Tuesday, September 15, 2015

விநாயகருக்கு தோப்புக்கரணம் போட்டு, நெற்றியில் குட்டி வழிபடுவது ஏன்?

விநாயகருக்கு நாம் தோப்புக்கரணம் போட்டு, நெற்றியில் குட்டிக் கொள்கிறோம். இதனால் உடலில் சுறுசுறுப்பு ஏற்படுகிறது. தியானம் செய்பவர்கள்  தலையில் குட்டி விநாயகரை வழிபட்டால் மன ஒருமைப்பாடு ஏற்படும் என்பது நம்பிக்கை. இதற்கு ஒரு புராணக்கதை உண்டு.அகத்தியர்  கொண்டுவந்த கமண்டலத்தை காகம் வடிவெடுத்து வந்த விநாயகர் கவிழ்த்தார். பின், ஒரு அந்தணச் சிறுவனின் வடிவத்தில் அகத்தியர் முன்பு வந்து  நின்றார். கோபம் கொண்ட அகத்தியர் விநாயகரின் தலையில் குட்டினார். அப்போது விநாயகர் சுயரூபம் எடுத்து உலக நன்மைக்காககாவிரி நதியை  உருவாக்க அவ்வாறு செய்ததாக கூறினார். அகத்தியர் தன் தவறுக்காக வருந்தி தன் தலையிலேயே குட்டிக்கொண்டார். அன்று முதல் விநாயகருக்கு  தலையில் குட்டி வழிபடும் வழக்கம் ஏற்பட்டது. கஜமுகாசுரன் என்ற அசுரன் தேவர்களை அடிமைப்படுத்தி தனக்கு தோப்புக்கரணம் போட  வைத்தான். விநாயகர் அவனை அழித்து தேவர்களை பாதுகாத்தார். அசுரன் முன் போட்டதோப்புகரணத்தை விநாயகர் முன்பக்தியுடன் தேவர்கள் ÷ பாட்டனர்.அன்று முதல் தோப்புக்கரணம் போடும் பழக்கம் வந்தது. அறிவியல் ரீதியாக தோப்புக்கரணம் போடுவதாலும், நெற்றியில்குட்டிக்  கொள்வதாலும் நம் உடலில் உள்ள  சுஷûம்னா என்ற நாடிதட்டி எழுப்பப்படுகிறது. அதிலிருக்கும் அமிர்த கலசம் மேலே எழும்பி அமிர்தம்  முழுவதும் உடலில் பரவுகிறது.இதனால் மன எழுச்சியும்,சுறுசுறுப்பும் உண்டாகிறது.

No comments:

Post a Comment