது என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். அனைவரின் நலனுக்காக மட்டுமே வரம் கொடுப்பவள் வராஹியம்மன். தவறான எண்ணத்தோடு வாராஹி அம்மனை வழிபடுவது தண்டனையை நாமே தேடிக் கொள்வதற்கு சமம்.

குலசுந்தரி - சொத்து, கவுரவம் அடைய

ஓம் குலசுந்தர்யை வித்மஹே காமேஸ்வர்யை தீமஹி தன்னோ நித்யஹ் ப்ரசோதயாத்

வாராஹி - நினைத்தது நிறைவேற

ஓம் வராஹமுகி வித்மஹே ஆந்த்ராஸனீ தீமஹி தன்னோ யமுனா ப்ரசோதயாத்