Tuesday, September 15, 2015

கஷ்டமா... ஆண்டவனிடம் மட்டும் சொல்லுங்க!



* நாம் பலவீனர்கள் ஆவோம்.
* நம் பலவீனம் மற்றவர்களுக்குத் தெரிந்தால் நமது பலத்தை இழப்பதுடன், அவர்களது அடக்குமுறைக்கும் ஆளாவோம்.
* நமக்கு கிடைக்கும் வருமானம், புகழ் ஆகியவற்றைக் கண்டு பிறர் மகிழ்வதை விட பொறாமையே கொள்வர். அவர்களின் பார்வை நம் வாழ்வில்  பின்னடைவை ஏற்படுத்தும்.
* பிறரிடம் கருத்துப் பரிமாற்றம் செய்தால், நம் பிரச்னைகளின் தீவிரம் குறையும் என்பது சரியான கருத்தாக முடியாது. கணவன் மனைவியிடமும்,  மனைவி கணவனிடமும் கருத்து பரிமாற்றம் செய்து கொள்ளலாம். 
* திருமணத்துக்கு முன்பு தாயிடம் கருத்து பரிமாற்றம் செய்யலாம்.
* இதையெல்லாம் விட நமது சோதனைகள், வேதனைகள், இன்பங்கள்,நாம் பட்ட அவமானங்கள் எல்லாவற்றையும் ஆண்டவனிடம் மனம் திறந்து  சொல்லுங்கள். உங்களுக்கு மனஅமைதி உறுதியாகக் கிடைக்கும்.
* மனஅமைதி இல்லாத போது, நல்ல நுõல்களைப் படியுங்கள். நம்பிக்கை தரும் நுõல்களைப் படியுங்கள். ஆன்மிக சொற்பொழிவுகளுக்குச் சென்று,  நல்லுரைகளைக் கேளுங்கள். மனம் ஆனந்தமடையும்.

No comments:

Post a Comment