Monday, December 13, 2010

சகல ஐஸ்வரியங்கள் தரும் அஷ்டலட்சுமி!

ஆதிலட்சுமி: ஸ்ரீமத் நாராயணனோடு வைகுண்டத்தில் உறையும் இவளே, ரமா; மஹாவிஷ்ணுவுக்குப் பணிவிடை செய்வாள்; அன்னை லட்சுமியின் முதல் வெளிப்பாடு.

தானியலட்சுமி: தானியங்கள், கூலங்கள், காய்கனிகள், உணவுப் பொருட்கள் ஆகியவற்றின் நாயகி.

தைர்யலட்சுமி: துணிவும் நேர்மையும் தருபவள்.

கஜலட்சுமி: பாற்கடல் கடைந்தபோது, இவ்வடிவத்தில் லட்சுமி எழுந்தருளியதாக வேதவியாசர் குறிப்பிடுகிறார். முழுதும் மலர்ந்த தாமரைமீது அவள் அமர்ந்திருக்க, யானைகள் பால் கலசங்களிலிருந்து அவள்மீது பாலைப் பொழிந்து அபிஷேகிக்க, கரங்களில் தாமரை ஏந்தி, எல்லையற்ற கருணையோடு காட்சி தருகிறாள்.

சந்தானலட்சுமி: குழந்தைச் செல்வமும், நிரந்தரச் செழுமையும் தருபவள்.

விஜயலட்சுமி: வெற்றி தேவதை.

தனலட்சுமி: பொருட்செல்வம் அருள்பவள்.

வித்யாலட்சுமி: அறிவும் கல்வியும் ஞானமும் வழங்குபவள். எட்டு வகையாகப் பார்க்கப்பட்டாலும், அவளே ஆதிசக்தி.

No comments:

Post a Comment