Sunday, August 16, 2015

முன்னோருக்கு திதி கொடுப்பது எதற்காக?

வரும் 14ம் தேதி ஆடிஅமாவாசை வருகிறது. அன்று முன்னோர்களுக்கு திதி கொடுப்பது பற்றி விளக்கம் அளிக்கிறார் சத்குரு ஜக்கிவாசுதேவ்.அவர் சொல்வதைக் கேளுங்கள்.உங்கள் தாத்தாவோ, அப்பாவோ இறந்து விட்டார்கள். அவர்கள் உயிரோடு இருந்த காலத்தில் அவர்களை நீங்கள் விரும்பலாம், விரும்பாமலும் இருக்கலாம். ஆனால், இந்த உடலைக் கொடுத்தவர்கள் அவர்கள் தானே. நாம் உலகில் வாழ்வதற்கு முக்கியமான உடலைக் கொடுத்ததற்கு இதயத்தில் நன்றியுணர்வு காட்ட வேண்ட வேண்டும். அவர்களை நீங்கள் ஆணியில் அடித்து சுவரில் தொங்க விட்டு (போட்டோ) மறந்துவிடுகிறீர்கள். குறைந்த பட்சம் வருடத்திற்கு ஒருமுறையாவது அவர்களின் நினைவாக ஏதாவது செய்ய வேண்டும். அவர்களின் நினைவு நாளில் காகம், பசு போன்றவற்றிற்கு உணவிடுவது மிகவும் நல்லது. அவ்வாறு செய்வது உங்களுக்கு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். இந்நாளில் 50, 100 ஏழைகளுக்கு நீங்கள் உணவுஅளிக்கலாம். இப்படிசெய்தா, இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடையுமோ, அடையாதோ தெரியாது. ஆனால், நிச்சயம் உங்களின் ஆத்மா சாந்தி பெறும். அதுதான் முக்கியமானது.வாழ்க்கை முடிந்தவர்களின் ஆத்மாவைப் பற்றிச்சிந்திப்பதை விட உங்களின் ஆத்மா நன்மை பெறவே, இதுபோன்ற சடங்குகள் உருவாக்கப்பட்டன.

No comments:

Post a Comment