Wednesday, December 29, 2010

வாழ்வில் உயர எந்நாளும் சொல்வோம்

காலையில் எழுந்திருக்கும் போது :-
அண்ணாமலை எம் அண்ணா போற்றிகண்ணார் அமுதக் கடலே போற்றி

குளிக்கும் போது :-
சடையிடைக் கங்கை தரித்தாய் போற்றி

கோபுர தரிசனம் காணும் போது :-
தென்னாடுடைய சிவனே போற்றிஎந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

வீட்டைவிட்டு வெளியில் செல்லும் போது :-
காவாய் கனகக் குன்றே போற்றிஆவா எந்தனக்கு அருளாய் போற்றி

நண்பரைக் காணும் போது :-
தோழா போற்றி துணைவா போற்றி

கடை திறக்கும் போது :-
வாழ்வே போற்றி என் வைப்பே போற்றி

நிலத்தில் அமரும் போது :-
பாரிடை ஐந்தாய் பரந்தாய் போற்றி

நீர் அருந்தும் போது :-
நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி

அடுப்பு பற்ற வைக்கும் போது :-
தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி

உணவு உண்ணும் போது :-
தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி
இன்றெனக்கு ஆரமுதம் ஆனாய் போற்றி

மனதில் அச்சம் ஏற்படும் போது :-
அஞ்சேல் என்றிங்கு அருளாய் போற்றி

உறங்கும் போது :-
ஆடக மதுரை அரசே போற்றி
கூடல் இலங்கு குருமணி போற்றி

நாமீயை விட நாமத்துக்கே ப்ராபாவம் ஜாஸ்தி

காலையில் துயிலெழும் போது :-
"ஹரிர் ஹரி ஹரிர் ஹரி"என்று ஏழு தடவை சொல்ல வேண்டும்.

வெளியே புறப்பட்டுப் போகும் போது :-
"கேசவா"என்று சொல்ல வேண்டும். "கேசவா" என்று சொன்னால் இடர்கள் எல்லாம் கெடும்.

உணவு உட்கொள்ளும் போது :-
"கோவிந்தா"என்று சொல்லிவிட்டுச் சாப்பிட வேண்டும்.

இரவு படுக்கச் செல்லும் போது :-
"மாதவா"என்று கூற வேண்டும்.

மந்திர உச்சாடனம் மந்திர உச்சாடனம்

"ஓம்"கார நமசிவாய "மூலமந்திரம்"
ஓம் ஓம்கார நமசிவாய ஓம் நகாராய நமசிவாய‌
ஓம் மகாராய நமசிவாய ஓம் சிகாராய நமசிவாய
ஓம் வகாராய நமசிவாய ஓம் யகாராய நமசிவாய
ஓம் நம ;
ஸ்ரீ குரு தேவாய, பரமபுருஷாய ஸர்வ தேவதா வசீகராய‌
ஸர்வாரிஷ்ட விநாசாய ஸர்வ துர்மந்தரச் சேதனாய
த்ரை லோக்யம் வசமாய ஸ்வாஹா।


இந்த மந்திரத்தை தொடர்ந்து ஜபித்து வர சற்குரு அமைவார்।ஈசன் அருளால் அனைத்தும் கைவரப் பெறலாம்। தோல்வியே கிடையாது। புகழ் பெறுவர்। வசீகர சக்தி கிடைக்கும்।துஷ்ட சக்திகள் ஆண்டாது।

"ஓம் அகத்தீசாய நம‌
ஓம் நந்தீசாய நம‌
ஓம் திருமூலதேவாய நம‌
ஓம் கரூவூர் தேவாய நம‌"



ஓம் ஸ்ரீ ஷீரடி சாயிபாபா:-

ஓம் ஸ்ரீ ஸமர்த்த ஸத்குரு ஸாயிநாதாய நம!



"அருணாசல, அருணாசல, அருணாசல பாஹிமாம்
அருணாசல, அருணாசல, அருணாசல ரட்சமாம்"


மஹாதேவம் மஹேசானம் மஹேச்வரம் உமாபதிம்
மஹாஸேனகுரும் வந்தே மஹாபய நிவாரணம்!!


சிவம் சிவகரம் சாந்தம் சிவாத்மானம் சிவோத்தமம்
சிவமார்கப்ரணே தாரம் ப்ரணதோஸ்மி ஸ்தாசிவம்!!

பெருமாள் தமிழ் மந்திரம்
"அரியே, அரியே, அனைத்தும் அரியே!
அறியேன் அறியே அரிதிருமாலை
அறிதல் வேண்டி அடியேன் சரணம்"

திருமால் நெறிவாழி! திருத்தொண்டர் செயல் வாழி!


"தர நக சிவ உரு சிவா சிவா"

ஓம் அண்ணாமலை அரசே போற்றி!
ஓம் உண்ணாமுலை உவந்தாய் போற்றி!!


அருட்பெருஞ்ஜோதி! அருட்பெருஞ்ஜோதி!!
தனிப்பெருங்கருணை! அருட்பெருஞ்ஜோதி!!


ஓம் ஸ்ரீ குரு ராகவேந்தராய நமஹ‌



"ஓம் நமோ நாராயணாய"



"ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஆதி ச‌க்தி ம‌கா ச‌க்தி ப‌ராச‌க்தி ஓம்"

ஓம் ஸ்ரீ சரஸ்வதி ஸ்லோகங்கள்

ஓம் ஸ்ரீ சரஸ்வதி ஸ்லோகங்கள் :-"ஓம் வாக்தேவ்யை நம"

ஓம் ஸ்ரீ மகாஸரஸ்வதி மந்திரம்:-ஓம் ஐம் ஹ்ரீம் க்லீம் சரஸ்வதியைபுத ஜனன்னியை ஸ்வாஹா

கம்ப்யூட்டர் துறையில் உலகம் வியக்க, மாபெரும் சாதனை புரிய தினந்தோறும் 1008 முறை ஜெபிக்க வேண்டிய ஸ்லோகம் :-ஸ்ரீ அணுராதாக்ரமண ஸரஸ்வத்யை நம‌
ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என்னம்மை தூய‌
உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே
இருப்பளிங்கு வாராது இடர்.

Monday, December 13, 2010

சகல ஐஸ்வரியங்கள் தரும் அஷ்டலட்சுமி!

ஆதிலட்சுமி: ஸ்ரீமத் நாராயணனோடு வைகுண்டத்தில் உறையும் இவளே, ரமா; மஹாவிஷ்ணுவுக்குப் பணிவிடை செய்வாள்; அன்னை லட்சுமியின் முதல் வெளிப்பாடு.

தானியலட்சுமி: தானியங்கள், கூலங்கள், காய்கனிகள், உணவுப் பொருட்கள் ஆகியவற்றின் நாயகி.

தைர்யலட்சுமி: துணிவும் நேர்மையும் தருபவள்.

கஜலட்சுமி: பாற்கடல் கடைந்தபோது, இவ்வடிவத்தில் லட்சுமி எழுந்தருளியதாக வேதவியாசர் குறிப்பிடுகிறார். முழுதும் மலர்ந்த தாமரைமீது அவள் அமர்ந்திருக்க, யானைகள் பால் கலசங்களிலிருந்து அவள்மீது பாலைப் பொழிந்து அபிஷேகிக்க, கரங்களில் தாமரை ஏந்தி, எல்லையற்ற கருணையோடு காட்சி தருகிறாள்.

சந்தானலட்சுமி: குழந்தைச் செல்வமும், நிரந்தரச் செழுமையும் தருபவள்.

விஜயலட்சுமி: வெற்றி தேவதை.

தனலட்சுமி: பொருட்செல்வம் அருள்பவள்.

வித்யாலட்சுமி: அறிவும் கல்வியும் ஞானமும் வழங்குபவள். எட்டு வகையாகப் பார்க்கப்பட்டாலும், அவளே ஆதிசக்தி.