Wednesday, September 21, 2016

ஆன்மா

ஆன்மா என்பது ஓா் ஆற்றல் அல்ல
அது எண்ணமும் அல்ல;
ஆனால் அதுவே எண்ணத்தை தோற்றுவிப்பது.
அது உடலும் அல்ல;
ஆனால் அதுவே உடலை தோற்றுவிப்பது.
ஏன் அப்படி?
ஏனெனில், உடலுக்கு அறிவு இல்லை
எண்ணங்களும் அவ்வாறே.
அறிவு என்பதன் பொருள் என்ன?
எதிா்செயல் புாிவது.
ஒரு பொருளை பாா்க்கிறிா்கள்
எப்படி அதை அறிகிறோம்.
முதலில் உடல்.
இரண்டாவது மனம்
மூன்றாவது மனதிற்கு பின்னால் ஆன்மா இருக்கிறது.
இந்த ஆன்மாதான் அறிவொளி உண்டாக்குவது.
மனம் ஆன்மாவின் கருவி மட்டுமே.
இந்த உடல் பலவகை சேர்க்கையான கூட்டுபொருள்.
ஆன்மா எந்த சோ்க்கையும் இல்லாதது
தன்னிச்சையானது.
எதனாலும் பாதிக்கபடாதது.
அது எங்கும் நிறைந்தது.
அனைத்திற்கும் காரணமாக இருந்தாலும், எதன் காரணமாகவும்
அது உருவாகவில்லை.
அது என்றும் சுதந்திரமானது.
நாமே அந்த ஆன்மா!
ஆகவே நாம் பிரபஞ்சம் முழுவதும் நிறைந்திருக்கிறோம்.
அப்படியானால்,
நான் பிறந்திருக்கிறேன்.
நான் இறக்கபோகிறேன்.
என்பதற்கு என்ன அா்த்தம்?
இவையெல்லாம் அறியாமையால்
பேசும் பேச்சுக்கள்.
மன மயக்கங்கள்!
சரீரத்தால் ஏற்படும் மாறுதலால் ஏற்படும் மயக்கங்களே.
ஆகவே நாம் பிறப்பு, இறப்பு அற்றவா்கள். நாம் பிறப்பதுமில்லை
நாம் இறப்பதுமில்லை.

No comments:

Post a Comment