Thursday, October 23, 2014

கலியுகமே சிறந்த யுகம் ஏன் தெரியுமா?

கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என நான்கு யுகங்கள் உள்ளன. கடவுளை அடைய முதல் மூன்று யுகங்களில் தானம், தவம், யாகம்  போன்றவற்றில் ஈடுபட வேண்டியிருந்தது. ஆனால், கலியுகத்தில் கடவுளை அன்புடன் மனதில் நினைத்தாலே போதும் என்ற நிலை இருக்கிறது. இந்த  வகையில் பார்த்தால் கலியுகம் மிகச்சிறந்த யுகமாக திகழ்கிறது.  தான் நினைத்த நேரமெல்லாம் முருகப்பெருமான் நேரில் வந்து காட்சியளித்ததை அ ருணகிரிநாதர், எங்கே நினைப்பினும் அங்கே என் முன் வந்து எதிர் நிற்பனே என்று குறிப்பிடுகிறார். பக்தர் ஒருமுறை நினைத்தால் முருகன் இ ருமுறை தோன்றி அருள்புரிவான் என்பதை, ஒரு கால் நினைக்கின் இருகாலும் தோன்றும் என்கிறார் நக்கீரர். கலியுக தெய்வமான கந்தனை நம்பி க்கையுடன் நினைத்து வணங்கியவருக்கு நினைத்தது நிறைவேறும்.

மேஷம்: ஐப்பசி - மாத ராசி பலன் (18.10.2014 - 16.11.2014)

மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) மங்கல நிகழ்ச்சி!

நட்புக்கு முன்னுரிமை அளிக்கும் மேஷ ராசி அன்பர்களே! 

இந்த மாதம் புதன் நவ.2 வரை நன்மை தர காத்திருக்கிறார். சுக்கிரன் நவ. 13ல் சாதகமான இடத்துக்கு வருகிறார். ராகு மாதம் முழுவதும் நன்மை அளிக்கிறார். 6 ல் இருக்கும் ராகுவால் முயற்சியில் வெற்றி உண்டாகும். பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள். ஆற்றல் மேம்படும்.குடும்பத்தில் மாதத் தொடக்கத்தில் சுப நிகழ்ச்சி சிறப்பாக நடக்கும். நவ.2 க்குள் திருமணம் போன்ற சுபவிஷயம் நல்ல முறையில் கைகூடும். அதன்பின் கணவன் மனைவியிடையே கருத்துவேறுபாடு உருவாகலாம்.

தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். அக். 20 க்குப் பிறகு பெண்கள் வகையில் தொல்லை ஏற்படலாம்.ஒதுங்கி இருக்கவும். நவ. 13க்கு பிறகு நிலைமை சீராகும்.

பணியாளர்களுக்கு சக ஊழியர்கள் உதவிகரமாக செயல்படுவர். புதனால் சிலர் உயர் பதவியை அடைய வாய்ப்புண்டு. நவ. 2 க்கு பிறகு அலைச்சலும். வேலைப்பளுவும் ஏற்படும். விடாமுயற்சி எடுத்தால் கோரிக்கை
நிறைவேறும்.

கலைஞர்கள் தீவிர முயற்சி எடுத்து முன்னேற வேண்டியதிருக்கும். நவ. 3க்குப் பிறகு சுக்கிரன் சாதகமாக காணப்படுவதால் புதிய ஒப்பந்தம் எளிதாக கிடைக்கும். போதிய வருமானம் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் ஓரளவே பலனை எதிர்நோக்கலாம். புகழ் கவுரவத்திற்கு பங்கம் உண்டாகாது.  மாணவர்கள் புதன் சாதகமாக காணப்படுவதால், நற்பலன் காணலாம். ஆசிரியர்களிடம் நன்மதிப்பு பெறுவர். நவ. 2 க்குப் பிறகு சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும்.

விவசாயிகளுக்கு மகசூல் சீராக இருக்கும். அதிகம் உழைக்க வேண்டியிருந்தாலும், அதற்கான வருவாய் கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் எதிர்பார்த்த பலன் கிடைக்காது.  பெண்கள் சிறப்பான நிலை காண்பர். புத்தாடை அணிகலன் கிடைக்க பெறுவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.

நல்ல நாள்: அக். 21, 22, 23, 24, 25, 30, 31, நவ.  1, 2, 3, 6, 7, 10, 11, 12

கவன நாள்:  அக். 26,  27   சந்திராஷ்டமம்  கவனம்

அதிர்ஷ்ட எண்: 7, 8                             நிறம்: நீலம், பச்சை

வழிபாடு: வியாழக்கிழமை தட்சணாமூர்த்தியை வழிபடுங்கள். சூரிய வழிபாடு நன்மை தரும். ஏழைகளுக்கு துவரை தானம் செய்வதோடு வீட்டில் விளக்கேற்றி வழிபடுங்கள்.

Wednesday, October 1, 2014

சரஸ்வதிக்குரிய நட்சத்திரங்கள்!

நவராத்திரியில் நவமியன்று சரஸ்வதி பூஜை நடத்துவர். ஆனாலும், சரஸ்வதியின் ஜென்ம நட்சத்திரமான மூலத்தில் தொடங்கி, பூராடம்,உத்திராடம், திருவோணம் ஆகிய நட்சத்திரங்களிலும் சரஸ்வதியை வழிபடவேண்டும் என்றும் பூஜாவிதி உண்டு. திருவாவடுதுறைஆதீனத்தில், புரட்டாசி மாத மூல நட்சத்திரத்தன்று, ஏட்டுசுவடிகளில் சரஸ்வதியை எழுந்தருளச் செய்யும்வழக்கம் இப்போதும்உள்ளது. இதனால்நான்கு தினங்கள் சரஸ்வதி பூஜை செய்யும்நடைமுறை அந்தகாலத்தில் இருந்ததைஅறிய முடிகிறது.

பத்ரகாளி காளி

பார்வதி பத்து கைகளுடன்,பத்ரகாளியாக பூமியில் அவதரித்த நாளே துர்காஷ்டமி. தேவதைகளுக்கு எல்லாம் தலைவி இவள். துர்காஷ்டமி நாளில் சண்டிஹோமம் நடத்தி காளியை வழிபடுவர். மேற்கு வங்கமாநிலத்திலுள்ள கல்கத்தா காளிபிரசித்தி பெற்றது. ராமகிருஷ்ணபரமஹம்சருக்கு அருள்புரிந்தவளே கல்கத்தா காளி. தட்சிணேஸ்வரம் கோயிலில் அர்ச்சராக பணிபுரிந்தபோது பரமஹம்சர் காளியோடுநேரடியாக உரையாடி பலஅற்புதங்களை நிகழ்த்தியுள்ளார். சக்திபீடங்களில் இக்கோயில் உத்திரசக்தி பீடம் ஆகும். இங்குள்ள சிவன்நகுலீசர் எனப்படுகிறார்.இங்கு தசரா விழா பிரசித்தி பெற்றது. 

வீட்டில் வழிபாட்டிற்காக வைத்த மஞ்சள்பிள்ளையாரை என்ன செய்ய வேண்டும்?

வீட்டில் எந்த வழிபாடு செய்வதாக இருந்தாலும், விசேஷ நிகழ்ச்சிகள் நடத்தினாலும் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வழிபடுவது அவசியம். விநாயகர் வழிபாட்டால் தொடங்கிய செயல் தடையின்றி இனிதே நிறைவேறும் என்பது ஐதீகம். பூஜை முடிந்த மூன்றாம் நாள் வெற்றிலை, பாக்கு சேர்த்து மஞ்சள்பிள்ளையாரையும் ஓடும் ஆற்றிலோ, குளத்திலோ கரைத்து விட வேண்டும் என்பது நியதி. 

சரஸ்வதி 108 போற்றி!

சரஸ்வதி பூஜையன்று மட்டுமல்ல! தினமும் மாலையில் மாணவர்கள்
சொல்ல வேண்டிய போற்றியைத் தந்துள்ளோம். இதைச் சொல்வதால்
கல்வியில் அபிவிருத்தி உண்டாகும். பாடங்கள் மனதில் பதியும்.

ஓம் அறிவின் வடிவே போற்றி
ஓம் அறியாமை நீக்குவாய் போற்றி
ஓம் அபயம் அளிப்பாய் போற்றி
ஓம் அனுபூதி அருள்வாய் போற்றி
ஓம் அட்சமாலை கரத்தாய் போற்றி
ஓம் அறிவின் தலைவியே போற்றி
ஓம் அழகில் அன்னமே போற்றி
ஓம் அளவிலா புகழினாய் போற்றி
ஓம் அன்ன வாகினியே போற்றி
ஓம் அகிலம் காப்பாய் போற்றி
ஓம் ஆசான் வடிவே போற்றி
ஓம் ஆனந்த ரூபினியே போற்றி
ஓம் ஆதார சக்தியே போற்றி
ஓம் ஆயகலை அருள்வாய் போற்றி
ஓம் இகபர சுகம் தருவாய் போற்றி
ஓம் இசை வடிவானாய் போற்றி
ஓம் இளமான் சாயலாய் போற்றி
ஓம் இன்னிசை குயிலே போற்றி
ஓம் ஈகை குணத்தாளே போற்றி
ஓம் ஈடிணை இலாளே போற்றி
ஓம் ஈடேற்றுபவளே போற்றி
ஓம் உண்மைப் பொருளே போற்றி
ஓம் உலகம் உய்விப்பாய் போற்றி
ஓம் எண் எழுத்து ஆனாய் போற்றி
ஓம் எழிலே உருவானாய் போற்றி
ஓம் ஏடு ஏந்தியவளே போற்றி
ஓம் ஏகாந்த ரூபிணியே போற்றி
ஓம் கல்விக்கு வித்தே போற்றி
ஓம் கலைமகள் தாயே போற்றி
ஓம் கலை களஞ்சியமே போற்றி
ஓம் கற்றோர்க்கு இனியாய் போற்றி
ஓம் கரை சேர்ப்பவளே போற்றி
ஓம் கலைவாணி தாயே போற்றி
ஓம் கலைக்கு அரசியே போற்றி
ஓம் கம்பரைக் காத்தாய் போற்றி
ஓம் காட்சிக்கு எளியாய் போற்றி
ஓம் காயத்ரியானவளே போற்றி
ஓம் குருவின் வடிவே போற்றி
ஓம் குறை பொறுப்பாய் போற்றி
ஓம் குணக் குன்று ஆனாய் போற்றி
ஓம் குணம் கடந்தவளே போற்றி
ஓம் குருபரர் நாவில் உறைவாய் போற்றி
ஓம் கூத்தருக்கு அருளினாய் போற்றி
ஓம் கூத்தனுõர் வாழ்பவளே போற்றி
ஓம் சகலகலா வல்லியே போற்றி
ஓம் சரஸ்வதி தாயே போற்றி
ஓம் சதுர்முகன் நாயகியே போற்றி
ஓம் சந்தேகம் தீர்ப்பாய் போற்றி
ஓம் சங்கடம் தவிர்ப்பாய் போற்றி
ஓம் சச்சிதானந்த ரூபமே போற்றி
ஓம் சாரதாம்பிகையே போற்றி
ஓம் சாந்த சொரூபினியே போற்றி
ஓம் சான்றோர் வடிவே போற்றி
ஓம் சித்தம் தெளிவிப்பாய் போற்றி
ஓம் சித்தி அளிப்பாய் போற்றி
ஓம் சுருதி மறை பொருளே போற்றி
ஓம் ஞான வித்யாம்பிகையே போற்றி
ஓம் ஞானேஸ்வரித் தாயே போற்றி
ஓம் ஞாலம் வாழ்விப்பாய் போற்றி
ஓம் ஞான சக்தி வடிவே போற்றி
ஓம் ஞானாசிரியை ஆனாய் போற்றி
ஓம் தவக்கோலத் தாயே போற்றி
ஓம் தஞ்சம் அளிப்பாய் போற்றி
ஓம் தயை மிக்கவளே போற்றி
ஓம் தயாநிதி தருபவளே போற்றி
ஓம் துõய மனத்தினாய் போற்றி
ஓம் நவமி தேவதையே போற்றி
ஓம் நன்னெறி நாயகியே போற்றி
ஓம் நலம் அருள்பவளே போற்றி
ஓம் நாவின் அரசியே போற்றி
ஓம் நான்மறை வித்தகியே போற்றி
ஓம் நாத வெள்ளமே போற்றி
ஓம் நாதாந்த வடிவே போற்றி
ஓம் நிறைவாழ்வு தருவாய் போற்றி
ஓம் நுட்பம் மிக்கவளே போற்றி
ஓம் பக்தர் தம் திலகமே போற்றி
ஓம் பண்ணின் வடிவாய் போற்றி
ஓம் பளிங்கு மனத்தினாய் போற்றி
ஓம் படிக நிறத்தினாய் போற்றி 
ஓம் பாட்டின் இனிமையே போற்றி
ஓம் பாட்டின் பொருளே போற்றி
ஓம் பிரணவப் பொருளே போற்றி
ஓம் பிரம்ம ஞானியே போற்றி
ஓம் பிரம்மன் துணைவியே போற்றி
ஓம் புலமை மிக்கவளே போற்றி
ஓம் பூரண வடிவினளே போற்றி
ஓம் புவனம் காப்பவளே போற்றி
ஓம் புனிதம் மிக்கவளே போற்றி
ஓம் வாக்கில் இருப்பவளே போற்றி
ஓம் வாக்கு தேவதையே போற்றி
ஓம் வித்யாம்பிகையே போற்றி
ஓம் வித்தக ரத்தினமே போற்றி
ஓம் மந்திர வடிவினாய் போற்றி
ஓம் மயக்கம் தீர்ப்பாய் போற்றி
ஓம் முக்காலம் அறிந்தாய் போற்றி 
ஓம் முக்தி அருள்பவளே போற்றி
ஓம் மூல நட்சத்திரத்தாளே போற்றி
ஓம் மேதா ரத்தினமே போற்றி
ஓம் மேன்மை மிக்காய் போற்றி
ஓம் வழித்துணை வருவாய் போற்றி
ஓம் வரம் பல தருவாய் போற்றி
ஓம் வீணை தாங்கியவளே போற்றி
ஓம் வெண்தாமரை உறைவாய் போற்றி
ஓம் வெள்ளாடை உடுத்தாய் போற்றி
ஓம் வித்தகம் அளிப்பாய் போற்றி
ஓம் வேதாந்த நாயகியே போற்றி
ஓம் வேத வடிவானவளே போற்றி
ஓம் வையம் வாழ்விப்பாய் போற்றி