Sunday, October 31, 2010

கருடர் வழிபாடு- சமஸ்க்ருதம்

கருடர் வழிபாடு- சமஸ்க்ருதம்

கருடர் வழிபாடு 


மரணபயத்தை போக்கிட

ஓம் தத்புருஷாய வித்மஹே
சுவர்ணபக்ஷõய தீமஹி
தன்னோ கருடஹ் ப்ரசோதயாத்


ஓம் பக்ஷிராஜாய வித்மஹே
சுவர்ணபக்ஷõய தீமஹி
தன்னோ கருடஹ் ப்ரசோதயாத்


ஓம் தக்ஷபத்ராய வித்மஹே
தனாயுபுத்ராய தீமஹி
தன்னோ கருடஹ் ப்ரசோதயாத்

Thursday, October 28, 2010

விரதங்கள் – 4

குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , ,



முருகனுக்குரிய மூன்று விரதங்களில் (செவ்வாய்க்கிழமை விரதம், கார்த்திகை விரதம், ஷஷ்டி விரதம்) மிகச் சிறந்தது ஸ்கந்த ஷஷ்டி விரதமாகும். ஐப்பசி மாதத்துத் தீபாவளி அமாவாசையை அடுத்த வளர்பிறைப் பிரதமை முதல் ஷஷ்டி ஈறாகவுள்ள ஆறு நாட்கள் ஸ்கந்த ஷஷ்டி விரதம் அனுசரிக்கப்படுகிறது. மாதம் தோறும் ஷஷ்டி திதியிலும் விரதம் இருக்கலாம்.


நல்லூர் கந்தன்


சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் என்பதற்கு “சஷ்டியில் விரதம் இருந்தால் அதன் அருள் அகப் பையில், அதாவது உள்ளத்தில் வரும்” என்பதுதான் உண்மையான பொருள். இவ்விரதம் உடலையும் உள்ளத்தையும் தூய்மைப்படுத்தும் மகத்தான விரதமாகும்.

முதல் நாள் அமாவாசை முதல் தொடர்ந்து ஆறுநாட்களும் அனுசரிக்கப்படும் இவ்விரதத்தில் சிலர் மூன்று வேளையும் உண்ணா நோன்பு இருப்பர். சிலர் பகல் மட்டும் விரதம் இருந்து இரவில் பால், பழம் உண்டு விரதம் மேற் கொள்வர். விரத நன்னாளில் தர்ப்பை அணிந்து சங்கல்பம் செய்துகொண்டு ஆறு நாட்களும் முழு உபவாச விரதமிருந்து இறுதி நாளில் தர்ப்பையை அவிழ்த்து தாம்பூலத் தட்சணையுடன் அர்ச்சகரிடம் அளித்து விரதத்தை நிறைவு செய்பவர்களும் உண்டு. இவர்களில் பலர் முருகன் ஆலயத்திலேயே தங்கி விரதம் இருப்பர். உண்ணா நோன்பு மட்டுமல்லாமல் மௌன விரதம் இருப்போர்களும் உள்ளனர்.

விரத காலத்தில் முருக நாம ஜெபம், கந்த புராணம் படித்தல் நற்பலன் அளிக்கும். ஆறாம் நாள் கந்தஷஷ்டி அன்று துயிலாமல் விழித்திருந்து முருகன் பெருமைகளை நினைந்தும், பேசியும் வழிபடுதல் சிறப்பு. முழு உபவாசம் இருக்க முடியாதவர்கள், கந்த ஷஷ்டி தினத்தில் மட்டுமாவது உபவாசம் இருத்தல் நன்மையைத் தரும். ஏழாம் நாளன்று நீராடி, முருகனை வழிபட்டு வெல்லமும், பச்சைப் பயறும் கலந்து களி செய்து உண்டு விரதத்தை முடிக்கலாம். ஆறு நாள்களும் கந்த புராணத்தை முழுமையாகப் படிக்கலாம். கந்தர் ஷஷ்டிக் கவசம், ஸ்கந்த குரு கவசம், ஷண்முக கவசம் இவற்றைப் பாராயணம் செய்யலாம். திருமுருகாற்றுப்படை, திருப்புகழ், கந்தர் கலிவெண்பா, வேல் மாறல் பதிகம், திருவடித் துதி முதலியவற்றைப் பாராயணம் செய்தலும் சிறப்பு தரும். ஆதிசங்கரர் அருளிய சுப்ரமண்ய புஜங்கத்தை உள்ளன்போடு பாராயணம் செய்ய எண்ணிய காரியம் வெற்றி பெறும்.

விரத பலன்

ஆறு நாள்களும், ஆறு காலங்களும் உண்மையாக முருகனை பூஜித்து வழிபடுவோருக்கு வேண்டு வரம் கிட்டும் என்பது மட்டுமில்லை, முருகனது அருட்காட்சியும் கிடைக்கும். கந்த சஷ்டி விரதத்தை மேற்கொண்டு, வலன் என்ற அசுரனை இந்திரன் அழித்தான் என்பதிலிருந்தே இதன் பெருமையை நாம் தெரிந்து கொள்ளலாம்.

ஓம் றீம் ஐயும் கிலியும் ஔவும் சௌவும் சரஹண பவ

(முற்றும்)
  
   

 

Wednesday, October 27, 2010

விரதங்கள் – 3

குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , ,


கார்த்திகை விரதம்



கார்த்திகை விரதம், முருகனை வளர்த்த கார்த்திகைப் பெண்களை நினைத்து நன்றி செலுத்தும் விதமாக ஏற்படுத்தப் பட்ட ஒன்று என கூறுவர். அதனால்தான் கந்தன் அப்பெண்களின் பெயரால்,  “கார்த்திகேயன்” என அழைக்கப்படுகிறான். மேலும் ஒரு தகவல் உண்டு. சூரபத்மனை அழிக்க வேண்டி தேவர்கள் விரதமிருந்து ஈசனைத் துதித்தனர்.  ஈசன் தமது நெற்றிக் கண்ணைத் திறக்க, அதிலிருந்து ஒளிவடிவில் ஆறு நெருப்புப் பொறிகள் தோன்றி குழந்தையாய் உருமாறியது. அவ்வாறு ஆறுமுகன் அவதரித்த தினமே திருக்கார்த்திகை தினம். இது தவிர இறைவன் திரிபுர சம்ஹாரம் செய்த தினம் கார்த்திகை தினம் என்றும் ஒரு கருத்துண்டு. இக் கார்த்திகை தினத்தில் விரதம் இருப்பவர்களுக்குக் குறைகள் நீங்கி, நல்வாழ்வும், முக்தியும் கிடைக்கும் என்பது ஐதீகம்.



ஷண்முகநாதன்
கார்த்திகை விரதம் பற்றிக் கந்த புராணம்,


 “நுந்தம் பகலிடை இன்னவன் நோன்றாள் வழிபடுவோர்
தந்தம் குறை முடித்துப் பரந்தனை நல்குவம் என்றான்”

 என்கிறது.


தைமாதக் கார்த்திகையை விட ஆடிக் கார்த்திகையே சிறப்பாகச் சொல்லப்படுகிறது. ஆடி மாதத்தில் தொடங்கி ஆறுமாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து தை மாதக் கார்த்திகையில் விரதத்தை முடித்தல் சிறப்பு. முருகப்பெருமானுடைய விரதங்களுள் முக்கியமானது கார்த்திகை விரதம்.


விரத முறைகள்


தை மாதத்திலோ அல்லது முருகனுக்கு உகந்த கார்த்திகை மாதக் கார்த்திகை நட்சத்திரம் முதலாகவோ இவ்விரதத்தைத் துவங்கலாம். முருகனையே துதித்து உபவாசம் இருக்க வேண்டும். இயலாதோர் காலை, பகல் உணவு தவிர்த்து, இரவில் பால், பழம், பலகாரம் உண்ணலாம். 12 வருடங்கள் தொடர்ந்து பக்தியுடனும், உண்மையான நம்பிக்கையுடனும் இவ்விரதத்தை மேற்கொள்பவனுக்கு முருகனின் அருள் காட்சி கிட்டும் என்பது நம்பிக்கை. விரத நாளில் மாலை ஐந்து மணிக்கு மேல் கார்த்திகை நட்சத்திரம் இருக்கும் நாளே சரியான விரத நாள் என்பது இதில் குறிப்பிடத்தக்கது


இவ்விரதம் முருகனுக்கு மட்டுமல்ல சிவபெருமானுக்கும் உகந்தது. அம்பிகை மகிஷாசுரனுடன் போர் புரிந்து அவனைக் கொன்ற போது அவன் கழுத்தில் அணிந்திருந்த சிவலிங்கம் அவள் கையோடு ஒட்டிக் கொண்டு விட்டது. அதனால் ஏற்பட்ட தோஷத்தை நிவர்த்தி செய்ய, கார்த்திகை தினத்தன்று தீபம் ஏற்றி அம்பிகை விரதம் இருந்தாள். அதுவே கார்த்திகை விரதம். அவ்விரதத்துக்கு மகிழ்ந்த ஈசன் அன்னை பார்வதி தேவிக்கு ஒளி உருவில் காட்சி கொடுத்ததுடன், தேவிக்கு இடப்பாகம் கொடுத்து ஏற்றுக் கொண்டதும் இந்த நன்னாளில் தான். அதனால்தான் அண்ணாமலையில் அந்த நாளில் தீபம் ஏற்றப்பட்டு கார்த்திகை விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது


கார்த்திகைக்குக் கார்த்திகை நாள் ஒரு ஜோதி
மலை நுனியில் காட்டா நிற்போம்
வாய்த்து வந்த சுடர்காணில் பசிபிணி இல்
லாது உலகில் மன்னி வாழ்வார்
பார்த்தவர்க்கும் அருந்தவர்க்கும் இடையூறு
தவிரும் இது பணிந்தோர் கண்டோர்
கோத்திரத்தில் இருபத்துஓர் தலைமுறைக்கு
முத்திவரம் கொடுப்போம் என்றார்

கார்த்திகை விரதத்தின் பலன்



முறையாக ஒருவன் விரதம் மேற் கொள்ளும் போது அது வரை செய்த பாபங்கள் நீங்குவதுடன் மகத்தான புண்ணிய பலனும் கிடைக்கும். வாழ்க்கை 
 ஒளிரும். தீவினைகள் அகலும். 

 
என்கிறது அருணாசல புராணம் (பாடல் – 159)


ஓம் சரவண பவ


(தொடரும்) 
 

 

Tuesday, October 26, 2010

விரதங்கள் – 2

குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , ,


வள்ளலார் வலியுறுத்திய ஒரு விரதம்தான் செவ்வாய்க்கிழமை விரதம். ஆனால் இது முழுக்க முழுக்க முருகப்பெருமானுக்குரிய விரதம் என்று கூறி விட இயலாது. வள்ளலார் ஆரம்பத்தில் திருத்தணிகை முருகப் பெருமானைத் தொழுது அவரது காட்சி பெற்றவர் என்பது இங்கே நினைக்கத் தகுந்தது.




 
 
வள்ளலார் இராமலிங்க அடிகளார்
 
 
வள்ளலார் ஆரம்ப காலகட்டத்தில் முருகனைத் தொழுது வணங்கியவர். சுப்ரமணியம் என்பது பற்றி அவர், “ சுப்பிரமணியம் என்பது என்னை? நமது புருவ மத்தியில் உருட்சியாய் ஆறு பட்டையாய் உருட்சியுள்ள ஒரு  மணிப் பிரகாசம் பொருந்தியிருக்கின்றது. இந்த ஜோதி மணியை ஷண்முகமென்று பெரியோர்கள் சொல்லுவார்கள். இதன்றி, நமது மூலாதாரத்திற்கு மேல் மூன்றிடந்தாண்டி விசுத்தியாகிய இருதய ஸ்தானத்தில் இடது புறத்தில் ஆறு தலையுடைய ஒரு நாடி இருக்கின்றது. இதைச் சுப்பிரமணியம் என்று சொல்லுவார்கள். இந்தத் தேகத்திலுள்ள ஆறறிவும் ஒருங்கே சேர்ந்த  சுத்த விவேகமென்பதையும் ஷண்முகம் என்பார்கள்.  ஆறு ஆதாரங்களில் உள்ள ஆறு பிரகாசத்தையும் ஷண்முகம் என்பார்கள். ஆயினும் சர்வ தத்துவங்களினது அந்தத்தில் உள்மணிக்கப்பால் சாந்த நிறைவாயுள்ள ஆறுதலாகிய சுத்த ஆன்ம அறிவான உள்ளமே சுப்பிரமணியம்………”
- என்று சுப்பிரமணிய தத்துவத்தைப் பற்றி விளக்கி இருக்கிறார் வள்ளலார்.


 
 
திருத்தணிகை முருகன்
 
 
 
செவ்வாய்க் கிழமை விரதம் பற்றி அடிகளார் கூறி இருக்கும் குறிப்பு.



“திங்கட்கிழமை இரவில் பலகாரஞ் (பழ ஆகாரம்) செய்து, செவ்வாய்க்கிழமை அருணோதயத்தி லெழுந்து, திருநீறு நெற்றியில் மாத்திரம் அணிந்து, நல்ல நினைப்புடன் அங்கசுத்தி, தந்தசுத்தி முதலானவையுஞ் செய்து கொண்டு, சூரியோதயத்திற்கு முன் ஆசாரமான சுத்த சலத்தில் ஸ்நானஞ் செய்து, விபூதியை சலத்தினால் குழைத்து அனுஷ்டானப்படி தரித்துக் கொண்டு, கண்பதியை நினைத்து , பின்பு ஸ்ரீ பஞ்சாஷரத்தை நூற்றெட்டு முறை சபித்து, பின்பு சிவத்தியானம் செய்து, எழுந்து வாயிலில் வந்து சூரியனைப் பார்த்து ஒம் சிவ சூரியாய நம என்று மெதுவாகச் சொல்லி நமஸ்கரித்து அதன் பின்பு அவ்விடத்தில் தானே நின்று கொண்டு, தங்கள் தங்கள் மனத்திலிருக்கிற கோரிக்கைகளை முடித்துக் கொடுக்க வேண்டுமென்று ஸ்ரீ வயித்தியலிங்கரையும் தையனாயகியையும் முத்துக்குமாரசாமியையும் தியானித்துக் கொண்டு, பின்பு ஔம் வயித்தியநாதாய நம வென்று நூற்றெட்டு, ஆயிரத்தெட்டு இரண்டில் எந்த அளவாவது செபித்து, ஒரு பலம் மிளகு சீலையில் முடிந்து வயித்தியலிங்கார்ப்பணம் என்று ஔரிடத்தில் வைத்து, சிவனடியார் ஒருவர்க்கு உபசாரத்தொடு அமுது படைத்து, பின்பு சுசியொடு பச்சரிசிப் பொங்கல் முதலான புசிப்பை அரையாகாரம் முக்கால் ஆகாரங் கொண்டு, அன்று மாலையில் சிவ தரிசனஞ் செய்து, பாய் சயனம், கொட்டை (தலையணை) முதலாகியவையும் விட்டு, மெழுகிய தரையில் கம்பளம் விரித்துப் படுக்க வேண்டும். சிவ சரித்தரங் கேட்க வேண்டும். செபஞ் செய்துகொண்டிருக்க வேண்டும். சந்தனம், புட்பம், தாம்பூலம், இராகம்,. சுகம், பெருந்தூக்கம் முதலானவையும் விட்டிருக்க வேண்டும். “


-என்று வள்ளலார் குறிப்பிட்டிருக்கிறார்.

இதன் மூலம் வேண்டிய கோரிக்கைகள் இனிது நிறைவேறும் என்பது நம்பிக்கை.


(தொடரும்)   


 
 
 
 

Monday, October 25, 2010

ஸ்ரீ குமாரஸ்தவம்

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய இந்த ஸ்தோத்திரம் நற்பலனை வாரி வழங்க வல்லது.




முருகனும் அவன் அடியாரும்…
 
 
 
ஓம் ஷண்முக பதயே நமோ நம!
ஓம் ஷண்மத பதயே நமோ நம!
ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நம!
ஓம்ஷட்க்ரீட பதயே நமோ நம!
ஓம்ஷட்கோண பதயே நமோ நம!
ஓம் ஷட்கோச பதயே நமோ நம!
ஓம் நவநிதி  பதயே நமோ நம!
ஓம் சுபநிதி  பதயே நமோ நம!
ஓம் நரபதி பதயே நமோ நம!
ஓம் சுரபதி பதயே நமோ நம!
ஓம் நடச்சிவ பதயே நமோ நம!
ஓம் ஷடஷர பதயே நமோ நம!
ஓம் கவிராஜ பதயே நமோ நம!
ஓம் தபராஜ பதயே நமோ நம!
ஓம் இகபர பதயே நமோ நம!
ஓம் புகழ்முநி பதயே நமோ நம!
ஓம் ஜயஜய பதயே நமோ நம!
ஓம் நயநய பதயே நமோ நம!
ஓம் மஞ்சுள பதயே நமோ நம!
ஓம் குஞ்சரி பதயே நமோ நம!
ஓம் வல்லீ பதயே நமோ நம!
ஓம் மல்ல பதயே நமோ நம!
ஓம் அஸ்த்ர பதயே நமோ நம!
ஓம் சஸ்த்ர பதயே நமோ நம!
ஓம் ஷஷ்டி பதயே நமோ நம!
ஓம் இஷ்டி பதயே நமோ நம!
ஓம் அபேத பதயே நமோ நம!
ஓம் கபோத பதயே நமோ நம!
ஓம் வியூஹ பதயே நமோ நம!
ஓம் மயூர பதயே நமோ நம!
ஓம் பூத பதயே நமோ நம!
ஓம் வேத பதயே நமோ நம!
ஓம் புராண பதயே நமோ நம!
ஓம் ப்ராண பதயே நமோ நம!
ஓம் பக்த பதயே நமோ நம!
ஓம் முக்த பதயே நமோ நம!
ஓம் அகார பதயே நமோ நம!
ஓம் உகார பதயே நமோ நம!
ஓம் மகார பதயே நமோ நம!
ஓம் விகாச பதயே நமோ நம!
ஓம் ஆதி பதயே நமோ நம!
ஓம் பூதி பதயே நமோ நம!
ஓம் அமார பதயே நமோ நம!
ஓம் குமார பதயே நமோ நம!
************************
ஓம் சரவண பவ
 

ஷஷ்டி விரதம் - விரதங்கள் – 1





 விரதத்தின் பொருள்


விரதம் என்பதற்கு ஒன்றையே எண்ணி அதில் மனம் லயித்திருத்தல் என்பது பொருள். வரித்தல் என்பதிலிருந்தே விரதம் என்ற சொல் பிறந்தது என்று கூறலாம். வரித்தல் என்பதற்கு கை கொள்ளுதல் அல்லது ஏற்றுக் கொள்ளுதல் என்பது பொருள். உணவு உண்ணாமலிருத்தலும் மிதமாக உணவை உண்பதும் தீயவற்றை நீக்கி நல்லவற்றை உண்பதுமாகிய உணவு நியமமே “விரதம்” என அழைக்கப்படுகிறது. ஆனால் இது விரதத்தின் முதற் நிலை என்றுதான் சொல்ல வேண்டும். இவ்வாறு இருத்தலே முழுமையான விரதம் என்று கூற முடியாது. மனம் அடங்கக் கற்பதே விரதத்தின் முதற்படியாகும். உணவை ஒழித்து இருப்பது விரதம் அல்ல. எண்ணங்களை ஒடுக்கி, சிந்தைகள் ஏதும் இல்லாமல் இருப்பதே ’விரதம்’ என்கிறார் ரமணர். குரங்கு போல் அலைந்து திரியும் மனத்தை அடக்கி நிறுத்தி இறைவன் திருவடியில் நிலைத்திருத்தலே சிறப்பான விரதத்தின் முதற்படி என்று கூறலாம்.


விரதத்தின் பயன்


மனம் ஒடுங்க புலன் ஒடுங்கம். புலன் ஒடுங்க அகம் ஒடுங்கும். அகம் ஒடுங்க, ஆன்ம ஒளி பிரகாசிக்கும். அந்த ஆன்ம ஒளியை அகத்திலே கண்டு தரிசிப்பதே விரதத்தின் பயன். பொறிகள் அடங்க வேண்டுமானால் உணவு ஒடுங்க வேண்டும். “அன்னம் அடங்க அஞ்சும் அடங்கும்” என்பது ஆன்றோர் முது மொழி. அதை உள்ளபடி உணர்ந்து விரதம் இருக்க வேண்டும். இறையருள் பெற முயற்சிக்க வேண்டும்.





முருகனுக்குரிய விரதங்கள் மூன்று. செவ்வாய்க் கிழமை விரதம், கார்த்திகை விரதம், சஷ்டி விரதம் என்பன அவை. சிலர் வெள்ளிக் கிழமை விரதமும் முருகனுக்கு உகந்தது என்று கூறுவர். மிகச் சிறந்தது ஸ்கந்த ஷஷ்டி விரதமாகும்.


 
செவ்வாய்க் கிழமை விரதம்


இவ்விரதத்தை வலியுறுத்திக் கூறியவர் வள்ளலார் இராமலிங்க அடிகள். அடிகளார் உருவ வழிபாட்டை ஒறுத்து, ஜோதி வழிபாட்டையே வலியுறுத்தியவ்ர் என்றாலும், அவர் தனது ஆன்மப் பயணத்தின் ஆரம்ப கட்டத்தில் உருவ வழிபாட்டையே மேற் கொண்டிருந்தார். திருத்தணிகைப் பெருமானையும், கந்த கோட்ட முருகனையும், ஒற்றியூர் வடிவுடை அம்மனையுமே அவர் முதற்கண் வழிபடு கடவுளாகக் கொண்டிருந்தார். தில்லை நடராஜரை தனது தெய்வமாகக் கருதி வழிபட்ட வள்ளலார்தான், பின்னர் அகத்திலே உள்ளொளி பெற்று அரு பெருஞ் சோதி ஆண்டவர் தரிசனம் பெற்று, அனைவருமே அதைக் கண்டு, வழிபட்டு உய்ய அழைத்தார்.


இனி, செவ்வாய்க் கிழமை விரதம்


(தொடரும்)





Thursday, October 14, 2010

ராஜராஜேஸ்வரி வழிபாடு

ராஜராஜேஸ்வரி வழிபாடு- சமஸ்க்ருதம்

(அழியாத ஐஸ்வர்யங்களையும், பதவி உயர்வையும் தரவல்லது)


ஸ்ரீ ராஜராஜேச்வர்யஷ்கம்-ஸ்ரீ தேவி கருமாரி அம்மனுக்கும் பகவதி
ஸ்ரீ சண்டிகா தேவிக்கும் மிகவும் ப்ரியமான ஆனந்த ஸ்தோத்ரம்

ஸ்ரீ ராஜராஜேஸ்வரி தேவியைப் பற்றி எட்டு ஸ்லோகங்களும் அழியா செல்வம், அந்தஸ்து, புகழ், பதவி, நோயற்ற மங்களமான குடும்ப சுகவாழ்வு, உயர்கல்வி ஆகியவைகளை அளிக்கவல்லது. ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகத்தின் தலைப்பே எல்லா கடவுள்களுக்கும் ராணியானவள், சர்வ வல்லமை பொருந்தியவள்,  எல்லா இடத்திலும் வ்யாபித்துள்ளவள் என்று அறிவித்தாலும், எட்டு ஸ்லோகங்களும் அம்பா என்றே ஆரம்பிக்கின்றன. அம்பா என்றால் தாய். எல்லா உலகுக்கும் தாய். அவ்விதமே ஒவ்வொரு ஸ்லோகத்தின் கடைசி பாதம் பார்வதி தேவியை, எல்லோருக்கும் மேம்பட்டவள், சேதாநாரூபீ, சர்வ ஐஸ்வர்யம் படைத்தவள், தேவதைகளுக்கு எல்லாம் ராஜ ராஜேஸ்வரி என்று கூறி முடிகிறது உண்மையில் எல்லா ஸ்லோகங்களும் பார்வதி தேவியின் பல அவதாரங்களைக் குறிப்பவையே.

1. அம்பா சாம்பவி சந்த்ரமௌலி அபலா அபர்ணா உமா பார்வதீ
காளீ ஹைமவதீ சிவா த்ரிநயனீ காத்யாயனீ பைரவீ
ஸாவித்ரீ நவயௌவனா சுபகரீ ஸாம்ராஜ்ய-லக்ஷ்மீ-ப்ரதா
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜராஜேச்வரீ


தாய், சாம்பவி, சந்த்ரமௌளி, அபலா, அபர்ணா, உமா, பார்வதி,காளி, ஹிமவானின் புதல்வி, சிவா, முக்கண்ணளான காத்யாயநீ,  பைரவீ, சாவித்ரீ, புதுப்புது இளமைத்தோற்றம் உடையவர், சுபத்தைத் தருபவள், சாம்ராஜ்ய லக்ஷ்மியை அளிப்பவள். இவளே ஆத்ம ஸவரூபிணீ, பரதேவதை, பகவதீ ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி ஆவாள்.

2. அம்பா மோஹினி தேவதா த்ரிபுவனீ ஆனந்த-ஸந்தாயினீ
வாணீ-பல்லவ-பாணி-வேணு-முரளீ-கானப்ரியா-லோலினீ
கல்யாணீ உடுராஜபிம்ப-வதனா தூம்ராக்ஷ-ஸம்ஹாரிணீ
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜராஜேச்வரீ


இத்தாயே-மோஹிநீ தேவதை, மூவுல காளி, பேரானந்தம் தருபவள், சரஸ்வதி, இளந்தளிர் கைகள் கொண்டவள், புல்லாங்குழல் இசையை  பிரியத்துடன் இசைத்து விளையாடுபவள். மங்களமானவள், சந்த்ர பிம்பம் போல் முகம் உள்ளவள். தூம்பராக்ஷனை வதம் செய்தவள். இவளே ஆத்மஸ்வரூபிணீ, பரதேவதை, பகவதீ ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ஆவாள்

3. அம்பா-நூபுர-ரத்ன-கங்கண-தரீ கேயூர-ஹாராவலீ
ஜாதீ-சம்பக-வைஜயந்தி-லஹரீ-க்ரைவேயகை-ராஜிதா
வீணா-வேணு-விநோத-மண்டித-கரா வீராஸனே ஸம்ஸ்திதா
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜராஜேச்வரீ


இத்தாயே ரத்னத்தால் ஆன சதங்கை, கை வளை, கழுத்தடிகை, பலவித ஹாரமாலைகள், ஜாதி, சம்பக மாலைகள், வைஜயந்தி மாலை, கழுத்து ஆபரணங்கள் ஆகியவைகளை அணிந்துள்ளாள். வீணை, புல்லாங்குழல் இவைகளை மீட்டும் திருக்கை கொண்டவள். வீராஸநத்தில் வீற்றிருப்பவள். இவளே ஆத்ம ஸ்வரூபிணீ, பரதேவதை பகவதீ ஸ்ரீ ராஜராஜேஸ்வரீ ஆவாள்.


4. அம்பா ரௌத்ரிணி பத்ரகாளி பகலா ஜ்வாலாமுகீ வைஷ்ணவீ
ப்ரஹ்மாணீ த்ரிபுராந்தகீ ஸுரநுதா தேதீப்ய மானோஜ்ஜ்வலா
சாமுண்டாச்ரித-ரக்ஷ-போஷ-ஜநநீ தாக்ஷõயணீ வல்லவீ
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜராஜேச்வரீ


இந்தத் தாயானவள் ரௌத்ரிணீ, பத்ரகாளி, தீக்கொழுந்து எரியும் முகம் உள்ள பகலா, வைஷ்ணவி, ப்ரஹ்மாணீ தீரிபுராந்தகீ, தேவர்களால் வணங்கப் பெறுபவள், பளபளக்கும் ஒளிபடைத்தவள், சாமுண்டா, அண்டினவர்களை காப்பாற்றுபவள், அவர்களுக்கு பூஷ்டி அளிக்கும் தாய், தாக்ஷõயணீ, வல்லமை பொருந்தியவள். இவளே ஆத்மஸ்வரூபிணீ, பரதேவதை, பகவதீ ஸ்ரீ ராஜராஜேஸ்வரீ ஆவாள்


5. அம்பா சூல-தனு:-குசாங்குச-தரீ அர்த்தேந்து பிம்பாதரீ
வாராஹீ மதுகைடப-ப்ரசமனீ வாணீ-ரமா-ஸேவிதா
மல்லாத்யாஸுர-மூகதைத்ய-மதனீமாஹேச்வரீ அம்பிகா
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜராஜேச்வரீ


இந்தத் தாயாவனள் சூலம், வில், கதை, அங்குசம் ஆகியவைகளைத் தன் திருக்கைகளில் தரித்தவளாயும், தலையில் அர்த்த சந்த்ரனை உடையவளாகவும் இருப்பவள். வாராஹீ, மதுகைடபர்களை அழித்தவள். சரஸ்வதி, லக்ஷ்மீ இவர்களாலும் துதிக்கப் பெற்றவள், மல்லாதி அசுரர்களையும் மூகாசுரனையும் அழித்தவள். மாஹேச்வரீ, அம்பிகா, இவளே ஆத்மஸ்வரூபிணீ, பரதேவதை, பகவதீ ஸ்ரீ ராஜராஜேஸ்வரீ ஆவாள்.

6. அம்பா ஸ்ருஷ்டி-விநாச-பாலனகரீ ஆர்யா விஸம்சோபிதா
காய்த்ரீ ப்ரணவாக்ஷர அம்ருதரஸ: பூர்ணானுஸந்தீ-க்ருதா
ஓங்காரீ விநதாஸுதார்ச்சித பதா உத்தண்ட-தைத்யாபஹா
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜராஜேச்வரீ


இந்தத் தாயானவள் ஸ்ருஷ்டி-ஸ்திதி, சம்ஹாரங்களைச் செய்பவள் உயர்ந்தவளாக விளங்குபவள். காயத்ரீ, ப்ரணவம் (ஓங்கார எழுத்து) இவைகளின் அம்ருதரஸமானவள், ஓங்காரஸ்வரூபிணீ தேவதைகளால் வணங்கி அர்ச்சிக்கப்படும் திருவடியை உடையவள், அசுரர்களைக் கொல்வதில் முனைப்பாக இருப்பவள். இவளே ஆத்மஸ்வரூபிணீ, பரதேவதை, பகவதீ ஸ்ரீ ராஜராஜேஸ்வரீ ஆவாள்.

7. அம்பா சாச்வத-ஆகமாதி-வினுதா ஆர்யா மஹாதேவதா
யா ப்ரஹ்மாதி-பிபீலிகாந்த-ஜநநீ யா வை ஜகன்மோஹினீ
யா பஞ்சப்ரணவாதி-ரேபஜனனீயா சித்கலா மாலினீ
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜராஜேச்வரீ


இந்தத் தாயானவள் அழியாத தேவங்களால் போற்றப்பட்டவள். உயர்ந்த மஹாதேவதை, சதுர்முக ப்ரஹ்மா முதல் ஈ, எறும்பு வரை எல்லாவற்றையும் படைக்கும் ஜகந்மாதா ஆவாள். சகல ஜகத்தையும் மோஹிப்பிப் பவள். பஞ்சப்ரணவாதிகளை உண்டாக்குபவள், ÷ரபம் எனும் அக்ஷரத்துக்கு மூலமானவள் சித்கலா, மாலினி என்ற பெயர்கள் உடையவள். இவளே ஆத்மஸ்வரூபிணீ, பரதேவதை, பகவதீ ஸ்ரீ ராஜராஜேஸ்வரீ ஆவாள்.

8. அம்பா-பாலித-பக்தராஜ-தனிசம் அம்பாஷ்டகம் ய:படேத்
அம்பா-லோக-கடாக்ஷ வீ÷க்ஷ-லலிதஞ்ச ஐச்வர்யமவ்யாஹதம்
அம்பா பாவன-மந்த்ர-ராஜ-படனா தந்தே ச மோக்ஷ-ப்ரதா
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜராஜேச்வரீ


இந்தத் தாயானவள் பக்தர்களைக் காப்பதில் பற்றுள்ளவள். இவளைப் பற்றிய இந்த அம்பாஷ்டகத்தை எவன் படிக்கிறானோ அவன் அம்பாவின் லீலா விநோத கடைக்கண் பார்வைக்கு இலக்காகி உன்னதமான அழியா நற்செல்வங்களைப் பெறுவான்.மேலும் அம்பாளின் இந்த மந்த்ர ராஜத்தைப் படிப்பவனுக்கு மோக்ஷமளிப்பாள். இவளே ஆத்மஸ்வரூபிணீ, பரதேவதை, பகவதீ ஸ்ரீ ராஜராஜேஸ்வரீ ஆவாள்.


ஸ்ரீ ராஜராஜேச்வர்யஷ்டகம் சம்பூர்ணம் (இந்த ராஜராஜேஸ்வரி அஷ்டகத்தின் பெருமை எட்டாவது ஸ்லோகத்திலேயே சொல்லப்படுகிறது என்பது விசேஷம். எட்டு ஸ்லோகங்கள் உள்ளதால் அஷ்டகம் எனப்படும் அருமருந்தாகிறது.)


      

Wednesday, October 13, 2010

குரு (வியாழன்) வழிபாடு- சமஸ்க்ருதம்

குரு (வியாழன்)  வழிபாடு- சமஸ்க்ருதம்


குரு (வியாழன்) மங்களாஷ்டகம்


ஜீவச்சோத்தர திங்முகோத்தரககுப் ஜாதோங்கிரோ கோத்ரத:
பீதோசவத்த ஸமிச்ச ஸிந்த்வதிபதி: சாபர்க்ஷமீநாதிப:
ஸூர்யேந்து க்ஷிதிஜப்ரிய: ஸிதபுதாராதி: ஸமோ பாநுஜே
ஸப்தாபத்ய தபோர்த்தக: சுபகர: குர்யாத் ஸதா மங்களம்


பொருள்: ஆங்கிரச கோத்ரியும், அரச சமித்தில் விருப்பமுள்ளவரும், தனுசு, மீனங்களின் தலைவரும், வடக்கு முகமாக சதுரபீட மண்டலத்தில் வீற்றிருப்பவருமான குரு மங்களத்தைச் செய்யட்டும்.

Tuesday, October 12, 2010

முருகன் வழிபாடு- தமிழ்

முருகன் வழிபாடு- தமிழ்


முருகன் போற்றி


ஓம் அருவாம் உருவாம் முருகா போற்றி
ஓம் திருவார் மறையின் செம்பொருள் போற்றி
ஓம் ஆறுமுகத்தெம் அரசே போற்றி
ஓம் மாறுகொள் சூரரை வதைத்தாய் போற்றி
ஓம் இருள்கெடுத் தின்பருள் எந்தாய் போற்றி
ஓம் உருள்பூங் கடம்பணி உரவோய் போற்றி
ஓம் ஈசற் இனிய சேயே போற்றி
ஓம் மாசறு திருவடி மலரோய் போற்றி
ஓம் உறுநரத் தாங்கும் உறவோய் போற்றி
ஓம் செறுநர்த் தேய்த்த செவ்வேள் போற்றி

ஓம் ஊனில் ஆவியாய் உயிர்ப்போய் போற்றி
ஓம் கானில் வள்ளியின் கணவ போற்றி
ஓம் எழில்கொள் இன்ப வாரிதி போற்றி
ஓம் அழிவிலாக் கந்தனாம் அண்ணல் போற்றி
ஓம் ஏறு மயிலூர்ந் தேகுவாய் போற்றி
ஓம் கூறு மன்பர்க்குக் குழைவாய் போற்றி
ஓம் ஐயனாய் உலகை ஆக்குவாய் போற்றி
ஓம் செய்ய மேனியனே தேவே போற்றி
ஓம் ஒருவனாய் உலகெலாம் ஒளிர்வாய் போற்றி
ஓம் பருவம் முதிராப் பண்பே போற்றி 



ஓம் ஓவற இமைக்கும் ஒளியே போற்றி
ஓம் மாமுதல் தடிந்த மறவ போற்றி
ஓம் ஒளவியம் அறுத்தோர்க் கருள்வாய் போற்றி
ஓம் தெய்வம் எல்லாந்தொழும் செய்யாய் போற்றி
ஓம் அஃகுதல் அற்றார் விளக்கே போற்றி
ஓம் கந்தா மணமார் கடம்பா போற்றி
ஓம் நந்தா விளக்கே நாயக போற்றி
ஓம் காப்பாய் படைப்பாய் கழிப்பாய் போற்றி
ஓம் மூப்பீறற்ற முதல்வா போற்றி
ஓம் முத்தமிழ் முதல்வனே போற்றி  


ஓம் கள்ளப் புலனைக் களைவாய் போற்றி
ஓம் கீழறும் அடியர் கிழிவோய் போற்றி
ஓம் ஏழல குந்தொழும் இறைவா போற்றி
ஓம் குன்றும் குழைதோட் குமர போற்றி
ஓம் என்றும் இளைய ஏறே போற்றி
ஓம் கூம்புகைத் தேவர் கோவே போற்றி
ஓம் பாம்பணி சிவனார் பாலக போற்றி
ஓம் கெண்டைக் கண்ணியர் கேள்வ போற்றி
ஓம் அண்டினர்க் கருளும் அங்கண போற்றி
ஓம் கேடில் முருகனாய்க் கிளர்ந்தாய் போற்றி


ஓம் வீடில் வீடருள் விமல போற்றி 
ஓம் கைவேல் கொண்ட காவல போற்றி
ஓம் நைவேற் கருள்வாய் நாயக போற்றி
ஓம் கொடைக் கடன்கொண்ட குழக போற்றி
ஓம் படைக்கடல் தலைவ பரனே போற்றி
ஓம் கோதில் அமிழ்தே குருமணி போற்றி
ஓம் போதில் அமர்ந்த பொன்னே போற்றி
ஓம் சிவபிரான் கண்வரு சேயே போற்றி
ஓம் நவசர வணத்தில் நகர்ந்தாய் போற்றி
ஓம் அறுவுரு அமைந்தே ஆடினாய் போற்றி


ஓம் அறுமீன் பாலுண் அமர போற்றி
ஓம் உருவுமை சேர்க்க உற்றாய் போற்றி
ஓம் பெருமை பிறங்கு பெரியோய் போற்றி
ஓம் நான் முகனைச் சிறை நாட்டினாய் போற்றி
ஓம் மான்மகள் வள்ளியை மணந்தாய் போற்றி
ஓம் செங்கண் கடாவைச் செலுத்தினாய் போற்றி
ஓம் அங்கண் குறிஞ்சிக் கரசே போற்றி
ஓம் இறைவனுக் கரும்பொருள் இசைத்தாய் போற்றி
ஓம் மறையிடைப் பொருளாய் வளர்ந்தாய் போற்றி
ஓம் பரங்குன்றமர்ந்த பரம்பர போற்றி 


ஓம் திருச்செந்தில் வளர் சேவக போற்றி
ஓம் ஆவினன்கு குடி ஆண்டாய் போற்றி
ஓம் மேவி ஏரகம்வாழ் மிக்கவ போற்றி
ஓம் குன்று தோறாடும் குழந்தாய் போற்றி
ஓம் துன்று பழமுதிர் சோலையாய் போற்றி
ஓம் திசைமுகம் விளக்கும் செம்முக போற்றி
ஓம் இசைபெரு வேள்வி இனமுக போற்றி
ஓம் செங்களம் ஓர்க்கும் திருமுருக போற்றி
ஓம் மங்கல மான வானவ போற்றி
ஓம் வள்ளிபால் நகைகொள் மாமுக போற்றி 


  ஓம் திங்களின் ஒளிரும் சீர்முக போற்றி
ஓம் ஆர்வலர் ஏத்த அருள்முக போற்றி
ஓம் சிர்வளர் அழகின் செல்வா போற்றி
ஓம் மணிமுடி புனையாறணி முடி போற்றி
ஓம் துணையடி தொழுவார்க் கணைவாய் போற்றி
ஓம் செவியீராறுடைச் செம்மால் போற்றி
ஓம் கவித்தொடை புனைதோட் கந்தா போற்றி
ஓம் பன்னிரு கண்ணுடைப் பண்ணவ போற்றி
ஓம் என்னிரு கண்ணின் இலகுவோய் போற்றி
ஓம் பொருவில் ஒருவனாம் புலவ போற்றி 



ஓம் அருணகிரிக்குக் கருள் அமல போற்றி
ஓம் நக்கீரற் கருள் நாதா போற்றி
ஓம் தக்க சங்கத்தமிழ் தந்தாய் போற்றி
ஓம் குமர குருபரற் கருளினை போற்றி
ஓம் அமரர் அறிஞர்களை அளியோய் போற்றி
ஓம் பந்த பாசங்களைப் பறிப்போய் போற்றி
ஓம் கந்தபுரி வாழ்வுகந்தோய் போற்றி
ஓம் தெய்வானை யம்மையைச் சேர்ந்தோய் போற்றி
ஓம் பொய்யிலா மனத்துட் புகுவோய் போற்றி
ஓம் கோழி வெல்கொடிக் கோவே போற்றி 


ஓம் ஊழி தோறூழி உள்ளாய் போற்றி
ஓம் செய்யாய் சிவந்த ஆடையாய் போற்றி
ஓம் மெய் யெலாம் வெண்ணீறணிவோய் போற்றி
ஓம் மேவலர் மடங்காலம் விசாக போற்றி
ஓம் மூவர்கள் போற்றும் முத்த போற்றி
ஓம் தேவர்கள் சிறைமீள் சீர்வலாய் போற்றி
ஓம் சேவலும் மயிலும் சேர்த்தோய் போற்றி
ஓம் போர்மிகு பொருந புரவல போற்றி
ஓம் ஏர்மிகு இளஞ்சேய் எம்மிறை போற்றி
ஓம் தாரகற் கொன்ற தாழ்விலாய் போற்றி 


ஓம் பாரகம் அடங்கலும் பரவுவோய் போற்றி
ஓம் தமிழ்மொழி இன்பில் தழைப்பாய் போற்றி
ஓம் அமிழ்திற் குழைத்த அழகா போற்றி
ஓம் கல்வியும் செல்வமும் களித்தருள் போற்றி
ஓம் பல்வகை வளனும் பணித்தருள் போற்றி
ஓம் இன்பார் இளைய ஏந்தால் போற்றி
ஓம் என்பால் அருள்புரி என்றும் போற்றி
ஓம் தமிழுக்குரிய பண்ணே போற்றி  
      

Monday, October 11, 2010

குபேரன் வழிபாடு - சமஸ்க்ருதம்

குபேரன் வழிபாடு - சமஸ்க்ருதம்

குபேரன் வழிபாடு

செல்வங்கள் நிலையாக இருக்க

ஓம் யக்ஷராஜாய வித்மஹே
வைஸ்ரவணாய தீமஹி
தன்னோ குபேர ப்ரசோதயாத்

Friday, October 8, 2010

துர்கா வழிபாடு- சமஸ்க்ருதம்

                                                  துர்கா வழிபாடு- சமஸ்க்ருதம்

துர்கா வழிபாடு- சமஸ்க்ருதம்      
ஸர்வ மங்கல மாங்கல்ய சிவே ஸர்வார்த்த ஸாதிகே
சரண்யே த்ரியம்பகே கௌரி நாராயணி நமோஸ்துதே


சரணாகத தீணார்த்த பரித்ராண பராயணே
ஸர்வஸ்யார்த்தி ஹரே தேவி நாராயணி நமோஸ்துதே


ஸர்வஸ்வரூபே ஸர்வேச ஸர்வசக்தி ஸமன்விதே
பயேப்யஸ் திராஹி நோ தேவி துர்க்கே தேவி நமோஸ்துதே.


துர்கா கவசம்


1. ச்ருணு தேவி ப்ரவக்ஷ்யாமி கவசம் ஸர்வஸித்திதம்
படித்தவா பாடயித்வா சநரோ முச்யேத ஸங்கடாத்


2. அஜ்ஞாத்வா கவசம் தேவி துர்கா மந்த்ரம் சயோஜயேத்
ஸநாப்நோதி பலம் தஸ்ய பாஞ்ச நரகம் வ்ரஜேத்


3. உமாதேவீ சிர: பாது லலாடே சூலதாரிணீ
சக்ஷúஷீகேசரீ பாது கர்ணௌ சத்வதர வாஸிநீ


4. ஸுகந்தா நாஸிகே பாது வத நம் ஸர்வதாரிணீ
ஜிஹ்வாஞ்ச சண்டிகாதேவீக்ரீவாம் ஸெளபத்ரிகாததா


5. அசோக வாஸிநீ சேதோ த்வெள பாஹூ வஜ்ரதாரிணீ
ஹ்ருதயம் லலிதா தேவீ உதரம் ஸிம்ஹவாஹிநீ


6. கடிம்பகவதீ தேவீ த்வாவூரு விந்த்ய வாஸிநீ
மஹா பலாச ஜங்க்வே த்தே பாதௌ பூதவாஸிநீ


7. ஏவம் ஸ்திதாஸி தேவி த்வம்த்ரைலோக்யேரக்ஷணாத்மிகா
ரக்ஷமாம் ஸர்வகாத்ரேஷுதுர்கே தேவீ நமோஸ்துதே.


துர்கா அஷ்டோத்ரம்


ஓம் தேவ்யை நம
ஓம் துர்காயை நம
ஓம் த்ரிபுவநேச்வர்யை நம
ஓம் யசோதா கர்பஸப்பூதாயை நம
ஓம் நாராயண வரப்ரி யாயை நம
ஓம் நந்த கோப குல ஜாதாயை
ஓம் மங்கல்யாயை நம
ஓம் குலவர்த்திந்யை நம
ஓம் கம்ஸ வித்ராவண கர்யை
ஓம் அஸுரக்ஷயங்கர்யை நம


ஓம் சிலா தட விநிக்ஷிப் தாயை நம
ஓம் ஆகாசகாமிந்யை நம
ஓம் வாஸுதேவ பகிந்யை நம
ஓம் திவ்யமால்ய விபூஷிதாயை நம
ஓம் திவ்யாம்பரதராயை நம
ஓம் கட்க கேடக தாரிண்யை நம
ஓம் சிவாயை நம
ஓம் பாப தாரிண்யை நம
ஓம் வரதாயை நம
ஓம் கிருஷ்ணாயை நம


ஓம் குமார்யை நம
ஓம் ப்ரஹ்ம சாரிண்யை நம
ஓம் பாலார்க ஸத்ருசாகா ராயை நம
ஓம் பூர்ண சந்த்ரநிபாந நாயை நம
ஓம் சதுர் புஜாயை நம
ஓம் சதுர் வக்த்ராயை நம
ஓம் பீந ச்ரோணி பயோத ராயை நம
ஓம் மயூர பிச்ச வலயாயை நம
ஓம் கேயூராங்கத தாரிண்யை நம
ஓம் க்ருஷ்ணச்சவிஸமாயை நம


ஓம் க்ருஷ்ணாயை ஸங்கர்ஷண ஸமாந நாயை நம
ஓம் இந்த்ரத்வஜ ஸம நம
ஓம் பாஹுதாரிண்யை நம
ஓம் பாத்ர தாரிண்யை நம
ஓம் பங்கஜ தாரிண்யை நம
ஓம் கண்டா தாரிண்யை நம
ஓம் பாச தாரிண்யை நம
ஓம் தநுர் தாரிண்யை நம
ஓம் மஹா சக்ர தாரிண்யை நம
ஓம் விவிதாயுத தராயை நம


ஓம் குண்டல பூர்ண கர்ண விபூஷிதாயை நம
ஓம் சப்ந்ர விஸ்பர்திமுக விராஜிதாயை நம
ஓம் முகுடவிராஜி தாயை நம
ஓம் சிகிபிச்ச த்வஜ விராஜிதாயை நம
ஓம் கௌமார வ்ரத தராயை நம
ஓம் த்ரிதிவ பாவயிர்த்யை நம
ஓம் த்ரிதச பூஜிதாயை நம
ஓம் த்ரை லோக்ய ரக்ஷிண்யை நம
ஓம் மஹிஷாஸுர நாசிந்யை நம
ஓம் ப்ரஸந் நாயை நம


ஓம் ஸுரச்ரேஷ்டாயை நம
ஓம் சிவாயை நம
ஓம் ஜயாயை நம
ஓம் விஜயாயை நம
ஓம் ஸங்க்ராம ஜயப்ரதாயை நம
ஓம் வரதாயை நம
ஓம் விந்திய வாஸிந்யை நம
ஓம் காளயை நம
ஓம் காள்யை நம
ஓம் மஹாகாள்யை நம


ஓம் ஸீதுப்ரியாயை நம
ஓம் மாம்ஸப்பிரியாயை நம
ஓம் பசு ப்ரியாயை நம
ஓம் பூதா நுஸ்ருதாயை நம
ஓம் வரதாயை நம
ஓம் காமசாரிண்யை நம
ஓம் பாப பரிண்யை நம
ஓம் கீர்த்யை நம
ஓம் ச்ரியை நம
ஓம் த்ருத்யை நம



ஓம் ஸித்த்யை நம
ஓம் ஹரியை நம
ஓம் வித்யாயை நம
ஓம் ஸந்தத்யை நம
ஓம் மத்யை நம
ஓம் ஸந்த்யாயை நம
ஓம ரார்த்யை நம
ஓம் ப்ரபாயை நம
ஓம் நித்ராயை
ஓம் ஜயோத்ஸ்நாயை நம


ஓம் காந்த்யை நம
ஓம் க்ஷமாயை நம
ஓம் தயாயை நம
ஓம் பந்தந நாசிந்தை நம
ஓம் மோஹ நாசிந்யை நம
ஓம் புத்ராப ம்ருத்யுநாசிந்யை நம
ஓம் தநக்ஷய நாசிந்யை நம
ஓம் வ்யாதி நாசிந்யை நம
ஓம் ம்ருத்யு நாசிந்யை நம
ஓம் பய நாசிந்யை நம


ஓம் பத்ம பத்ராக்ஷ்யை நம
ஓம் துர்காயை நம
ஓம் சரண்யாயை நம
ஓம் பக்த வத்ஸலாயை நம
ஓம் ஸெளக்யதாயை நம
ஓம் ஆரோக்ய தாயை நம
ஓம் ராஜ்ய தாயை நம
ஓம் ஆயுர் தாயை நம
ஓம் வபுர் தாயை நம
ஓம் ஸுத தாயை நம


ஓம் ப்ரவாஸ ரக்ஷிகாயை நம
ஓம் நகர ரக்ஷிகாயை நம
ஓம் ஸங்க்ராம ரக்ஷிகாயை நம
ஓம் சத்ருஸங்கட ரக்ஷிகாயை நம
ஓம் அடா வீதுர்க காந்தார ரக்ஷிகாயை நம
ஓம் ஸாகர கிரி ரக்ஷிகாயை நம
ஓம் ஸர்வ கார்ய ஸித்தி ப்ரதாயி காயை நம
ஓம் துர்கா பரமேச்வர்யை நம

Tuesday, October 5, 2010

கிருஷ்ணன் வழிபாடு (சமஸ்க்ருதம்)

கிருஷ்ணன் வழிபாடு (சமஸ்க்ருதம்)


கிருஷ்ணாஷ்டோத்தரம்
ஓம் ஸ்ரீ கிருஷ்ணாய நம
ஓம் கமலாநாதாய நம
ஓம் வாஸுதேவாய நம
ஓம் ஸநாதனாய நம
ஓம் வஸுதேவாத்மாஜாய நம
ஓம் புண்யாய நம
ஓம் லீலா மானுஷவிக்ரஹாய நம
ஓம் ஸ்ரீ வத்ஸ கௌஸ்துப தராய நம
ஓம் யசோதா வத்ஸலாய நம
ஓம் ஹரயே நம

ஓம் சதுர்புஜாத்த சக்ராஸி நம
ஓம் கதாஸங்காத்யுதாயுதாய நம
ஓம் தேவகீ நந்தனாய நம
ஓம் ஸ்ரீ சாய நம
ஓம் ஸ்ரீநந்தகோபப்ரியாத் மஜாய நம
ஓம் யமுஞ வேகஸம் ஹாரிணே நம
ஓம் பலபத்ர ப்ரியானு ஜாய நம
ஓம் பூதனா ஜீவித ஹராய நம
ஓம் சகடாஸுர பஞ்ஜனாய நம
ஓம் நந்தவ்ரஜ ஜனாநந்தினே நம
ஓம் ஸச்சிதானந்த விக்ரஹாய நம


ஓம் நவனீத விலிப்தாங் காய நம
ஓம் நவனீத நடாய நம
ஓம் அனகாய நம
ஓம் நவனீத நவாஹாராய நம
ஓம் முககுந்த ப்ரஸாதகாய நம
ஓம் ÷ஷாடசஸ்த்ரீ ஸஹஸ்ரேஸாய நம
ஓம் த்ரி பங்கிநே நம
ஓம் லலிதா க்ருதயே நம
ஓம் ஸுகவாக ம்ருதாப் தீந்தவே நம
ஓம் கோவிந்தாய நம


ஓம் யோகினாம் பதயே நம
ஓம் வத்ஸவாட சராய நம
ஓம் அனந்தாய நம
ஓம் தேனுகாஸுர மர்தனாய நம
ஓம் திருணீக்ருத த்ருணாவர்தாய நம
ஓம் யமனார்ஜுன பஞ்ஜனாய நம
ஓம் உத்தாலதால பேத்ரே
ஓம் தமால ஸ்யாமலாக்ருதியே நம
ஓம் கோப கோபீஸ்வராய நம
ஓம் யோகினே நம


ஓம் கோடி ஸூர்யஸமப்ரபாய நம
ஓம் இளபதயே நம
ஓம் பரஸ்மை ஜ்யோதிஷே நம
ஓம் யாதவேந்த்ராய நம
ஓம் யதூத்வஹாய நம
ஓம் வனமாலினே நம
ஓம் பீத வாஸஸே நம
ஓம் பாரி ஜாதா பஹாரகாய நம
ஓம் கோவர்த்தனாசலோத்தர்த்ரே நம
ஓம் கோபாலாய நம


ஓம் ஸர்வபாலகாய நம
ஓம் அஜாய நிரஞ்ஜனாய நம
ஓம் காம ஜனகாய நம
ஓம் கஞ்ஜ லோசனாய நம
ஓம் மதுக்னே நம
ஓம் மதுர நாதாய நம
ஓம் த்வாரகா நாய காய நம
ஓம் பலினே நம
ஓம் ப்ருந்தாவனாந்தஸஞ் சாரிணே நம
ஓம் துளஸீதாம பூஷணாய நம


ஓம் ஸ்யமந்தகமணேர் ஹர்த்ரே நம
ஓம் நர நாராயணாத் மகாய நம
ஓம் குப்ஜா க்ருஷ்ணாம் பரதராய நம
ஓம் மாயினே நம
ஓம் பரம புருஷாய நம
ஓம் முஷ்டிகாஸுர சாணூர மல்ல நம
ஓம் யுத்த விஸார தாய நம
ஓம் ஸம்ஸார வைரிணே நம
ஓம் கம்ஸாரயே நம
ஓம் முராரயே நம
ஓம் நர காந்த காய நம


ஓம் அனாதி ப்ரஹ்மசாரிணே நம
ஓம் க்ருஷ்ணா வ்யஸன கர்ஸகாய நம
ஓம் சிசுபால ஸுரஸ் சேத்ரே நம
ஓம் துர்யோதன குலாந்தகாய நம
ஓம் விதுராக்ரூர வரதாய நம
ஓம் விஸ்வ ரூப ப்ரதர்ஸகாய நம
ஓம் ஸத்யவாஸே நம
ஓம் ஸத்ய ஸங்கல்பாய நம
ஓம் ஸத்யபாமாரதாய நம
ஓம் ஜாயினே நம


ஓம் ஸுபத்ரா பூர்வஜாயே நம
ஓம் விஷ்ணவே நம
ஓம் பீஷ்மமுக்திப்ரதாயகாய நம
ஓம் ஜகத்குருவே நம
ஓம் ஜகன்னாதாய நம
ஓம் வேணுநாத விஸாரதாய நம
ஓம் வ்ருஷபாஸுர நம
ஓம் வித்வம்ஸினே நம
ஓம் பாணா ஸுரபலாந்த காய நம
ஓம் யதிஷ்டிர ப்ரதிஷ்ட டாத்ரே நம

ஓம் பர் ஹிபர் ஹாவதம்ஸகாயே நம


ஓம் பார்த்த ஸாரதபே நம
ஓம் அவ்யக்தாய நம
ஓம் கீதாம்ருத மஹோததயே நம
ஓம் காளீய பண மாணிக்ய நம
ஓம் ரஞ்ஜித ஸ்ரீ பதாம்புஜாய நம
ஓம் தாமோதராய நம
ஓம் யஜ்ஞபோக்த்ரே நம
ஓம் தான வேந்த்ர வினாஸகாய நம
ஓம் நாராயணாய நம
ஓம் பரப்ரஹ்மணே நம


ஓம் பந்னகாஸன நம
ஓம் ஜலக்ரீட ஸமாஸக்த கோபீ நம
ஓம் வஸ்த்ராபஹாரகாய நம
ஓம் புண்யஸ்லோகாய நம
ஓம் வேதவேத்யாய நம
ஓம் தயாநிதயே நம
ஓம் தீர்த்தபாதாய நம
ஓம் ஸர்வ பூதாத்மகாய நம
ஓம் ஸர்வ க்ரஹரூபிணே நம
ஓம் பராத் பராய நம
நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி.
      

Monday, October 4, 2010

முருகன் வழிபாடு - காயத்ரி மந்திரங்கள்

முருகன் வழிபாடு - சமஸ்க்ருதம்

காயத்ரி மந்திரங்கள்

(குஜதோஷம் தீர (செவ்வாய் தோஷம்)


1. ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹாசேனாய தீமஹி
தன்னோ ஷண்முகஹ் ப்ரசோதயாத் 


2. ஓம் புஜங்கேசாய வித்மஹே
உரகேசாய தீமஹி
தன்னோ நாகஹ் ப்ரசோதயாத்


3. ஓம் கார்திகேயாய வித்மஹே
வள்ளீநாதாய தீமஹி
தன்னோ ஸ்க்ந்தஹ் ப்ரசோதயாத்


4. ஓம் மஹாசேனாய வித்மஹே
ஷடானனாய தீமஹி
தன்னோ ஸ்கந்தஹ் ப்ரசோதயாத்


5. ஓம் தத்புருஷாய வித்மஹே
சிகித்வஜாய தீமஹி
தன்னோ ஸ்க்ந்தஹ் ப்ரசோதயாத்


6. ஓம் ஷடாணனாய வித்மஹே
சக்திஹஸ்தாய தீமஹி
தன்னோ ஸ்க்ந்தஹ் ப்ரசோதயாத்


7. ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹாசேனாய தீமஹி
தன்னோ ஸ்க்ந்தஹ் ப்ரசோதயாத்

கந்தர் சஷ்டி கவசம்

கந்தர் சஷ்டி கவசம் 


(தேவராய சுவாமிகள் அருளிய கவசம் இது. அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகப்பெருமான் மீது பாடப்பெற்ற கவசம். 

இதனை ஆறுமுகக் கடவுள் முன்பு அல்லது அறுகோணச் சக்கரத்தின் முன் பாராயணம் செய்வது நற்பலன் தரும். பிரம்மா, விஷ்ணு, சிவன், சரஸ்வதி, லெட்சுமி ஆகிய ஆறு சக்திகளும் இணைந்து ஒரே சக்தியாக-சண்முகனாக விளங்குகின்றார். சஷ்டி அன்றும் செவ்வாய்க் கிழமையிலும் இக்கவசம் படிக்க பலன் அதிகமாகும். வம்ச விருத்தி, காரிய வெற்றிக்கு, சஷ்டியன்று காலையிலும், நோய் நிவர்த்தி, கிரகதோஷ நிவர்த்திக்கு செவ்வாய்க்கிழமை மாலையிலும் படிக்க விரைவில் பலன் கிடைக்கும். இது சமஷ்டிக் கோலப் பாராயணமானதால் அறிவு, செல்வம், வம்ச விருத்தி, வெற்றித் திறன் ஆகியவை படிப்பவர் விரும்பிக் கேட்டாலும் கேளாது இருந்தாலும் தானே அருளும் அரிய கவசம் ஆகும். 


சஷ்டிக் கவசத்தை கந்தசஷ்டி விரத நாட்களில் ஒருநாளைக்கு 36 தடவை வீதம் ஆறு நாட்களில் 216 தடவை கூறினால் குழந்தை பாக்கியம் நிச்சயம் கிடைக்கும் என்பதும், நினைத்த காரியம் நடக்கும் என்பதும் ஐதீகம்.


இதைத் தான் சட்(ஷ்)டியில் இருந்தால் அகப்பை(கருப்பை)யில் தானே வரும் என்று பழமொழியாக கூறுகிறார்கள்)

திருச்செந்தூர் - கந்தர் சஷ்டி கவசம்
 
காப்பு

நேரிசை வெண்பா


துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சிற்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் - கதித்தோங்கும்
நிஷ்டையுங் கைகூடும் நிமலரருள்
கந்தர் சஷ்டிகவசந் தனை.


குறள் வெண்பா

அமர ரிடர்தீர அமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி.




சஷ்டியை நோக்கச் சரவண பவனார்
சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன்
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண்கிணி யாட
மைய நடஞ்செயும் மயில்வா கனனார்
கையில்வே லாலெனைக் காக்கவென் றுவந்து
வரவர வேலாயுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக
இந்திரன் முதலா எண்திசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக


வாசவன் மருகா வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக
ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக
சரவண பவனார் சடுதியில் வருக
ரஹண பவச ரரரர ரரர
ரிஹண பவச ரிரிரிரி ரிரிரிரி
விணபவ சரஹண வீரா நமோநம
நிபவ சரஹண நிறநிற நிறென


வசர ஹணபக வருக வருக
அசுரர் குடிகெடுத்த ஐயா வருக
என்னை யாளும் இளையோன் கையில்
பன்னிரண் டாயுதம் பாசாங் குசமும்
பரந்த விழிகள் பன்னிரண் டிலங்க
விரைந்தெனைக் காக்க வேலோன் வருக
ஐயுங் கிலியும் அடைவுடன் சௌவும்
உய்யொளி சௌவும் உயிரையுங் கிலியும்
கிலியும் சௌவும் கிளரொளி யையும்
நிலைபெற் றென்முன் நித்தமும் ஒளிரும்


சண்முகன் தீயும் தனியொளி யொவ்வும்
குண்டலி யாஞ்சிவ குகன்தினம் வருக
ஆறு முகமும் அணிமுடி ஆறும்
நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச்செவ் வாயும்
நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்
ஈராறு செவியில் இலகுகுண் டலமும்
ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்
பல்பூ ஷணமும் பதக்கமுந் தரித்து
நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்


முப்புரி நூலும் முத்தணி மார்பும்
செப்பழ குடைய திருவயி றுந்தியும்
துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்
நவரத்னம் பதித்த நற்சீ ராவும்
இருதொடை யழகும் இணைமுழந் தாளும்
திருவடி யதனில் சிலம்பொலி முழங்க
செககண செககண செககண செகண
மொகமொக மொகமொக மொகமொக மொகென
நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண


ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டகுடிகு டங்கு டிங்குகு
விந்து விந்து மயிலோன் நிந்து
முந்து முந்து முருகவேள் முந்து
என்றனை யாளும் ஏரகச் செல்வ
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும்
லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலா விநோதனென்று


உன்றிரு வடியை உறுதியென் றெண்ணும்
என்றலை வைத்துன் இணையடி காக்க
என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பாலனைக் காக்க
அடியேன் வதனம் அழகுவேல் காக்க
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வே லிரண்டு கண்ணினைக் காக்க
விதிசெவி இரண்டும் வேலவர் காக்க
நாசிக ளிரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க



முப்பத் திருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க
கன்ன மிரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங் கழுத்தை இனிய வேல் காக்க
மார்பை யிரத்ந வடிவேல் காக்க
சேரிள முலைமார் திருவேல் காக்க
வடிவேலிருதோள் வளம்பெறக் காக்க
பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழுபதி னாறும் பருவேல் காக்க


வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடை யழகுறச் செவ்வேல் காக்க
நாணாங் கயிற்றை நல்வேல் காக்க
ஆண்பெண் குறிகளை அயில்வேல் காக்க
பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க
வட்டக் குதத்தை வல்வேல் காரக்க
பணைத்தொடை யிரண்டும் பருவேல் காக்க
கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க
ஐவிர லடியிணை அருள்வேல் காக்க
கைகளிரண்டும் கருணைவேல் காக்க


முன்கை யிரண்டும் முரண்வேல் காக்க
பின்கை யிரண்டும் பின்னவள் இருக்க
நாவிற் சரஸ்வதி நற்றுணை யாக
நாபிக் கமலம் நல்வேல் காக்க
முப்பா னாடியை முனைவேல் காக்க
எப்பொழு தும்எனை எதிர்வேல் காக்க
அடியேன் வசனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனகவேல் காக்க
வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க
அரையிருள் தன்னில் அனையவேல் காக்க


ஏமத்திற் சாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க
காக்க காக்க  கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க
தாக்க தாக்க தடையறத் தாக்க
பார்க்க பார்க்க பாவம் பொடிபட
பில்லி சூனியம் பெரும்பகை யகல
வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள்
அல்லற் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்


கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரமராட் சதரும்
அடியேனைக் கண்டால் அலறிக் கலங்கிட
இரிசி காட்டேரி இத்துன்ப சேனையும்
எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும்
கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும்
விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக் காரரும் சண்டா ளர்களும்
என்பெயர் சொலவும் இடிவிழுந் தோடிட
ஆனை யடியினில் அரும்பா வைகளும்


பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்
பாவைகளுடனே பலகலசத்துடன்
மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டிய செருக்கும் ஒட்டிய பாவையும்
காசும் பணமும் காவுடன் சோறும்
ஓதுமஞ் சனமும் ஒருவழிப் போக்கும்
அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
காலதூ தாளெனைக் கண்டாற் கலங்கிட


அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட
வாய்விட் டலறி மதிகெட் டோடப்
படியினின் முட்டப் பாசக் கயிற்றால்
கட்டுட னங்கம் கதறிடக் கட்டு
கட்டி யுருட்டு கால்கை முறியக்
கட்டு கட்டு கதறிடக் கட்டு
முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட
செக்கு செக்கு செதில்செதி லாக
சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு
குத்து குத்து கூர்வடி வேலால்


பற்று பற்று பகலவன் தணலெரி
தணலெரி தணலெரி தணலது வாக
விடுவிடு வேலை வெருண்டது ஓடப்
புலியும் நரியும் புன்னரி நாயும்
எலியும் கரடியும் இனித்தொடர்ந் தோடத்
தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம்
ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க
ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்
வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம்


சூலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு
குடைச்சல் சிலந்தி குடல்விப் பிரிதி
பக்கப் பிளவை படர்தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
பற்குத் தரணை பருவரை யாப்பும்
எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்
நில்லா தோட நீயெனக் கருள்வாய்
ஈரே ழுலகமும் எனக்குற வாக
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா
மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாக


உன்னைத் துதிக்க உன்றிரு நாமம்
சரவண பவனே சைலொளி பவனே
திரிபுர பவனே திகழொளி பவனே
பரிபுர பவனே பவமொழிப் பவனே
அரிதிரு மருகா அமரா பதியைக்
காத்து தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய்
கந்தா குகனே கதிர்வே லவனே
கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை
இடும்பனை யழித்த இனியவேல் முருகா
தணிகா சலனே சங்கரன் புதல்வா


கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா
பழநிப் பதிவாழ் பால குமாரா
ஆவினன் குடிவாழ் அழகிய வேலா
செந்தில்மா மலையுறும் செங்கல்வ ராயா
சமரா புரிவாழ் சண்முகத் தரசே
காரார் குழலாள் கலைமகள் நன்றாய்
என்நா விருக்க யானுனைப் பாட
எனைத்தொடர்ந் திருக்கும் எந்தை முருகனைப்
பாடினேன் ஆடினேன் பரவச மாக
ஆடினேன் நாடினேன் ஆவினன் பூதியை


நேச முடன்யான் நெற்றியி லணியப்
பாச வினைகள் பற்றதுநீங்கி
உன்பதம் பெறவே உன்னரு ளாக
அன்புட னிரட்சி அன்னமும் சொன்னமும்
மெத்தமெத் தாக வேலா யுதனார்
சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க
வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க
வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன்


வாழ்க வாழ்க வாரணத் துவசம்
வாழ்க வாழ்கவென் வறுமைகள் நீங்க
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை யடியேன் எத்தனை செயினும்
பெற்றவன் நீகுரு பொறுப்ப துன்கடன்
பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே
பிள்ளையென் றன்பாய்ப் பிரியம் அளித்து
மைந்தனென் மீதுன் மனமகிழ்ந் தருளித்
தஞ்சமென் றடியார் தழைத்திட அருள்செய்
கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய


பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக்
காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
ஆசா ரத்துடன் அங்கந் துலக்கி
நேச முடனொரு நினைவது வாகிக்
கந்தர் சஷ்டிக் கவச மிதனைச்
சிந்தை கலங்காது தியானிப்பவர்கள்
ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு
ஓதியே செபித்து உகந்துநீ றணிய
அட்டதிக் குள்ளோ ரடங்கலும் வசமாய்த்
திசைமன்ன ரெண்மர் சேர்ந்தங் கருளுவர்


மாற்றல ரெல்லாம் வந்து வணங்குவர்
நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்
நவமத னெனவும் நல்லெழில் பெறுவர்
எந்த நாளுமீ ரெட்டாய் வாழ்வர்
கந்தர்கை வேலாங் கவசத் தடியை
வழியாய்க் காண மெய்யாய் விளங்கும்
விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்
பொல்லா தவரைப் பொடிபொடி யாக்கும்
நல்லோர் நினைவில் நடனம் புரியும்
சர்வ சத்துரு சங்கா ரத்தடி


அறிந்தென துள்ளம் அஷ்டலட் சுமிகளில்
வீரலட் சுமிக்கு விருந்துண வாகச்
சூரபத் மாவைத் துணித்தகை யதனால்
இருபத் தேழ்வர்க் குவந்தமு தளித்த
குருபரன் பழனிக் குன்றினி லிருக்கும்
சின்னக் குழந்தை சேவடி போற்றி
எனைத்தடுத் தாட்கொள என்றென துள்ளம்
மேவிய வடிவுறும் வேலவ போற்றி
தேவர்கள் சேனா பதியே போற்றி
குறமகள் மனமகிழ் கோவே போற்றி


திறமிகு திவ்விய தேகா போற்றி
இடும்பா யுதனே இடும்பா போற்றி
கடம்பா போற்றி கந்தா போற்றி
வெட்சி புனையும் வேளே போற்றி
உயர்கிரி கனக சபைக்கோ ரரசே
மயில்நட மிடுவோய் மலரடி சரணம்


சரணம் சரணம் சரவண பவஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்
  

Friday, October 1, 2010

அம்மன் வழிபாடு

அம்மன் வழிபாடு


அம்மன் போற்றி


ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி
ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி
ஓம் அருமறையின் வரம்பே போற்றி
ஓம் அறம் வளர்க்கும் அம்மையே போற்றி
ஓம் அரசிளங்குமரியே போற்றி
ஓம் அப்பர்பிணி மருந்தே போற்றி
ஓம் அமுத நாயகியே போற்றி
ஓம் அருந்தவ நாயகியே போற்றி
ஓம் அருள்நிறை அம்மையே போற்றி
ஓம் ஆலவாய்க் கரசியே போற்றி
ஓம் ஆறுமுகத்தின் அன்னையே போற்றி
ஓம் ஆதியின் பாதியே போற்றி
ஓம் ஆலால சுந்தரியே போற்றி
ஓம் ஆனந்தவல்லியே போற்றி
ஓம் இளவஞ்சிக் கொடியே போற்றி
ஓம் இமயத்தரசியே போற்றி
ஓம் இடபத்தோன் துணையே போற்றி
ஓம் ஈசுவரியே போற்றி
ஓம் உயிர் ஓவியமே போற்றி
ஓம் உலகம்மையே போற்றி
ஓம் ஊழிவினை தீர்ப்பாய் போற்றி
ஓம் எண்திசையும் வென்றோய் போற்றி
ஓம் ஏகன் துணையே போற்றி
ஓம் ஐங்கரன் அன்னையே போற்றி
ஓம் ஐயம் தீர்ப்பாய் போற்றி
ஓம் ஒப்பிலா அமுதே போற்றி
ஓம் ஓங்கார சுந்தரியே போற்றி
ஓம் கற்றோர்க் கினியோய் போற்றி
ஓம் கல்லோர்க்கும் எளியோய் போற்றி
ஓம் கடம்பவன சுந்தரியே போற்றி
ஓம் கல்யாண சுந்தரியே போற்றி
ஓம் கனகமணிக் குன்றே போற்றி
ஓம் கற்பின் அரசியே போற்றி
ஓம் கருணையூற்றே போற்றி
ஓம் கல்விக்கு வித்தே போற்றி
ஓம் கனகாம்பிகையே போற்றி
ஓம் கதிரொளிச் சுடரே போற்றி
ஓம் கற்பனை கடந்த கற்பகமே போற்றி
ஓம் காட்சிக்கினியோய் போற்றி
ஓம் காலம் வென்ற கற்பகமே போற்றி
ஓம் கிளியேந்திய கரத்தோய் போற்றி
ஓம் குலச்சிறை காத்தோய் போற்றி
ஓம் குற்றம் பொறுக்கும் குணமே போற்றி
ஓம் கூடற்கலாப மயிலே போற்றி
ஓம் கோலப் பசுங்கிளியே போற்றி
ஓம் சம்பந்தன் ஞானத்தாயே போற்றி
ஓம் சக்தி வடிவே போற்றி
ஓம் சங்கம் வளர்த்தாய் போற்றி
ஓம் சிவகாம சுந்தரியே போற்றி
ஓம் சித்தம் தெளிவிப்பாய் போற்றி
ஓம் சிவயோக நாயகியே போற்றி
ஓம் சிவாநந்த வல்லியே போற்றி
ஓம் சிங்கார வல்லியே போற்றி
ஓம் செந்தமிழ் தாயே போற்றி
ஓம் செல்வத்துக்கரசியே போற்றி
ஓம் சேனைத் தலைவியே போற்றி
ஓம் சொக்கர் நாயகியே போற்றி
ஓம் சைவநெறி நிலைக்கச் செய்தோய் போற்றி
ஓம் ஞானாம்பிகையே போற்றி
ஓம் ஞானப் பூங்கோதையே போற்றி
ஓம் தமிழர் குலச்சுடரே போற்றி
ஓம் தண்டமிழ்த் தாயே போற்றி
ஓம் திருவுடையம்மையே போற்றி
ஓம் திசையெல்லாம் புரந்தாய் போற்றி
ஓம் திரிபுர சுந்தரியே போற்றி
ஓம் திருமலை நாயகியே போற்றி
ஓம் தீந்தமிழ்ச் சுவையே போற்றி
ஓம் தெவிட்டாத தெள்ளமுதே போற்றி
ஓம் தென்னவன் செல்வியே போற்றி
ஓம் தேன்மொழியம்மையே போற்றி
ஓம் தையல்நாயகியே போற்றி
ஓம் நற்கனியின் சுவையே போற்றி
ஓம் நற்றவத்தின் கொழுந்தே போற்றி
ஓம் நல்ல நாயகியே போற்றி
ஓம் நீலாம்பிகையே போற்றி
ஓம் நீதிக்கரசியே போற்றி
ஓம் பக்தர்தம் திலகமே போற்றி
ஓம் பழமறையின் குருந்தே போற்றி
ஓம் பரமானந்தப் பெருக்கே போற்றி
ஓம் பண்ணமைந்த சொல்லே போற்றி
ஓம் பவளவாய்க் கிளியே போற்றி
ஓம் பல்லுயிரின் தாயே போற்றி
ஓம் பசுபதி நாயகியே போற்றி
ஓம் பாகம் பிரிய அம்மையே போற்றி
ஓம் பாண்டிமாதேவியின் தேவே போற்றி
ஓம் பார்வதி அம்மையே போற்றி
ஓம் பிறவிப்பிணி தீர்ப்பாய் போற்றி
ஓம் பெரிய நாயகியே போற்றி
ஓம் பொன் மயிலம்மையே போற்றி
ஓம் பொற்கொடி அன்னையே போற்றி
ஓம் மலையத்துவசன் மகளே போற்றி
ஓம் மங்கல நாயகியே போற்றி
ஓம் மழலைக் கிளியே போற்றி
ஓம் மனோன் மணித் தாயே போற்றி
ஓம் மண் சுமந்தோன் மாணிக்கமே போற்றி
ஓம் மாயோன் தங்கையே போற்றி
ஓம் மாணிக்க வல்லியே போற்றி
ஓம் மீனவர்கோன் மகளே போற்றி
ஓம் மீனாட்சி அம்மையே போற்றி
ஓம் முழுஞானப் பெருக்கே போற்றி
ஓம் முக்கண் சுடர் விருந்தே போற்றி
ஓம் யாழ் மொழியம்மையே போற்றி
ஓம் வடிவழகம்மையே போற்றி
ஓம் வேலனுக்கு வேல் தந்தோய் போற்றி
ஓம் வேத நாயகியே போற்றி
ஓம் வையகம் வாழ்விப்பாய் போற்றி
ஓம் அம்மையே அம்பிகையே போற்றி
ஓம் அங்கையற்கண் அம்மையே போற்றி போற்றி



திருவிளக்கு வழிபாடு


ஓம் பொன்னும் மெய்ப்பொருளும் தருவாய் போற்றி
ஓம் போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி
ஓம் முற்றறிவு ஒளியாய் மிளிர்ந்தாய் போற்றி
ஓம் மூவுலகும் நிறைந்திருந்தாய் போற்றி
ஓம் வரம்பில் இன்பமாய் வளர்ந்திருந்தாய் போற்றி
ஓம் இயற்கையாய் அறிவொளி ஆனாய் போற்றி
ஓம் ஈரேழுலகும் ஈன்றாய் போற்றி
ஓம் பிறர் வயமாகா பெரியோய் போற்றி
ஓம் பேரின்பப் பெருக்காய் பொலிந்தாய் போற்றி
ஓம் பேரருட் கடலாம் பொருளே போற்றி
ஓம் முடிவில் ஆற்றல் உடையாய் போற்றி
ஓம் மூவூலகுந் தொழ மூத்தோய் போற்றி
ஓம் அளவிலாச் செல்வம் தருவாய் போற்றி
ஓம் ஆனந்த அறிவொளி விளக்கே போற்றி
ஓம் எனும் பொருளாய் உள்ளோய் போற்றி
ஓம் இருள் கெடுத்து இன்பருள் ஈந்தாய் போற்றி
ஓம் மங்கள நாயகியே மாமணி போற்றி
ஓம் வளமை நல்கும் வல்லியே போற்றி
ஓம் அறம் வளர்நாயகி அம்மையே போற்றி
ஓம் மின் ஒளியம்மையாம் விளக்கே போற்றி
ஓம் மண் ஒளிப்பிழம்பாய் வளர்ந்தாய் போற்றி
ஓம் தையல் நாயகித் தாயே போற்றி
ஓம் தொண்டர் அகத்தமர் தூமணி போற்றி
ஓம் முக்கட் சுடரின் முதல்வி போற்றி
ஓம் ஒளிக்குள் ஒளியாய் உயர்வாய் போற்றி
ஓம் சூளாமணியே சுடரொளி போற்றி
ஓம் இருள் ஒளித்து இன்பமும் ஈவோய் போற்றி
ஓம் அருள் மொழிந்து எம்மை ஆள்வாய் போற்றி
ஓம் அறிவினுக்கு அறிவாய் ஆனாய் போற்றி
ஓம் இல்லக விளக்காம் இறைவி போற்றி

ஓம் சுடரே விளக்காம் தூயாய் போற்றி
ஓம் இடரைக் களையும் இயல்வினாய் போற்றி
ஓம் இடரைக் களையும் இயல்பினாய் போற்றி
ஓம் எரிசுடராய் நின்ற இறைவி போற்றி
ஓம் ஞானச் சுடர் விளக்காய் நின்றாய் போற்றி
ஓம் அருமறைப் பொருளாம் ஆதி போற்றி
ஓம் தூண்டு சுடரனைய ஜோதி போற்றி
ஓம் ஜோதியே போற்றி சுடரே போற்றி
ஓம் ஓதும் உள்ஒளி விளக்கே போற்றி
ஓம் இருள் கெடுக்கும் இல்லக விளக்கே போற்றி
ஓம் சொல்லக விளக்காம் ஜோதி போற்றி
ஓம் பலா காண் பல்லக விளக்கே போற்றி
ஓம் நல்லக நமசிவாய விளக்கே போற்றி
ஓம் உவப்பிலா ஒளிவளர் விளக்கே போற்றி
ஓம் உணர்வு சூழ் கடந்தோர் விளக்கே போற்றி
ஓம் உடம்பெனும் மனையக விளக்கே போற்றி
ஓம் உள்ளத் தகளி விளக்கே போற்றி
ஓம் உயிரெணும் திரிமயக்கு விளக்கே போற்றி
ஓம் இடர்படும் ஞானத்தீ விளக்கே போற்றி
ஓம் நோக்குவார்க்கு எரிகொள் விளக்கே போற்றி
ஓம் ஆதியாய் நடுவுமாகும் விளக்கே போற்றி
ஓம் அளவிலா அளவுமாகும் விளக்கே போற்றி
ஓம் ஜோதியாய் உணர்வுமாகும் விளக்கே போற்றி
ஓம் தில்லைப் பொதுநட விளக்கே போற்றி
ஓம் கற்பனை கடந்த ஜோதி போற்றி
ஓம் கருணை உருவாம் விளக்கே போற்றி
ஓம் அற்புத கோல விளக்கே போற்றி
ஓம் அருமறைச் சிரத்து விளக்கே போற்றி
ஓம் சிற்பர வியோம விளக்கே போற்றி
ஓம் பொற்புடன் நடஞ்செய் விளக்கே போற்றி
ஓம் உள்ளத் திருளை ஒழிப்பாய் போற்றி
ஓம் கள்ளப் புலனைக் கரைப்பாய் போற்றி
ஓம் உருகுவோர் உள்ளத்து ஒளியே போற்றி
ஓம் பெருகுஅருள் சுரக்கும் பெரும போற்றி
ஓம் இருள்சேர் இருவினை எறிவாய் போற்றி
ஓம் அருவே உருவே அருவுருவே போற்றி
ஓம் நந்தா விளக்கே நாயகி போற்றி
ஓம் செந்தாமரைத் தாள் தந்தாய் போற்றி
ஓம் தீப மங்கள ஜோதி போற்றி
ஓம் மதிப்பவர் மாமணி விளக்கே போற்றி
ஓம் பாகம் பிரியா பராபரை போற்றி
ஓம் ஆகம முடிமேல் அமர்ந்தாய் போற்றி
ஓம் ஏகமும் நடஞ்செய் எம்மான் போற்றி
ஓம் ஊழி ஊழி உள்ளோய் போற்றி
ஓம் ஆழியான் காணா அடியோய் போற்றி
ஓம் ஆதியும் அந்தமும் அற்றாய் போற்றி
ஓம் அந்தமில் இன்பம் அருள்வாய் போற்றி
ஓம் முந்தை வினையை முடிப்போய் போற்றி
ஓம் பொங்கும் கீர்த்தி பூரண போற்றி
ஓம் தன்னருள் சுரக்கும் தாயே போற்றி
ஓம் அருளே உருவாய் அமைந்தோய் போற்றி
ஓம் இருநில மக்கள் இறைவி போற்றி
ஓம் குருவென ஞானம் கொடுப்போய் போற்றி
ஓம் ஆறுதல் எமக்கிங் களிப்போய் போற்றி
ஓம் தீதெல்லாம் தீர்க்கும் திருவே போற்றி
ஓம் பக்தியில் ஆழ்ந்த பரமே போற்றி
ஓம் எத்திக்குந் துதி ஏய்ந்தாய் போற்றி
ஓம் அஞ்சலென் றருளும் அன்பே போற்றி
ஓம் தஞ்சமென் றவரைச் சார்வோய் போற்றி
ஓம் ஓதுவார் அகத்துறை ஒளியே போற்றி
ஓம் ஓங்காரத் துள்ளொழி விளக்கே போற்றி
ஓம் எல்லா உலகமும் ஆனாய் போற்றி
ஓம் பொல்லா வினைகள் அறுப்பாய் போற்றி
ஓம் புகழ் சேவடி என்மேல் வைத்தோய் போற்றி
ஓம் செல்வாய செல்வம் தருவாய் போற்றி
ஓம் பூங்கழல் விளக்கே போற்றி போற்றி
ஓம் உலகம் உவப்புற வாழ்வருள் போற்றி
ஓம் உயிர்களின் பசிப்பிணி ஒளித்தருள் போற்றி
ஓம் செல்வம் கல்வி சிறப்பருள் போற்றி
ஓம் நல்லன்பு ஒழுக்கம் நல்குவாய் போற்றி
ஓம் விளகிட்டார்க்கு மெய்நெறி விளக்குவாய் போற்றி
ஓம் நலம் எலாம் உயிர்க்கு நல்குக போற்றி
ஓம் தாயே நின்னருள் தந்தாய் போற்றி
ஓம் தூய நின்திருவடி தொழுதனம் போற்றி
ஓம் போற்றி என்பார் அமரர் விளக்கே போற்றி
ஓம் போற்றி என்பார் மனிதர் விளக்கே போற்றி
ஓம் போற்றி என் அன்புபொலி விளக்கே போற்றி
ஓம் போற்றி போற்றி திருவிளக்கே போற்றி



திருமகள் வழிபாடு


ஓம் திருவே போற்றி
ஓம் திருவளர் தாயே போற்றி
ஓம் திருமாலின் தேவி போற்றி
ஓம் திருவெலாம் தருவாய் போற்றி
ஓம் திருத்தொண்டர் மணியே போற்றி
ஓம் திருப்புக முடையாய் போற்றி
ஓம் திருஞான வல்லி போற்றி
ஓம் திருவருட் செல்வி போற்றி
ஓம் திருமால் மகிழ்வாய் போற்றி
ஓம் திருமார்பி லமர்ந்தாய் போற்றி
ஓம் தினமெமைக் காப்பாய் போற்றி
ஓம் தீப சோதியே போற்றி
ஓம் தீதெலாம் தீர்ப்பாய் போற்றி
ஓம் தூப சோதியே போற்றி
ஓம் துயரந்தீர்த் தருள்வாய் போற்றி
ஓம் திருப்பாற் கடலாய் போற்றி
ஓம் தருவழு தருள்வாய் போற்றி
ஓம் அன்னையே அருளே போற்றி
ஓம் அழகெலாம் உடையாய் போற்றி
ஓம் அயன்பெறு தாயே போற்றி
ஓம் அறுமுகன் மாமி போற்றி
ஓம் அமரர்குல விளக்கே போற்றி
ஓம் அமரேசன் தொழுவாய் போற்றி
ஓம் அன்பருக் கினியாய் போற்றி
ஓம் அண்டங்கள் காப்பாய் போற்றி
ஓம் ஆனந்த வல்லியே போற்றி
ஓம் ஆருயிர்க் குயிரே போற்றி
ஓம் ஆவிநல் வடிவே போற்றி
ஓம் ஆக்கம தருள்வாய் போற்றி
ஓம் இச்சை கிரியை போற்றி
ஓம் இருள்தனைக் கடிவாய் போற்றி
ஓம் இன்ப பெருக்கே போற்றி
ஓம் இகபர சுகமே போற்றி
ஓம் ஈகையின் பொலிவே போற்றி
ஓம் எங்குமே நிறைந்தாய் போற்றி
ஓம் எண்குண வல்லி போற்றி
ஓம் ஓங்கார சக்தி போற்றி
ஓம் ஒளிமிகு தேவி போற்றி
ஓம் கற்பக வல்லி போற்றி
ஓம் காமரு தேவி போற்றி
ஓம் கனக வல்லியே போற்றி
ஓம் கருணாம் பிகையே போற்றி
ஓம் குத்து விளக்கே போற்றி
ஓம் குலமகள் தொழுவாய் போற்றி
ஓம் மங்கல விளக்கே போற்றி
ஓம் மங்கையர் தொழுவாய் போற்றி
ஓம் தூங்காத விளக்கே போற்றி
ஓம் தூயவர் தொழுவாய் போற்றி
ஓம் பங்கச வல்லி போற்றி
ஓம் பாவலர் பணிவாய் போற்றி
ஓம் பொன்னி அம்மையே போற்றி
ஓம் புலவர்கள் புகழ்வாய் போற்றி
ஓம் நாரணன் நங்கையே போற்றி
ஓம் நாவலர் துதிப்பாய் போற்றி
ஓம் நவரத்தின மணியே போற்றி
ஓம் நவநிதி நீயே போற்றி
ஓம் அஷ்டலக் குமியே போற்றி
ஓம் அறம்பொருள் தருவாய் போற்றி
ஓம் ஆதிலட்சுமியே போற்றி
ஓம் ஆணவம் அறுப்பாய் போற்றி
ஓம் கஜலட்சுமியே போற்றி
ஓம் கள்ளமும் கரைப்பாய் போற்றி
ஓம் தைரியலட் சுமியே போற்றி
ஓம் தயக்கமும் தவிர்ப்பாய் போற்றி
ஓம் தனலட் சுமியே போற்றி
ஓம் தனதானியம் தருவாய் போற்றி
ஓம் விஜயலட் சுமியே போற்றி
ஓம் வெற்றியைத் தருவாய் போற்றி
ஓம் வரலட் சுமியே போற்றி
ஓம் வரமெலாம் தருவாய் போற்றி
ஓம் முத்துலட் சுமியே போற்றி
ஓம் முத்தியை அருள்வாய் போற்றி
ஓம் மூவேந்தர் தொழுவாய் போற்றி
ஓம் முத்தமிழ் தருவாய் போற்றி
ஓம் கண்ணேஎம் கருத்தே போற்றி
ஓம் கவலையை ஒழிப்பாய் போற்றி
ஓம் விண்ணேஎம் விதியே போற்றி
ஓம் விவேகம் தருள்வாய் போற்றி
ஓம் பொன்னேநன் மணியே போற்றி
ஓம் போகம தருள்வாய் போற்றி
ஓம் பூதேவி தாயே போற்றி
ஓம் புகழெலாம் தருவாய் போற்றி
ஓம் சீதேவி தாயே போற்றி
ஓம் சிறப்பெலாம் அருள்வாய் போற்றி
ஓம் மதிவதன வல்லி போற்றி
ஓம் மாண்பெலாம் தருவாய் போற்றி
ஓம் நித்திய கல்யாணி போற்றி
ஓம் நீதிநெறி அருள்வாய் போற்றி
ஓம் கமலக் கன்னி போற்றி
ஓம் கருத்தினி லமர்வாய் போற்றி
ஓம் தாமரைத் தாளாய் போற்றி
ஓம் தவநிலை அருள்வாய் போற்றி
ஓம் கலைஞானச் செல்வி போற்றி
ஓம் கலைஞருக் கருள்வாய் போற்றி
ஓம் அருள்ஞானச் செல்வி போற்றி
ஓம் அறிஞருக் கருள்வாய் போற்றி
ஓம் எளியவர்க் கருள்வாய் போற்றி
ஓம் ஏழ்மையைப் போக்குவாய் போற்றி
ஓம் வறியவர்க் கருள்வாய் போற்றி
ஓம் வறுமையை ஒழிப்பாய் போற்றி
ஓம் வேத வல்லியே போற்றி
ஓம் வேட்கையைத் தணிப்பாய் போற்றி
ஓம் பெரியோர்க் கருள்வாய் போற்றி
ஓம் நல்லவர்க் கருள்வாய் போற்றி
ஓம் அடியவர்க் கருள்வாய் போற்றி
ஓம் அனைத்துமே ஆனாய் போற்றி
ஓம் அருள்இலக் குமியே போற்றி
ஓம் மகாலட்சுமியே போற்றி போற்றி




கலைமகள் வழிபாடு

ஓம் அறிவினுக் கறிவாய் ஆனாய் போற்றி
ஓம் செறிஉயிர் நாத்தொறும் திகழ்வோய் போற்றி
ஓம் ஆட்சிகொள் அரசரும் அழியாய் போற்றி
ஓம் காட்சிசேர் புலவர்பல் கனிவோய் போற்றி
ஓம் இல்லக விளக்கம் இறைவி போற்றி
ஓம் நல்லக மாந்தரை நயப்பாய் போற்றி
ஓம் ஈரமார் நெஞ்சினர் இடந்தோய் போற்றி
ஓம் ஆரமார் தொடையால் அணிவோய் போற்றி
ஓம் உலகியல் நடத்தும் ஒருத்தி போற்றி
ஓம் அலகில் உயர்கிறி வளிப்போய் போற்றி
ஓம் ஊனமில் வெள்ளை உருவினாய் போற்றி
ஓம் கானக் குயில்மொழிக் கன்னியே போற்றி
ஓம் எண்ணிலாப் புகழுடை எந்தாய் போற்றி
ஓம் பண்ணியல் தமிழின் பாவாய் போற்றி
ஓம் ஏழுல குந்தொழும் இறைவி போற்றி
ஓம் சூழுநல் அன்பரின் துணைத்தாய் போற்றி
ஓம் ஐதுசேர் வெண்கலை ஆடையாய் போற்றி
ஓம் மைதீர் முத்து மாலையாய் போற்றி
ஓம் ஒட்டக் கூத்தர்க் குதவினோய் போற்றி
ஓம் வட்டவெண் தாமரை வாழ்வோய் போற்றி
ஓம் ஓம் ஓதுவார் அகத்துறை ஒளியே போற்றி
ஓம் போதுசேர் அருட்கண் பொற்கொடி போற்றி
ஓம் ஒளைவைமூ தாட்டியாய் ஆனாய் போற்றி
ஓம் கௌவையே இல்லாக் கலைமகள் போற்றி
ஓம் கல்விக் கரசே கலைக்கடல் போற்றி
ஓம் நல்விற் புருவ நங்காய் போற்றி
ஓம் செங்கையில் புத்தகம் சேர்த்தாய் போற்றி
ஓம் அங்கையில் படிகம் அடக்கியோய் போற்றி
ஓம் சமை குண் டிகைக்கைத் தாயே போற்றி
ஓம் அமைவுகொள் ஞான அருட்கையாய் போற்றி
ஓம் அஞ்சலென் றருள்தரும் அன்னே போற்றி
ஓம் மடமறு நான்முகன் வாழ்வே போற்றி
ஓம் திடமுறு செந்தமிழ்த் தெளிவே போற்றி
ஓம் கண்கண்ட தெய்வக் கண்மனி போற்றி
ஓம் பண்கண்ட பாவிற் படர்ந்தனை போற்றி
ஓம் தந்தையும் தாயுமாய்த் தீழைப்போய் போற்றி
ஓம் மைந்தரோ டொக்கலாய் வளர்வோய் போற்றி
ஓம் நல்லோர் சொற்படி நடப்போய் போற்றி
ஓம் பல்லோர் பரவும் பனுவலோய் போற்றி
ஓம் மன்னரும் வணங்க வைப்போய் போற்றி
ஓம் உன்னரும் பெருமை உடையோய் போற்றி
ஓம் யாவர்க்கும் இசைந்த யாயே போற்றி
ஓம் பாவும் பொருளுமாய்ப் படர்வோய் போற்றி
ஓம் பூரப் பரிவரு பொற்கொடி போற்றி
ஓம் வார நெஞ்சினர் வழித்துணை போற்றி
ஓம் சிலம்பொலிச் சிற்றடித் திருவருள் போற்றி
ஓம் நல<<உமை இடக்கணாம் நாயகி போற்றி
ஓம் வள்ளைக் கொடிச் செவி மானே போற்றி
ஓம் பிள்ளை மொழித் தமிழ்ப் பிராட்டி போற்றி
ஓம் அழகின் உருவே அணங்கே போற்றி
ஓம் பழகு தமிழின் பண்ணே போற்றி
ஓம் இளமை குன்றா ஏந்திழாய் போற்றி
ஓம் வளமை குளிர்மை மன்னினாய் போற்றி
ஓம் அறனும் பொருளும் அருள்வோய் போற்றி
ஓம் வறனறு இன்பம் மலிந்தோய் போற்றி
ஓம் சொன்ன கலைகளின் தொடர்பே போற்றி
ஓம் மன்னிய முத்தின் வயங்குவாய் போற்றி
ஓம் கம்பர்க் கருளிய கருத்தே போற்றி
ஓம் நம்பினோர்க் கின்பருள் நல்லோய் போற்றி
ஓம் காண்டகும் எண்ணென் கலையாய் போற்றி
ஓம் வேண்டா வெண்மையை விலக்குவாய் போற்றி
ஓம் கிட்டற் கரிய கிளிமொழி போற்றி
ஓம் வெட்ட வெளியாம் விமலை போற்றி
ஓம் கீர்த்தியார் வாணியாம் கேடிலாய் போற்றி
ஓம் ஆர்த்தியார் அன்பரின் அகத்தாய் போற்றி
ஓம் குமர குருபரர்க் குதவினோய் போற்றி
ஓம் அமரரும் வணங்கும் அம்மே போற்றி
ஓம் கூர்மையும் சீர்மையும் கொண்டோய் போற்றி
ஓம் ஆர்வலர் ஏத்த அருள்வோய் போற்றி
ஓம் கெடலரும் பாவின் கிழத்தி போற்றி
ஓம் விடலரும் அறிவின் வித்தே போற்றி
ஓம் கேள்வி கல்விக் கிழமையோய் போற்றி
ஓம் ஆள்வினை அருளும் அமிழ்தே போற்றி
ஓம் கையகக் கழுநிர்க் கலைமகள் போற்றி
ஓம் பொய்தீர் அருங்கலைப் பொருளே போற்றி
ஓம் கொன்டற் கூந்தற் கொம்பே போற்றி
ஓம் வண்டமிழ் வடமொழி வளனே போற்றி
ஓம் கோதில் பலமொழிக் குருந்தே போற்றி
ஓம் போதில் உறையும் பொன்னே போற்றி
ஓம் சங்கொத் தொளிர்நிறத் தாளே போற்றி
ஓம் அங்கண் அருள்நிறை அம்மா போற்றி
ஓம் சாதலும் பிறத்தலும் தவிர்ந்தோய் போற்றி
ஓம் போதலும் இருத்தலும் போக்கினோய் போற்றி
ஓம் சினமும் செற்றமும் தீர்ந்தோய் போற்றி
ஓம் மனமும் கடந்த மறைபொருள் போற்றி
ஓம் சீரார் சிந்தா தேவியே போற்றி
ஓம் ஏரார் செழுங்கலை இன்பே போற்றி
ஓம் சுடரே விளக்கே தூயாய் போற்றி
ஓம் இடரே களையும் இயல்பினாய் போற்றி
ஓம் சூழும் தொண்டரின் தொடர்பே போற்றி
ஓம் ஏழுறும் இசையின் இசைவே போற்றி
ஓம் செவ்விய முத்தமிழ்த் திறனே போற்றி
ஓம் ஒளவியம் அறுக்கும் அரசி போற்றி
ஓம் சேவடிச் செல்வம் அளிப்போய் போற்றி
ஓம் பாவடிப் பயனே படைத்தருள் போற்றி
ஓம் சைவம் தாங்கும் தனிக்கொடி போற்றி
ஓம் மையெலாம் போக்கும் மருந்தே போற்றி
ஓம் சொல்லோடு பொருளின் சுவையருள் போற்றி
ஓம் அல்லொடு பகலுன் அடைக்கலம் போற்றி
ஓம் சோர்விலா அறிவின் தொடர்பே போற்றி
ஓம் தீர்விலா நுண்கலைத் திறனே போற்றி
ஓம் தமிழ்க்கலை தமிழ்ச்சுவை தந்தருள் போற்றி
ஓம் தமிழ்மந் திரமொழித் தண்பயன் போற்றி
ஓம் தாயே நின்னருள் தந்தாள் போற்றி
ஓம் தாயேநின் திருவடி தொழுதனம் போற்றி
ஓம் திருவுடன் கல்வித் திறனருள் போற்றி
ஓம் இருநிலத் தின்பம் எமக்கருள் போற்றி
ஓம் பிரம்மனின் பத்தினியே போற்றி போற்றி



சந்தோஷிமாதா வழிபாடு


ஓம் சந்தோஷி மாதா போற்றி
ஓம் சகலமும் அருள்வாய் போற்றி
ஓம் வேதங்கள் துதிப்பாய் போற்றி
ஓம் வெற்றிகள் தருவாய் போற்றி
ஓம் கன்னியிற் சிறந்தாய் போற்றி
ஓம் கற்பகத்தருவே போற்றி
ஓம் கருணைக் கடலே போற்றி
ஓம் காரணத்தினுருவே போற்றி
ஓம் காரியமும் ஆனாய் போற்றி
ஓம் காசித்தல முறைவாய் போற்றி
ஓம் கதை கேட்டு மகிழ்வாய் போற்றி
ஓம் காலதேசம் கடந்தாய் போற்றி
ஓம் கஜமுகன் குழந்தாய் போற்றி
ஓம் முக்குண உருவே போற்றி
ஓம் மூவுலகிற் சிறந்தாய் போற்றி
ஓம் இனியநின் உருவே போற்றி
ஓம் இனிப்பினை விரும்புவாய் போற்றி
ஓம் வாட்டமிலா முகத்தாய் போற்றி
ஓம் வரமிக்கத் தருவாய் போற்றி
ஓம் அகரமுதலே எழுத்தே போற்றி
ஓம் ஆதி அந்தமில்லாய் போற்றி
ஓம் ஈடிணையற்றாய் போற்றி
ஓம் இணையயடி தொழுதோம் போற்றி
ஓம் கோரியது கொடுப்பாய் போற்றி
ஓம் குலம் காக்கும் சுடரே போற்றி
ஓம் விரதத்திற்கு உரியாய் போற்றி
ஓம் விளக்கத்தின் விளக்கம் போற்றி
ஓம் பிறப்பிறப் பற்றாய் போற்றி
ஓம் பிறப்பினைத் தருவாய் போற்றி
ஓம் பெருவாழ்வு அருள்வாய் போற்றி
ஓம் பிழைதனைப் பொறுப்பாய் போற்றி
ஓம் வணக்கத்திற்குரியாய் போற்றி
ஓம் வணங்கினால் மகிழ்வோய் போற்றி
ஓம் ஒலிக்குமோர் ஓசை போற்றி
ஓம் உயர்வுகள் தருவாய் போற்றி
ஓம் கோள்களும் போற்றப் போற்றி
ஓம் குறைகளைத் தவிர்ப்பாய் போற்றி
ஓம் நிறைவினைத் தருவாய் போற்றி
ஓம் சக்தியின் உருவே போற்றி
ஓம் தெய்வத்தின் தெய்வம் போற்றி
ஓம் சூலத்தைகக் கொண்டாய் போற்றி
ஓம் வாளினை ஏற்றாய் போற்றி
ஓம் தீமைகள் அழிப்பாய் போற்றி
ஓம் திசையெல்லாம் நிறைந்தாய் போற்றி
ஓம் அற்புத உருவே போற்றி
ஓம் ஆனந்த சிலையே போற்றி
ஓம் தாமரை அமர்ந்தாய் போற்றி
ஓம் தக்கன தருவாய் போற்றி
ஓம் தருமத்தின் உருவே போற்றி
ஓம் தாயாக வந்தாய் போற்றி
ஓம் நினைத்ததைத் தருவாய் போற்றி
ஓம் நிம்மதி அருள்வாய் போற்றி
ஓம் உமையவள் பேத்தி போற்றி
ஓம் உன்னதத் தெய்வம் போற்றி
ஓம் செல்வத்தின் உருவமே போற்றி
ஓம் ஜெகமெலாம் காப்பாய் போற்றி
ஓம் உயிர்க்கு உயிராவாய் போற்றி
ஓம் உலகெலாம் நீயே போற்றி
ஓம் ஆபரணமணிவாய் போற்றி
ஓம் ஆடைகள் தருவாய் போற்றி
ஓம் ஒளிமிகு முகத்தாய் போற்றி
ஓம் கருணைசேர் கரத்தாய் போற்றி
ஓம் மனைமக்கள் ஈவாய் போற்றி
ஓம் மங்கலம் தருவாய் போற்றி
ஓம் உன்னையே துதித்தோம் போற்றி
ஓம் உடமைகள் தருவாய் போற்றி
ஓம் நங்கையர்க்கு நாயகி போற்றி
ஓம் நலமெலாம் தருவாய் போற்றி
ஓம் ஆரத்தி ஏற்பாய் போற்றி
ஓம் ஆனந்த உருவே போற்றி
ஓம் பாடல்கள் கேட்பாய் போற்றி
ஓம் பாசத்தைப் பொழிவாய் போற்றி
ஓம் குணமெனும் குன்றே போற்றி
ஓம் குன்றென அருள்வாய் போற்றி
ஓம் தேவியர் தேவி போற்றி
ஓம் தரிசனம் தருவாய் போற்றி
ஓம் சிவனருள் பெற்றாய் போற்றி
ஓம் சிறப்பெலாம் கொண்டாய் போற்றி
ஓம் விஷ்ணுவருள் பெற்றாய் போற்றி
ஓம் விண்ணவர் போற்றப் போற்றி
ஓம் நான் முகன் கருணைபெற்றாய் போற்றி
ஓம் நலன்களின் உருவம் நீயே போற்றி
ஓம் போற்றிக்கு அருள்வாய் போற்றி
ஓம் புண்ணிய நாயகி போற்றி
ஓம் செல்வத்தின் உருவே போற்றி
ஓம் செல்வத்தைப் பொழிவாய் போற்றி
ஓம் சரணமடைந்தால் மகிழ்வாய் போற்றி
ஓம் சற்குணவதியே போற்றி
ஓம் ஐங்கரன் மகளே போற்றி
ஓம் அனைத்துமே நீதான் போற்றி
ஓம் கண்களின் ஒளியே போற்றி
ஓம் கனகமாமணியே போற்றி
ஓம் அன்பருக்கு அன்பே போற்றி
ஓம் அனைவருக்கும் அருள்வாய் போற்றி
ஓம் செல்வமாம் நிதியே போற்றி
ஓம் செல்வத்தின் பதியே போற்றி
ஓம் தத்துவமானாய் போற்றி
ஓம் வித்தகச் செல்வி போற்றி
ஓம் பழங்களை ஏற்பாய் போற்றி
ஓம் பாயாசம் உண்பாய் போற்றி
ஓம் வெல்லம் கடலைசேர்த்து போற்றி
ஓம் விருப்பமாய் உண்பாய் போற்றி
ஓம் இல்லத்தில் எழுந்தருள்வாய் போற்றி
ஓம் ஓம்கார உருவே போற்றி
ஓம் உன்னதத் தெய்வம் நீயே போற்றி
ஓம் சந்தோஷிமாதாவே போற்றி
ஓம் சௌபாக்கியம் அருளவாய் போற்றி
ஓம் சந்தோஷி மாதாகி ஜெய்! போற்றி



துர்காதேவி  போற்றி


ஓம் துர்கையே போற்றி
ஓம் அன்னையே போற்றி
ஓம் அக்னீஸ்வரியே போற்றி
ஓம் அஷ்டமி நாயகியே போற்றி
ஓம் அவதூறு ஒழிப்பவளே போற்றி
ஓம் அசுரர்க்கு எமனே போற்றி
ஓம் அன்பர்க்கெளியவளே போற்றி
ஓம் அமரரைக் காப்பவளே போற்றி
ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி
ஓம் அறக்காவலே போற்றி
ஓம் அபயகரத்தாளே போற்றி
ஓம் ஆதாரசக்தியே போற்றி
ஓம் இறைவியே போற்றி
ஓம் இச்சா சக்தியே போற்றி
ஓம் ஈர்ப்பவளே போற்றி
ஓம் ஈடிலாளே போற்றி
ஓம் உக்ரதேவதையே போற்றி
ஓம் உன்மத்தபங்கியே போற்றி
ஓம் எண்கரத்தாளே போற்றி
ஓம் எட்டாக்குழலியே போற்றி
ஓம் எலுமிச்சை விரும்பியே போற்றி
ஓம் எதிர்ப்பைக் குலைப்பவளே போற்றி
ஓம் ஏழ்மையகற்றுபவளே போற்றி
ஓம் ஏவல் குலைப்பவளே போற்றி
ஓம் ஒளிர்பவளே போற்றி
ஓம் ஓங்காரியே போற்றி
ஓம் கம்பீர உருவமே போற்றி
ஓம் கவலையறச் செய்பவளே போற்றி
ஓம் காளியே போற்றி
ஓம் கதாயுததாரியே போற்றி
ஓம் காபாலியே போற்றி
ஓம் காப்பவளே போற்றி
ஓம் கிரிதுர்கையே போற்றி
ஓம் கிருஷ்ணசோதரியே போற்றி
ஓம் குமாரியே போற்றி
ஓம் குறுநகையளே போற்றி
ஓம் குங்குமப்பிரியையே போற்றி
ஓம் குலக்காவலே போற்றி
ஓம் க்ரியாசக்தியே போற்றி
ஓம் கோள்விளை தீர்ப்பவளே போற்றி
ஓம் சண்டிகேசுவரியே போற்றி
ஓம் சர்வசக்தியே போற்றி
ஓம் சந்தனப்பிரியையே போற்றி
ஓம் சர்வாலங்காரியே போற்றி
ஓம் சாமுண்டியே போற்றி
ஓம் சர்வாயுததாரியே போற்றி
ஓம் சிவதுர்கையே போற்றி
ஓம் சினவேல்கண்ணியே போற்றி
ஓம் சிம்மவாஹினியே போற்றி
ஓம் சித்தியளிப்பவளே போற்றி
ஓம் சியாமளையே போற்றி
ஒம் சீதளையே போற்றி
ஓம் செம்மேனியளே போற்றி
ஓம் செவ்வண்ணப்பிரியையே போற்றி
ஓம் ஜயதேவியே போற்றி
ஓம் ஜோதிக்கனலே போற்றி
ஓம் ஞானசக்தியே போற்றி
ஓம் ஞாலக்காவலே போற்றி
ஓம் தற்பரமே போற்றி
ஓம் தயாபரியே போற்றி
ஓம் திருவுருவே போற்றி
ஓம் திரிசூலியே போற்றி
ஓம் தீதழிப்பவளே போற்றி
ஓம் தீனர்க்காவலே போற்றி
ஓம் துட்டர்க்குத் தீயே போற்றி
ஓம் துர்கனையழித்தவளே போற்றி
ஓம் துக்கம் தீர்ப்பவளே போற்றி
ஓம் நலமளிப்பவளே போற்றி
ஓம் நந்தர்குலக்கொழுந்தே போற்றி
ஓம் நவசக்தியே போற்றி
ஓம் நவகோணத்துறைபவனே போற்றி
ஓம் நிமலையே போற்றி
ஓம் நிலவணியாளே போற்றி
ஓம் நிறைவே போற்றி
ஓம் நிறைந்தவளே போற்றி
ஓம் படைத்தவளே போற்றி
ஓம் பாலிப்பவளே போற்றி
ஓம் பயிரவியே போற்றி
ஓம் பயநாசினியே போற்றி
ஓம் பிரம்மசாரிணியே போற்றி
ஓம் பயங்கரியே போற்றி
ஓம் புவனேஸ்வரியே போற்றி
ஓம் பூஜிக்கப்படுபவளே போற்றி
ஓம் மலநாசினியே போற்றி
ஓம் மஹிஷாசுரமர்த்தினியே போற்றி
ஓம் மங்கலவடிவே போற்றி
ஓம் மஹேஸ்வரியே போற்றி
ஓம் மங்கையர்க்கரசியே போற்றி
ஓம் மகவளிப்பவளே போற்றி
ஓம் மாதர் துணையே போற்றி
ஓம் மாங்கல்யம் காப்பவளே போற்றி
ஓம் முக்கண்ணியே போற்றி
ஓம் முக்தியளிப்பவளே போற்றி
ஓம் மூத்தவளே போற்றி
ஓம் மூலப்பொருளே போற்றி
ஓம் மூவுலகத்தாயே போற்றி
ஓம் மூவுலகும் வென்றவளே போற்றி
ஓம் யசோதபுத்ரியே போற்றி
ஓம் யமபயம் தீர்ப்பவளே போற்றி
ஓம் ராகுகால தேவதையே போற்றி
ஓம் ரௌத்திரியே போற்றி
ஓம் வல்லவளே போற்றி
ஓம் வாராகியே போற்றி
ஓம் வீர உருவமே போற்றி
ஓம் விஷ்ணு துர்கையே போற்றி
ஓம் வையகக்காப்பே போற்றி
ஓம் வைஷ்ணவியே போற்றி
ஓம் வெற்றியளிப்பவளே போற்றி



அஷ்டலக்ஷ்மி  போற்றி


ஓம் அஷ்டலக்ஷ்மியே போற்றி
ஓம் அதிர்ஷ்டலக்ஷ்மியே போற்றி
ஓம் அன்னலக்ஷ்மியே போற்றி
ஓம் அபயலக்ஷ்மியே போற்றி
ஓம்  அலங்காரலக்ஷ்மியே போற்றி
ஓம் அஸ்வாரூடலக்ஷ்மியே போற்றி
ஓம் அஷ்டபுஜலக்ஷ்மியே போற்றி
ஓம் அஷ்டாதசபுஜலக்ஷ்மியே போற்றி
ஓம் அம்ருதலக்ஷ்மியே போற்றி
ஓம் அனந்தலக்ஷ்மியே போற்றி
ஓம் ஆதிலக்ஷ்மியே போற்றி
ஓம் ஆனந்தலக்ஷ்மியே போற்றி
ஓம் இஷ்டலக்ஷ்மியே போற்றி
ஓம் இந்திரலக்ஷ்மியே போற்றி
ஓம் ஐஸ்வர்யலக்ஷ்மியே போற்றி
ஓம் ஓங்கார லக்ஷ்மியே போற்றி
ஓம் கஜலக்ஷ்மியே போற்றி
ஓம் கனகலக்ஷ்மியே போற்றி
ஓம் கற்பகலக்ஷ்மியே போற்றி
ஓம் கனகாபிஷேக லக்ஷ்மியே போற்றி
ஓம் கன்யாலக்ஷ்மியே போற்றி
ஓம் காருண்யலக்ஷ்மியே போற்றி
ஓம் கிருபாலக்ஷ்மியே போற்றி
ஓம் கீர்த்திலக்ஷ்மியே போற்றி
ஓம் கோ லக்ஷ்மியே போற்றி
ஓம் கோலாபுரி லக்ஷ்மியே போற்றி
ஓம் சத்ய லக்ஷ்மியே போற்றி
ஓம் சர்வ லக்ஷ்மியே போற்றி
ஓம் சம்பத்ஸ்வரூபியே போற்றி
ஓம் சந்தானலக்ஷ்மியே போற்றி
ஓம் சாந்தலக்ஷ்மியே போற்றி
ஓம் சாகரோத்பவ லக்ஷ்மியே போற்றி
ஓம் சித்த லக்ஷ்மியே போற்றி
ஓம் சிவானந்த லக்ஷ்மியே போற்றி
ஓம் சுபலக்ஷ்மியே போற்றி
ஓம் சுந்தர லக்ஷ்மியே போற்றி
ஓம் சுவர்ண லக்ஷ்மியே போற்றி
ஓம் சுஸ்மித லக்ஷ்மியே போற்றி
ஓம் சுகாசன லக்ஷ்மியே போற்றி
ஓம் சௌபாக்ய லக்ஷ்மியே போற்றி
ஓம் ஸ்தித லக்ஷ்மியே போற்றி
ஓம் ஸெளந்தர்ய லக்ஷ்மியே போற்றி
ஓம் சுவர்க்க லக்ஷ்மியே போற்றி
ஓம் ஸைன்ய லக்ஷ்மியே போற்றி
ஓம் ஜய லக்ஷ்மியே போற்றி
ஓம் ஜகல்லக்ஷ்மியே போற்றி
ஓம் ஜோதி லக்ஷ்மியே போற்றி
ஓம் ஜேஷ்ட சோதரியே போற்றி
ஓம் ஷட்புஜ லக்ஷ்மியே போற்றி
ஓம் ஷோடச லக்ஷ்மியே போற்றி
ஓம் தன லக்ஷ்மியே போற்றி
ஓம் தனத லக்ஷ்மியே போற்றி
ஓம் தயா லக்ஷ்மியே போற்றி
ஓம் தான்ய லக்ஷ்மியே போற்றி
ஓம் த்ரிகுண லக்ஷ்மியே போற்றி
ஓம் த்வார லக்ஷ்மியே போற்றி
ஓம் த்விபுஜ லக்ஷ்மியே போற்றி
ஓம் த்விபுஜ வீரலக்ஷ்மியே போற்றி
ஓம் திவ்ய லக்ஷ்மியே போற்றி
ஓம் தீபலக்ஷ்மியே போற்றி
ஓம் தீரலக்ஷ்மியே போற்றி
ஓம் தைர்ய லக்ஷ்மியே போற்றி
ஓம் துளசி லக்ஷ்மியே போற்றி
ஓம் துக்க நிவாரணியே போற்றி
ஓம் நாகலக்ஷ்மியே போற்றி
ஓம் நித்திய லக்ஷ்மியே போற்றி
ஓம் பால லக்ஷ்மியே போற்றி
ஓம் பங்கஜ லக்ஷ்மியே போற்றி
ஓம் பாக்ய லக்ஷ்மியே போற்றி
ஓம் பிரம்மசோதரியே போற்றி
ஓம் பிரசன்ன லக்ஷ்மியே போற்றி
ஓம் பிரகாச லக்ஷ்மியே போற்றி
ஓம் பில்வ லக்ஷ்மியே போற்றி
ஓம் பூலக்ஷ்மியே போற்றி
ஓம் புவன லக்ஷ்மியே போற்றி
ஓம் பூஜ்ய லக்ஷ்மியே போற்றி
ஓம் பூர்ண லக்ஷ்மியே போற்றி
ஓம் போக லக்ஷ்மியே போற்றி
ஓம் மகாலக்ஷ்மியே போற்றி
ஓம் மாயாலக்ஷ்மியே போற்றி
ஓம் மோக்ஷலக்ஷ்மியே போற்றி
ஓம் மோஹனலக்ஷ்மியே போற்றி
ஓம் யக்ஞலக்ஷ்மியே போற்றி
ஓம் யந்திரலக்ஷ்மியே போற்றி
ஓம் யோகலக்ஷ்மியே போற்றி
ஓம் யௌவன லக்ஷ்மியே போற்றி
ஓம் ராஜலக்ஷ்மியே போற்றி
ஓம் ராஜ்யலக்ஷ்மியே போற்றி
ஓம் ரம்யலக்ஷ்மியே போற்றி
ஓம் ரூபலக்ஷ்மியே போற்றி
ஓம் லக்ஷ்மியே போற்றி
ஓம் லங்காதகனியே போற்றி
ஓம் வரலக்ஷ்மியே போற்றி
ஓம் வரதலக்ஷ்மியே போற்றி
ஓம் விஷ்ணுலக்ஷ்மியே போற்றி
ஓம் விஜயலக்ஷ்மியே போற்றி
ஓம் விஸ்வலக்ஷ்மியே போற்றி
ஓம் வித்யாலக்ஷ்மியே போற்றி
ஓம் வீரலக்ஷ்மியே போற்றி
ஓம் வீர்யலக்ஷ்மியே போற்றி
ஓம் ஞானலக்ஷ்மியே போற்றி
ஓம் ஹம்ஸவாகினியே போற்றி
ஓம் ஹ்ருதயலக்ஷ்மியே போற்றி
ஓம் ஹிரண்ய லக்ஷ்மியே போற்றி
ஓம் ஸ்ரீ லக்ஷ்மியே போற்றி
ஓம் ஸ்ரீ சக்ர லக்ஷ்மியே போற்றி
ஓம் ஸ்ரீ சூக்த லக்ஷ்மியே போற்றி
ஓம் ஸ்ரீப்ரதனாலக்ஷ்மியே போற்றி



மகா காளியம்மன் போற்றி


ஓம் காளியே போற்றி
ஓம் காக்குமன்னையே போற்றி
ஓம் அனுக்ரஹ காளியே போற்றி
ஓம் அல்லலறுப்பவளே போற்றி
ஓம் அஷ்டபுஜ காளியே போற்றி
ஓம் அகா நாசினியே போற்றி
ஓம் அளத்தற்கரியவளே போற்றி
ஓம் அங்குசபாசமேந்தியவளே போற்றி
ஓம் ஆதாரசக்தியே போற்றி
ஓம் ஆலகாலத் தோன்றலே போற்றி
ஓம் இளங்காளியே போற்றி
ஓம் இடுகாட்டுமிருப்பவளே போற்றி
ஓம் இஷ்டதேவதையே போற்றி
ஓம் இடர் பொடிப்பவளே போற்றி
ஓம் ஈறிலாளே போற்றி
ஓம் ஈரெண்முகத்தாளே போற்றி
ஓம் உயிர்ப்பிப்பவளே போற்றி
ஓம் உக்ரகாளியே போற்றி
ஓம் உச்சிகாளியே போற்றி
ஓம் உச்சினிமாகாளியே போற்றி
ஓம் உதிரமேற்றவளே போற்றி
ஓம் ஊழிசக்தியே போற்றி
ஓம் எழுதலைக்காளியே போற்றி
ஓம் எட்டெட்டு கரத்தாளே போற்றி
ஓம் எதிர் இலாளே போற்றி
ஓம் எலுமிச்சைப்பிரியையே போற்றி
ஓம் ஓங்காரியே போற்றி
ஓம் ஹும்காரியே போற்றி
ஓம் கபாலியே போற்றி
ஓம் கங்காளியே போற்றி
ஓம் கரிய காளியே போற்றி
ஓம் கட்வாங்கதாரியே போற்றி
ஓம் கபந்தவாகினியே போற்றி
ஓம் கபாலமாலை அணிந்தவளே போற்றி
ஓம் காமகாளியே போற்றி
ஓம் காலபத்னியே போற்றி
ஓம் குஹ்யகாளியே போற்றி
ஓம் குங்கும காளியே போற்றி
ஓம் சமரிலாளே போற்றி
ஓம் சம்ஹார காளியே போற்றி
ஓம் சவ ஆரோகணியே போற்றி
ஓம் சண்டமுண்டசம்ஹாரியே போற்றி
ஓம் சிம்மவாகினியே போற்றி
ஓம் சிககுண்டலதாரியே போற்றி
ஓம் சித்த காளியே போற்றி
ஓம் சிறுவாச்சூராளே போற்றி
ஓம் சிவசக்தியே போற்றி
ஓம் சீலைக்காளியே போற்றி
ஓம் சுடலைக் காளியே போற்றி
ஓம் சுந்தர மாகாளியே போற்றி
ஓம் சுரகாளியே போற்றி
ஓம் சூல தாரியே போற்றி
ஓம் செங்காளியே போற்றி
ஓம் செந்தூரம் ஏற்பவளே போற்றி
ஓம் சோமகாளியே போற்றி
ஓம் சோகம் தீர்ப்பவளே போற்றி
ஓம் தன காளியே போற்றி
ஓம் தக்ஷிணகாளியே போற்றி
ஓம் தண்டினியே போற்றி
ஓம் தசமுகியே போற்றி
ஓம் தாண்டவியே போற்றி
ஓம் தாருகனையழித்தவளே போற்றி
ஓம் திகம்பரியே போற்றி
ஓம் திரிபுரஜனனியே போற்றி
ஓம் தில்லைக்காளியே போற்றி
ஓம் தீதழிப்பவளே போற்றி
ஓம் நாத ஆதாரமே போற்றி
ஓம் நாகாபரணியே போற்றி
ஓம் நர்த்தன காளியே போற்றி
ஓம் நிர்வாணியே போற்றி
ஓம் நித்திய காளியே போற்றி
ஓம் நிக்ரஹ காளியே போற்றி
ஓம் பல்பெயராளே போற்றி
ஓம் பராசக்தியே போற்றி
ஓம் பஞ்சகாளியே போற்றி
ஓம் பத்ரகாளியே போற்றி
ஓம் பஞ்சமுகியே போற்றி
ஓம் பயங்கரியே போற்றி
ஓம் பல்வடிவினனே போற்றி
ஓம் பாதாளகாளியே போற்றி
ஓம் பூத காளியே போற்றி
ஓம் பூக்குழி ஏற்பவளே போற்றி
ஓம் பெருங்கண்ணியே போற்றி
ஓம் பேராற்றலே போற்றி
ஓம் பொன்காளியே போற்றி
ஓம் பொல்லாரையழிப்பவளே போற்றி
ஓம் மதுரகாளியே போற்றி
ஓம் மடப்புரத்தாளே போற்றி
ஓம் ம(க)õகாளியே போற்றி
ஓம் மகாமாயையே போற்றி
ஓம் மங்களரூபியே போற்றி
ஓம் முக்கண்ணியே போற்றி
ஓம் மூவுலக நாயகியே போற்றி
ஓம் மூர்க்க காளியே போற்றி
ஓம் மோக நாசினியே போற்றி
ஓம் யக்ஷிணி காளியே போற்றி
ஓம் யோகீஸ்வரியே போற்றி
ஓம் ரக்ஷிணி காளியே போற்றி
ஓம் ரௌத்திரியே போற்றி
ஓம் வடபத்ரகாளியே போற்றி
ஓம் வங்கத்து தேவியே போற்றி
ஓம் விரிசடையாளே போற்றி
ஓம் வீரசக்தியே போற்றி
ஓம் வித்யா தேவியே போற்றி
ஓம் வீரமாகாளியே போற்றி
ஓம் வெக்காளியே போற்றி
ஓம் வெற்றி வடிவே போற்றி
ஓம் காளீஸ்வரித்தாயே போற்றி



சப்தமாதர்  போற்றி


ஓம் பிரம்மியே போற்றி
ஓம் பிரம்ம சக்தியே போற்றி
ஓம் அன்னவாகினியே போற்றி
ஓம் அபயகரத்தாளே போற்றி
ஓம் இந்தளூர்த்தேவியே போற்றி
ஓம் ஈர்த்து அருள்பவளே போற்றி
ஓம் சடைமுடியாளே போற்றி
ஓம் ஜபமாலை ஏந்தியவளே போற்றி
ஓம் நான்முகியே போற்றி
ஓம் நால்வேதமாதாவே போற்றி
ஓம் பத்மாசனியே போற்றி
ஓம் பயநாசினியே போற்றி
ஓம் மலர்விழியாளே போற்றி
ஓம் மான்தோலுடையாளே போற்றி
ஓம் மாகேஸ்வரியே போற்றி
ஓம் மகேஸ்வரன் ரூபியே போற்றி
ஓம் அன்பர்க்கு எளியவளே போற்றி
ஓம் அசுரநிக்ரஹியே போற்றி
ஓம் கருணாபுரத்தேவியே போற்றி
ஓம் காளை வாகினியே போற்றி
ஓம் த்ரிசூலதாரியே போற்றி
ஓம் த்ரைலோக்ய மோகினியே போற்றி
ஓம் பஞ்சமுகியே போற்றி
ஓம் பல்லாயுதமேந்தியவளே போற்றி
ஓம் படர் சடையாளே போற்றி
ஓம் பாம்பணியாளே போற்றி
ஓம் முக்கண்ணியே போற்றி
ஓம் வெண்ணிற மேனியளே போற்றி
ஓம் வெற்றியளிப்பவளே போற்றி
ஓம் கௌமாரியே போற்றி
ஓம் குமார சக்தியே போற்றி
ஓம் அகந்தை அளிப்பவளே போற்றி
ஓம் அசுர சம்காரியே போற்றி
ஓம் உண்மையுணர்த்துபவளே போற்றி
ஓம் உடும்ப மரத்தடியிலிருப்பவளே போற்றி
ஓம் கஞ்சனூர்த் தேவியே போற்றி
ஓம் குங்கும வண்ணியே போற்றி
ஓம் சண்முகியே போற்றி
ஓம் சக்தி ஆயுததாரியே போற்றி
ஓம் மயில்வாகினியே போற்றி
ஓம் மகுடமணிந்தவளே போற்றி
ஓம் வீர சக்தியே போற்றி
ஓம் வறியோர்க்காவலே போற்றி
ஓம் வைஷ்ணவியே போற்றி
ஓம் விரிகண்ணாளே போற்றி
ஓம் கருடவாகினியே போற்றி
ஓம் கதாயுததாரியே போற்றி
ஓம் சங்கேந்தியவளே போற்றி
ஓம் சக்கரமும் ஏற்றவளே போற்றி
ஓம் சுந்தரவதனியே போற்றி
ஓம் சேந்தன்குடித்தேவியே போற்றி
ஓம் பெருமுலையாளே போற்றி
ஓம் பேரழகியே போற்றி
ஓம் மகாமாயையே போற்றி
ஓம் மஞ்சள்நிற ஆடையளே போற்றி
ஓம் வனமால்தாரியே போற்றி
ஓம் விஷ்ணு அம்சதேவியே போற்றி
ஓம் வாராகியே போற்றி
ஓம் வழுவூர்த்தேவியே போற்றி
ஓம் அஸ்திரவாராகியே போற்றி
ஓம் ஆபரணதாரியே போற்றி
ஓம் கதாயுததாரியே போற்றி
ஓம் கபாலமாலையணிந்தவளே போற்றி
ஓம் கலப்பை ஏந்தியவளே போற்றி
ஓம் கார்முகில் வண்ணியே போற்றி
ஓம் சக்தி சேனாபதியே போற்றி
ஓம் ஸ்வப்ன வாராகியே போற்றி
ஓம் துஷ்டநிக்ரஹியே போற்றி
ஓம் தூம்ரவாராகியே போற்றி
ஓம் பட்டுடுத்தவளே போற்றி
ஓம் பகை பொடிப்பவளே போற்றி
ஓம் மஹிஷ வாகினியே போற்றி
ஓம் மகா வாராகியே போற்றி
ஓம் இந்திராணியே போற்றி
ஓம் இன்னல் களைபவளே போற்றி
ஓம் அங்குசதாரியே போற்றி
ஓம் ஆயிரம் கண்ணாளே போற்றி
ஓம் கஜவாகினியே போற்றி
ஓம் கதாயுதபாணியே போற்றி
ஓம் கலக்கம் தீர்ப்பவளே போற்றி
ஓம் கல்பமரத்தடியிலிருப்பவளே போற்றி
ஓம் தயாபரியே போற்றி
ஓம் தருமபுரத் தேவியே போற்றி
ஓம் யமபயநாசினியே போற்றி
ஓம் யானைக்கொடியுடையவளே போற்றி
ஓம் சாமுண்டேஸ்வரியே போற்றி
ஓம் சண்டனையழித்தவளே போற்றி
ஓம் ஆந்தை வாகினியே போற்றி
ஓம் அஷ்டயோகினி சூழ்ந்தவளே போற்றி
ஓம் அதிகந்தரியே போற்றி
ஓம் ஆடியருள்பவளே போற்றி
ஓம் ஊர்த்துவகேசியே போற்றி
ஓம் உத்திரமாயூரதேவியே போற்றி
ஓம் கர்ஜிப்பவளே போற்றி
ஓம் கனல் ஏந்தியவளே போற்றி
ஓம் பத்மாக்ஷியே போற்றி
ஓம் பிரளயரூபியே போற்றி
ஓம் வாருணிசாமுண்டியே போற்றி
ஓம் வடவிருக்ஷத்தடியிலிருப்பவளே போற்றி
ஓம் ரக்தசாமுண்டியே போற்றி
ஓம் ராக்ஷஸநிக்ரஹியே போற்றி
ஓம் எழுபெருந்தேவியரே போற்றி
ஓம் எளியோரைக் காப்போரே போற்றி
ஓம் சிவாலயத் தேவியரே போற்றி
ஓம் சீக்கிரமே கனிபவரே போற்றி
ஓம் வடதிசை நோக்குபவரே போற்றி
ஓம் வரம்யாவும் அருள்பவரே போற்றி



காயத்ரி தேவி  போற்றி


ஓம் ஸ்ரீ காயத்ரி தேவியே போற்றி ஓம்!
ஓம் அருள் அன்னையே போற்றி ஓம்!
ஓம் அஞ்ஞானத்தை அகற்றுபவளே போற்றி ஓம்!
ஓம் அமைதியே போற்றி ஓம்!
ஓம் அழிவற்றவளே போற்றி ஓம்!
ஓம் ஆத்ம சக்தியே போற்றி ஓம்!
ஓம் ஆக்ஞா சக்தியே போற்றி ஓம்!
ஓம் இனிமையே போற்றி ஓம்!
ஓம் இன்பமே போற்றி ஓம்!
ஓம் ஸ்ரீ காயத்ரி தேவியே போற்றி ஓம்!
ஓம் ஈரைந்து கரங்களுடையவளே போற்றி ஓம்!
ஓம் காட்சிக்கு இனியவளே போற்றி ஓம்!
ஓம் சங்குசக்கரம் ஏந்தியவளே போற்றி ஓம்!
ஓம் சகஸ்ரார சக்தியே போற்றி ஓம்!
ஓம் சந்திர பிம்பமே போற்றி ஓம்!
ஓம் சுயஞ் ஜோதியே போற்றி ஓம்!
ஓம் தாமரைப் பீடத்தில் அமர்ந்திருப்பவளே போற்றி ஓம்!
ஓம் நல்லார்க்கு இனியவளே போற்றி ஓம்!
ஓம் நலமளிப்பவளே போற்றி ஓம்!
ஓம் ஸ்ரீ காயத்ரி தேவியே போற்றி ஓம்!
ஓம் மூல மந்திரமே போற்றி ஓம்!
ஓம் மூலாதாரமே போற்றி ஓம்!
ஓம் ஞான பூமியே போற்றி ஓம்!
ஓம் சாவித்ரி தேவியே போற்றி ஓம்!
ஓம் ஆதியும் அந்தமும் இல்லாதவளே போற்றி ஓம்!
ஓம் ஈஸ்வரியே போற்றி ஓம்!
ஓம் ஊழ்வினையைப் போக்குபவளே போற்றி ஓம்!
ஓம் ஒப்பில்லாதவளே போற்றி ஓம்!
ஓம் குற்றமற்றவளே போற்றி ஓம்!
ஓம் ஸ்ரீ காயத்ரி தேவியே போற்றி ஓம்!
ஓம் சர்வேஸ்வரியே போற்றி ஓம்!
ஓம் ஸ்ரீ சக்கரமே போற்றி ஓம்!
ஓம் சாந்தமே போற்றி ஓம்!
ஓம் சாஸ்திரங்களின் வடிவமே போற்றி ஓம்!
ஓம் சுகத்தைக் கொடுப்பவளே போற்றி ஓம்!
ஓம் சொரூபிணியே போற்றி ஓம்!
ஓம் தாயாக இருப்பவளே போற்றி ஓம்!
ஓம் தியான ரூபமே போற்றி ஓம்!
ஓம் தியானத்திற்கு இலக்கணமே போற்றி ஓம்!
ஓம் ஸ்ரீ காயத்ரி தேவியே போற்றி ஓம்!
ஓம் நற்கதியே போற்றி ஓம்!
ஓம் நிர்மலமானவனே போற்றி ஓம்!
ஓம் நிறை ஞானியே போற்றி ஓம்!
ஓம் பரிசுத்தமானவளே போற்றி ஓம்!
ஓம் மாசற்றவளே போற்றி ஓம்!
ஓம் வித்யா வதியே போற்றி ஓம்!
ஓம் வேத வடிவமே போற்றி ஓம்!
ஓம் யாகப் பிரியையே போற்றி ஓம்!
ஓம் யோகீஸ்வரியே போற்றி ஓம்!
ஓம் ஸ்ரீ காயத்ரி தேவியே போற்றி ஓம்!
ஓம் சரஸ்வதியே போற்றி ஓம்!
ஓம் அட்சர வடிவமே போற்றி ஓம்!
ஓம் அறிவு வடிவினளே போற்றி ஓம்!
ஓம் கலையே போற்றி ஓம்!
ஓம் கலைகளின் இருப்பிடமே போற்றி ஓம்!
ஓம் கலைவாணியே போற்றி ஓம்!
ஓம் கலையரசியே போற்றி ஓம்!
ஓம் கலைமகளே போற்றி ஓம்!
ஓம் கலைக்கூடமே போற்றி ஓம்!
ஓம் ஸ்ரீ காயத்ரி தேவியே போற்றி ஓம்!
ஓம் கலைமாமணியே போற்றி ஓம்!
ஓம் கலைச் செல்வியே போற்றி ஓம்!
ஓம் கலைக் களஞ்சியமே போற்றி ஓம்!
ஓம் கலைகளின் வடிவமே போற்றி ஓம்!
ஓம் கலைகளின் தலைவியே போற்றி ஓம்!
ஓம் கல்விக் கடலே போற்றி ஓம்!
ஓம் கல்விக் களஞ்சியமே போற்றி ஓம்!
ஓம் கல்விப் பொருளே போற்றி ஓம்!
ஓம் கல்விக்கு உரியவளே போற்றி ஓம்!
ஓம் ஸ்ரீ காயத்ரி தேவியே போற்றி ஓம்!
ஓம் வாணியே போற்றி ஓம்!
ஓம் வாகீஸ்வரியே போற்றி ஓம்!
ஓம் வித்தகியே போற்றி ஓம்!
ஓம் வீணா வாணியே போற்றி ஓம்!
ஓம் நாவுக்கரசியே போற்றி ஓம்!
ஓம் சத்தியமே போற்றி ஓம்!
ஓம் சத்திய வடிவே போற்றி ஓம்!
ஓம் குருவே போற்றி ஓம்!
ஓம் தைரிய வடிவினளே போற்றி ஓம்!
ஓம் ஸ்ரீ காயத்ரி தேவியே போற்றி ஓம்!
ஓம் ஞாபகசக்தி வடிவினளே போற்றி ஓம்!
ஓம் ஞானேஸ்வரியே போற்றி ஓம்!
ஓம் புவனேஸ்வரியே போற்றி ஓம்!
ஓம் யோகேஸ்வரியே போற்றி ஓம்!
ஓம் லோகேஸ்வரியே போற்றி ஓம்!
ஓம் தியானேஸ்வரியே போற்றி ஓம்!
ஓம் ஞானமே போற்றி ஓம்!
ஓம் ஞான வடிவமே போற்றி ஓம்!
ஓம் ஞானானந்த வடிவமே போற்றி ஓம்!
ஓம் ஸ்ரீ காயத்ரி தேவியே போற்றி ஓம்!
ஓம் ராணியே போற்றி ஓம்!
ஓம் நாராயணியே போற்றி ஓம்!
ஓம் பூரண சந்திரனே போற்றி ஓம்!
ஓம் மங்களகரமானவளே போற்றி ஓம்!
ஓம் கற்பகத் தருவே போற்றி ஓம்!
ஓம் வெற்றி வடிவினளே போற்றி ஓம்!
ஓம் எங்கும் நிறைந்திருப்பவளே போற்றி ஓம்!
ஓம் ஸ்ரீ காயத்ரி தேவியே போற்றி ஓம்!



மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி போற்றி


ஓம் ஓம் சக்தியே போற்றி ஓம்!
ஓம் ஓங்கார ஆனந்தியே போற்றி ஓம்!
ஓம் உலக நாயகியே போற்றி ஓம்!
ஓம் உறவுக்கும் உறவானவளே போற்றி ஓம்!
ஓம் உள்ளமலர் உவந்தவளே போற்றி ஓம்!
ஓம் ஓதரிய பெரும் பொருளே போற்றி ஓம்!
ஓம் உண்மைப் பரம்பொருளே போற்றி ஓம்!
ஓம் உயிராய் நின்றவளே போற்றி ஓம்!
ஓம் மருவத்தூர் அமர்ந்தாய் போற்றி ஓம்!
ஓம் மனமாசைத் துடைப்பாய் போற்றி ஓம்!
ஓம் கவலை தவிர்ப்பாய் போற்றி ஓம்!
ஓம் ககனவெளி ஆனாய் போற்றி ஓம்!
ஓம் புற்றாகி வந்தவளே போற்றி ஓம்!
ஓம் பாலாகி வடிந்தவளே போற்றி ஓம்!
ஓம் பாமரர் துயர் துடைப்பாய் போற்றி ஓம்!
ஓம் பண்ணாக இசைந்தாய் போற்றி ஓம்!
ஓம் பாமலர் உவந்தாய் போற்றி ஓம்!
ஓம் பாம்புரு ஆனாய் போற்றி ஓம்!
ஓம் சித்துரு அமைந்தாய் போற்றி ஓம்!
ஓம் செம்பொருள் நீயே போற்றி ஓம்!
ஓம் சக்தியே தாயே போற்றி ஓம்!
ஓம் சன்மார்க்க நெறியே போற்றி ஓம்!
ஓம் சமதர்ம விருந்தே போற்றி ஓம்!
ஓம் ஓங்கார உருவே போற்றி ஓம்!
ஓம் ஒருதவத்துக் குடையாய் போற்றி ஓம்!
ஓம் நீள்பசி தவிர்ப்பாய் போற்றி ஓம்!
ஓம் நிம்மதி தருவாய் போற்றி ஓம்!
ஓம் அகிலமே ஆனாய் போற்றி ஓம்!
ஓம் அகண்டமே விரிந்தாய் போற்றி ஓம்!
ஓம் ஆன்மீகச் செல்வமே போற்றி ஓம்!
ஓம் அனலாக ஆனாய் போற்றி ஓம்!
ஓம் நீராக நிறைந்தாய் போற்றி ஓம்!
ஓம் நிலனாகத் தணிந்தாய் போற்றி ஓம்!
ஓம் தூறாக வளர்ந்தாய் போற்றி ஓம்!
ஓம் துணிபொருள் நீயே போற்றி ஓம்!
ஓம் காராக வருவாய் போற்றி ஓம்!
ஓம் கனியான மனமே போற்றி ஓம்!
ஓம் மூலமே முதலே போற்றி ஓம்!
ஓம் முனைச்சுழி விழியே போற்றி ஓம்!
ஓம் வீணையே இசையே போற்றி ஓம்!
ஓம் விரைமலர் அணிந்தாய் போற்றி ஓம்!
ஓம் தத்துவங் கடந்தாய் போற்றி ஓம்!
ஓம் சகலமறைப் பொருளே போற்றி ஓம்!
ஓம் உத்தமி ஆனாய் போற்றி ஓம்!
ஓம் உயிர்மொழிக்குருவே போற்றி ஓம்!
ஓம் நெஞ்சம் நீ மலர்வாய் போற்றி ஓம்!
ஓம் நீள் நிலத் தெய்வமே போற்றி ஓம்!
ஓம் துரிய நிலையே போற்றி ஓம்!
ஓம் துரியா தீத வைப்பே போற்றி ஓம்!
ஓம் ஆயிர இதழ் உறைவாய் போற்றி ஓம்!
ஓம் அகிலமெலாம் ஆட்டுவிப்பாய் போற்றி ஓம்!
ஓம் கருவான மூலம் போற்றி ஓம்!
ஓம் உருவான கோலம் போற்றி ஓம்!
ஓம் சாந்தமே உருவாய் போற்றி போற்றி ஓம்!
ஓம் சரித்திரமே மறைத்தாய் போற்றி ஓம்!
ஓம் சின்முத்திரை தெரிப்பாய் போற்றி ஓம்!
ஓம் சினத்தை வேரறுப்பாய் போற்றி ஓம்!
ஓம் கையிரண்டு உடையாய் போற்றி ஓம்!
ஓம் கரைபுரண்ட கருணை போற்றி ஓம்!
ஓம் மொட்டுடைக் கரத்தாய் போற்றி ஓம்!
ஓம் மோனநல் தவத்தாய் போற்றி ஓம்!
ஓம் யோகநல் உருவே போற்றி ஓம்!
ஓம் ஒளியென ஆனாய் போற்றி ஓம்!
ஓம் எந்திரத் திருவே போற்றி ஓம்!
ஓம் மந்திரத் தாயே போற்றி ஓம்!
ஓம் பிணி தவிர்த்திடுவாய் போற்றி ஓம்!
ஓம் பிறவிநோய் அறுப்பாய் போற்றி ஓம்!
ஓம் மாயவன் தங்கையே போற்றி ஓம்!
ஓம் சேயவன் தாயே போற்றி ஓம்!
ஓம் திரிபுரத்தாளே போற்றி ஓம்!
ஓம் ஒருதவம் தெரிப்பாய் போற்றி ஓம்!
ஓம் வேம்பினை ஆள்வாய் போற்றி ஓம்!
ஓம் வினையெலாம் தீர்ப்பாய் போற்றி ஓம்!
ஓம் அஞ்சனம் அருள்வாய் போற்றி ஓம்!
ஓம் ஆருயிர் மருந்தே போற்றி ஓம்!
ஓம் கண்ணொளி காப்பாய் போற்றி ஓம்!
ஓம் கருத்தொளி தருவாய் போற்றி ஓம்!
ஓம் அருள்ஒளி செய்வாய் போற்றி ஓம்!
ஓம் அன்பொளி கொடுப்பாய் போற்றி ஓம்!
ஓம் கனவிலே வருவாய் போற்றி ஓம்!
ஓம் கருத்திலே நுழைவாய் போற்றி ஓம்!
ஓம் மக்களைக் காப்பாய் போற்றி ஓம்!
ஓம் மனநோயைத் தவிர்ப்பாய் போற்றி ஓம்!
ஓம் எத்திசையும் ஆனாய் போற்றி ஓம்!
ஓம் இதயமாம் வீணை போற்றி ஓம்!
ஓம் உருக்கமே ஒளியே போற்றி ஓம்!
ஓம் உள்ளுறை விருந்தே போற்றி ஓம்!
ஓம் மலப்பிணி தவிர்ப்பாய் போற்றி ஓம்!
ஓம் மனங்கனிந்து அருள்வாய் போற்றி ஓம்!
ஓம் நாதமே நலமே போற்றி ஓம்!
ஓம் நளின மலர் அமர்வாய் போற்றி ஓம்!
ஓம் ஒற்றுமை சொல்வாய் போற்றி ஓம்!
ஓம் உயர்நெறி தருவாய் போற்றி ஓம்!
ஓம் நித்தமுங் காப்பாய் போற்றி ஓம்!
ஓம் நேரமும் ஆள்வாய் போற்றி ஓம்!
ஓம் பத்தினி பணிந்தோம் போற்றி ஓம்!
ஓம் பாரமே உனக்கே போற்றி ஓம்!
ஓம் வித்தையே விளக்கே போற்றி ஓம்!
ஓம் விந்தையே தாயே போற்றி ஓம்!
ஓம் ஏழையர் அன்னை போற்றி ஓம்!
ஓம் ஏங்குவோர் துணையே போற்றி ஓம்!
ஓம் காலனைப் பகைத்தாய் போற்றி ஓம்!
ஓம் கண்மணி ஆனாய் போற்றி ஓம்!
ஓம் சத்தியப் பொருளே போற்றி ஓம்!
ஓம் சங்கடந் தவிர்ப்பாய் போற்றி ஓம்!
ஓம் தத்துவச் சுரங்கமே போற்றி ஓம்!
ஓம் தாய்மையின் விளக்கமே போற்றி ஓம்!
ஓம் ஆறாதார நிலையே போற்றி ஓம்!
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

 

அன்னை அகிலாண்டேஸ்வரி  போற்றி


ஓம் அன்னையே அகிலாண்டேஸ்வரியே போற்றி
ஓம் அன்னத்தைப் பழிக்கும் நடையுடைய ஹம்ஸத்வனியே போற்றி
ஓம் அறிவிலா மூடன் எனக் கனுகி ரகிப்பாய் போற்றி
ஓம் அறுபத்தி நான்கு கலைகளுக்கும் அதிபதியே போற்றி
ஓம் அபயமளிக்கும் அபயாம்பிகையே போற்றி
ஓம் அழகுக் கடலான அங்கயற்கண்ணி போற்றி
ஓம் அழகிய ஸ்தன பாரங்களையுடைய அம்பிகே போற்றி
ஓம் அக்கினியாய் அருள் செய்யும் ஆவுடையே போற்றி
ஓம் ஆதி சக்தியானவளே ஆதரிப்பாய் போற்றி
ஓம் ஆதியந்த மற்ற பரம்பொருளே போற்றி
ஓம் ஆழமான பார்வையையுடைய அபிராமி போற்றி
ஓம் இன்பங்களெல்லாம் தந்தருள்வாய் ஈஸ்வரியே போற்றி
ஓம் இருளைப் போக்கி ஒளியைத் தரும் ஜோதியே போற்றி
ஓம் இரத்த பீஜனை சம்கரித்த பத்ரகாளி போற்றி
ஓம் இரவை ஏற்படுத்தும் சௌகந்திகா போற்றி
ஓம் ஈசனின் இடப்பக்கம் அமர்ந்தவளே போற்றி
ஓம் உம்பர்களுக்கு உவப்பளித்த உலகமாதா போற்றி
ஓம் ஊசிமேல் தவமிருந்த உலகநாயகியே போற்றி
ஓம் ஊனிலும் உயிரிலும் கலந்த உமையே போற்றி
ஓம் எங்கும் நிறைந்தவளே ஏகாட்சரி போற்றி
ஓம் என் இதயமே கோவிலாய் கொள்ளுவாய் போற்றி
ஓம் எல்லையற்ற குணநிதியே! ஏகாம்பரி போற்றி
ஓம் என்றும் பதினாறாய் விளங்கும் ஏலங்குழலி போற்றி
ஓம் ஏது செய்வேன் ஆதரிக்கும் நாயகியே போற்றி
ஓம் ஏழேழு பிறவியிலும் எனைக் காப்பாய் போற்றி
ஓம் ஐங்கரனைப் பெற்ற அன்ன பூரணியே போற்றி
ஓம் ஐசுவரியத்தை அள்ளித்தரும் சோமசுந்தரியே போற்றி
ஓம் ஒன்றே பலவான ஓங்காரி போற்றி
ஓம் என்னும் எழுத்திலே உறைந்தவளே போற்றி
ஓம் ஒளடதமாய் அங்கிருந்து ஆதரிப்பாய் போற்றி
ஓம் கயிலையில் வாழும் கற்பகமே போற்றி
ஓம் கரும்பு வில்லைக் கையில்கொண்ட கல்யாணி போற்றி
ஓம் கங்கா நதிக்கரை வாழும் விசாலாட்சி போற்றி
ஓம் காமேச்வரன் மகிழும் காமேச்வரி போற்றி
ஓம் காமத்தை ஜெயித்தக் காமாட்சி போற்றி
ஓம் கிளியைக் கையில் கொண்ட கின்னரரூபி போற்றி
ஓம் குதர்க்கமில்லா மனம்தருவாய் கோலவிழி போற்றி
ஓம் குவலயத்தை ரட்சிக்கும் கோமதி போற்றி
ஓம் குங்குமப்பூ நிறத்தாளே குமரியே போற்றி
ஓம் குகனைப் பெற்ற உமாதேவி போற்றி
ஓம் கேசவனின் தங்கையான ராஜ ராஜேஸ்வரி போற்றி
ஓம் கேட்டவர்க்கு வரமளிக்கும் காந்திமதியே போற்றி
ஓம் கோடி சூர்யப்ரகாச வதனி போற்றி
ஓம் சண்டமுண்டனை சம்கரித்த சாமுண்டி போற்றி
ஓம் சப்த,ஸ்பரிச,ரூப,ரஸ,கந்தங்களைப் பாணங்களாய் தரித்தவளே போற்றி
ஓம் சத்துருக்களை ஒடுக்கும் சாரதையே போற்றி
ஓம் சங்கரன் பாதம் பணியம் சமயாம்பா போற்றி
ஓம் சபேசனோடு நடமிடும் சிவகாமி போற்றி
ஓம் சிவசக்தி ஐக்கிய ஸ்வரூபிணி போற்றி
ஓம் சிந்தித்ததை அளிக்கவல்ல சிந்தாமணியே போற்றி
ஓம் சிரித்துப் புரமெரித்த சிவப்பிரியே போற்றி
ஓம் சிவனையே சோதித்த சாம்பவி போற்றி
ஓம் சீர்காழியில் உறையும் திரிபுர சுந்தரியே போற்றி
ஓம் கம்ப நிசும்பரை வதைத்த துர்க்காதேவி போற்றி
ஓம் சூதறியா பாலகன் நான் துணையிருப்பாய் போற்றி
ஓம் சூரிய சந்திரர்களை தாடங்கமாய் அணிந்த அகிலாண்டேஸ்வரி போற்றி
ஓம் செல்வமே வடிவான சௌந்தரி போற்றி
ஓம் சொக்கருக்கு மாலையிட்ட மீனாம்பிகே போற்றி
ஓம் சௌபாக்கியத்தைத் தரும் சௌதாமினி போற்றி
ஓம் சௌந்தர்யத்தின் பிறப்பிடமாம் சியாமளையே போற்றி
ஓம் ஞான சம்பந்தருக்கு அருளிய சிவசங்கரி போற்றி
ஓம் ஞானத்தை அளிக்கும் ஞானாம்பிகே போற்றி
ஓம் தட்சனுக்காக வாதிட்ட தாட்சாயிணி போற்றி
ஓம் தனங்களை அள்ளித்தரும் தயாமித்ரையே போற்றி
ஓம் திக்விஜயம் செய்த தடாதகை தேவியே போற்றி
ஓம் தில்லையில் தாண்டவமிடும் சபேசினி போற்றி
ஓம் தீராவினை தீர்க்கும் தியாகேஸ்வரி போற்றி
ஓம் துஷ்டர்களுக்கு அச்சத்தை தருபவளே போற்றி
ஓம் தூய என் நெஞ்சிலே துணையிருப்பாய் போற்றி
ஓம் தேன்போன்ற குரலுடைய தர்மாம்பிகா போற்றி
ஓம் தேவாதி தேவர்களின் ஸேவிதையே போற்றி
ஓம் தேடிவந்து ரட்சிக்கும் கிருபாகரி போற்றி
ஓம் தை வெள்ளியிலே ஊஞ்சலிலே ஆடிடுவாய் போற்றி
ஓம் தொண்டர்களின் உள்ளமெல்லாம் குடியிருப்பாய் போற்றி
ஓம் தோகையே! தூயமணி மரகதமே போற்றி
ஓம் நவநிதிகளின் இருப்பிடமான நவாட்சரி போற்றி
ஓம் நாடெல்லாம் நயந்து அன்பு காட்டும் நிமலையே போற்றி
ஓம் நாத வடிவானவளே நிரஞ்சனியே போற்றி
ஓம் நிரந்தரமாய் ஆனந்தத்தைத்தரும் நிர்குணமே போற்றி
ஓம் பண்டாசுரனை வதைத்த பாலாம்பிகே போற்றி
ஓம் பர்வத ராஜன் மகளான பார்வதியே போற்றி
ஓம் பகலை உண்டாக்கிய பஞ்சாட்சரி போற்றி
ஓம் பதினாறு பேறுகளையும் அளிக்கவல்ல பதிவிரதே போற்றி
ஓம் பாபம் தொலைப்பவளே பராத்பரி போற்றி
ஓம் பிறப்பறுக்க வந்த புவனேஸ்வரி போற்றி
ஓம் பிணி தீர்க்கும் நாயகி பரமேஸ்வரி போற்றி
ஓம் பிரளய காலத்திலும் பிரகாசிக்கும் பைரவி போற்றி
ஓம் பீஜாட்சரத்தில் உறையும் பத்ராயை போற்றி
ஓம் பூதப்ரேத பைசாசங்களிடமிருந்து காப்பாற்றும் வாராஹி போற்றி
ஓம் பை நாகங்களை ஆபரணமாய் அணிந்தவளே போற்றி
ஓம் மஹிஷாசுரனை வதைத்த மர்த்தனியே போற்றி
ஓம் மலையாள தேசம் வாழும் மஹேஸ்வரி போற்றி
ஓம் மலையத்துவஜன் யாகத்தில் தோன்றிய அங்கயற்கண்ணி போற்றி
ஓம் மதுரமான சிரிப்பை உடைய மதுரகாளி போற்றி
ஓம் மனதுக்கும் வாக்குக்கும் எட்டாத மதனசுந்தரி போற்றி
ஓம் மலைவாழையை தோற்கடிக்கும் துடையையுடைய மகாராக்ஞி போற்றி
ஓம் மங்களத்தைக் கொடுக்கும் மங்களாம்பிகா போற்றி
ஓம் மன்மதனை ஆளும் மகா மாயா போற்றி
ஓம் மதங்க முனிவரின் தவப்பலனாகப் பிறந்த மாதங்கி போற்றி
ஓம் மந்தகாச முகமுடைய மலர் வதனி போற்றி
ஓம் மாரியாய் அருள் புரியும் கருமாரி போற்றி
ஓம் மின்னல் கொடி போன்ற மனோன்மணியே போற்றி
ஓம் மீனைப் போன்ற கண் படைத்த மீனாட்சி போற்றி
ஓம் மூன்று குணங்களை உடைய மூகாம்பிகை போற்றி
ஓம் மேகம் போன்ற கூந்தலை உடைய மதுமதியே போற்றி
ஓம் மோகத்தை வெல்ல வைக்கும் மாயாதேவி போற்றி
ஓம் ஜலமயமான அம்ருதேஸ்வரி போற்றி
ஓம் ஸ்ரீ சக்கரத்தில் வாழும் ஸ்ரீ லலிதாம்பா போற்றி



அங்காளபரமேஸ்வரி  போற்றி


ஓம் அங்காளீஸ்வரியாயினி போற்றி
ஓம் அம்ச பிரகாயினி போற்றி
ஓம் அம்பிகாயாயினி போற்றி
ஓம் நவபஞ்சனியாய போற்றி
ஓம் ஆதிலக்ஷ்மியாய போற்றி
ஓம் குருசாந்தியே போற்றி
ஓம் குருநாராயணி போற்றி
ஓம் பஞ்சமூர்த்தியே போற்றி
ஓம் பரமேஸ்வரியே போற்றி
ஓம் பவ்யாயினி போற்றி
ஓம் பராசக்தி போற்றி
ஓம் அங்காளீஸ்வரி போற்றி
ஓம் ஆதியே போற்றி
ஓம் மகாதேவித்யை போற்றி
ஓம் மகாதேவியே போற்றி
ஓம் மகாகாளியை போற்றி
ஓம் காமப்பிரியாயை போற்றி
ஓம் காமினியை போற்றி
ஓம் அஸ்டவர்க்காயை போற்றி
ஓம் அம்பிகையே போற்றி
ஓம் அனுப்பிரியை போற்றி
ஓம் அங்கபூரணியை போற்றி
ஓம் நாரணி போற்றி
ஓம் நவசக்தியாயினி போற்றி
ஓம் பஞ்சசக்தியாயினி போற்றி
ஓம் இப்பிரித்யை போற்றி
ஓம் பிரவதாயை போற்றி
ஓம் பிரம்மகுருவை போற்றி
ஓம் பிரம்மாட்ஷியை போற்றி
ஓம் இப்பிருர்த்யை போற்றி
ஓம் ஆதித்யை போற்றி
ஓம் மஹாத்யை போற்றி
ஓம் மாலினியை போற்றி
ஓம் குங்மாயை போற்றி
ஓம் ஷிவாயனியை போற்றி
ஓம் சக்தியாயினியை போற்றி
ஓம் சூலதாரியை போற்றி
ஓம் கபாலதாரினியை போற்றி
ஓம் கத்தியாயினி போற்றி
ஓம் காத்யாயினி போற்றி
ஓம் சித்தியாயினி போற்றி
ஓம் அங்கபூரணியாயினி போற்றி
ஓம் அகிலாண்ட நாயகி போற்றி
ஓம் பரமாத்மாயினி போற்றி
ஓம் திவிதாயினி போற்றி
ஓம் தீட்சதாயினி போற்றி
ஓம் திலிமங்களாயினி போற்றி
ஓம் தீப்தாயினி போற்றி
ஓம் பிரஷ்டி போற்றி
ஓம் பிவாட்சியண்யை போற்றி
ஓம் நமன்ஷிண்யை போற்றி
ஓம் நவகோடியை போற்றி
ஓம் நவப்பிரதாயை போற்றி
ஓம் நளாட்சியை போற்றி
ஓம் மஞ்சுளா போற்றி
ஓம் சக்தியாயினி போற்றி
ஓம் மகாபதாயை போற்றி
ஓம் மகாட்சியை போற்றி
ஓம் மனோ பீஜாயை போற்றி
ஓம் மாமங்கு ஜாயை போற்றி
ஓம் அம்சவதாயை போற்றி
ஓம் அங்காளியை போற்றி
ஓம் திலிதாங்காயை போற்றி
ஓம் திவிமங்களாயை போற்றி
ஓம் திருபூஜாம்பதியை போற்றி
ஓம் திருமாத்யை போற்றி
ஓம் திரிசூலியே போற்றி
ஓம் திவ்யை போற்றி
ஓம் திருமஞ்சதை போற்றி
ஓம் குமாயை போற்றி
ஓம் தேவியை போற்றி
ஓம் காளியை போற்றி
ஓம் சிவாயை போற்றி
ஓம் அனுப்பிரியை போற்றி
ஓம் ஆத்மாயை போற்றி
ஓம் ஆத்யை போற்றி
ஓம் பவ்யை போற்றி
ஓம் பாதித்யை போற்றி
ஓம் அனுப்பிரியையாயை போற்றி
ஓம் காமாயை போற்றி
ஓம் காலதரியை போற்றி
ஓம் காத்யாயினி போற்றி
ஓம் அம்சவதாயை போற்றி
ஓம் பிரபாயை போற்றி
ஓம் பரபதியை போற்றி
ஓம் பிங்களாயை போற்றி
ஓம் பிரத்யை போற்றி
ஓம் அனுஷ்டாயை போற்றி
ஓம் தேவித்யை போற்றி
ஓம் ஆதித்யை போற்றி
ஓம் மாரித்யை போற்றி
ஓம் மகாபலாயை போற்றி
ஓம் மகாசக்தியை போற்றி
ஓம் மனோகரியை போற்றி
ஓம் ஆதிபராசக்தியே போற்றி
ஓம் அம்சாயை போற்றி
ஓம் ஆத்ம பிரத்யை போற்றி
ஓம் அனுப்பிரயை போற்றி
ஓம் அனுமந்தாயை போற்றி
ஓம் சிவஹரியை போற்றி
ஓம் வராகியை போற்றி
ஓம் வம்ச பிரத்யை போற்றி
ஓம் அகம் பூஜிதாயை போற்றி
ஓம் அங்காளீஸ்வரியே போற்றி
ஓம் ஈஸ்வரியே போற்றி
ஓம் மீனாட்சியே போற்றி
ஓம் காமாட்சியே போற்றி
ஓம் விசாலாட்சியே போற்றி