Sunday, January 31, 2016

பிறவியும், உயர்வும்

பிறவியில் உயர்வு அடைபவர் மூவர்;
பிறவியினாலேயே உயர்ந்தவர்கள்,
பிறவியில் முயன்று உயர்ந்தவர்கள்,
பிறவியில் உயர்வுக்கு உந்தப்பட்டவர்கள்!

உயர் குலத்தில் உதித்ததால் மட்டுமே
உயர்ந்துவிடுவர் சில பாக்கியசாலிகள்;
உயர்ந்த முயற்சிகள் இல்லாமலேயே,
உயர்வை அடைந்துவிடுவார் இவர்கள்.

முயன்றும் முட்டி மோதிக்கொண்டும்,
முனைப்பினாலும், கடின உழைப்பினாலும்,
அல்லல்கள் பல உற்று, மனிதர்கள் சிலர்
அடைவர் உயரிய நிலை ஒன்றினை.

மூன்றாம் வகையினர் மாறுபட்டவர்.
வேண்டாம் என்று ஓடினாலும், விதி
விடாமல் துரத்திப் பிடித்து, அவர்களை
வேந்தர்கள் ஆக்கிவிடும் அவனியில்.

பிறவியால் கிடைத்த உயர்வும் சரி,
விதியால் விளைந்த உயர்வும் சரி,
அழிந்து போகலாம்; ஆனால் அழியாது
உழைப்பால் விளைந்த உன்னத உயர்வு!

No comments:

Post a Comment