Thursday, August 6, 2015

ஒன்பது வாரம் படித்தால் ஓகோவென வாழலாம்!

லோக மாதாவான அம்பிகைக்குரிய பாராயணத் துதிகளில் மங்களசண்டிகை மகிமை வாய்ந்தது. இதனை ஆடி செவ்வாய், வெள்ளியன்று படித்தால் தீர்க்க சுமங்கலி பாக்கியம் உண்டாகும். ஏதாவது கோரிக்கை வைத்து ஒன்பது செவ்வாய்க்கிழமை தொடர்ந்து படித்தால் அது நிறைவேறி ஓகோவென வாழலாம்.

ரக்ஷ ரக்ஷ ஜகன் மாதா
சர்வ சக்தி ஜெய துர்கா
ரக்ஷ ரக்ஷ ஜகன் மாதா
சர்வ சக்தி ஜெய துர்கா 
மங்கள வாரம் சொல்லிட வேண்டும்
மங்கள கன்னிகை ஸ்லோகம் இதை
ஒன்பது வாரம் சொல்லுவதாலே
உமையவள் திருவருள் சேரும்
படைப்பவள் அவளே
காப்பவள் அவளே
அழிப்பவள் அவளே சக்தி - அபயம்
என்று அவளை சரண் புகுந்தாலே
அடைக்கலம் அவளே சக்தி - 
ஜயஜயசங்கரி கவுரி மனோகரி 
அபயம் அளிப்பவள் அம்பிகை பைரவி 
சிவ சிவ சங்கரி சக்தி மகேஸ்வரி 
திருவருள் தருவாள் தேவி
கருணையில் கங்கை, கண்ணனின் தங்கை
கடைக்கண் திறந்தால் போதும்
வருவினை தீரும், பழவினை ஓடும்
அருள் மழை பொழிபவள் - நாளும்
நீலநிறத்தோடு ஞாலம் அளந்தவள்
காளி எனத் திரிசூலம் எடுத்தவள்
பக்தருக்கெல்லாம் பாதை கொடுத்தவள்
நாமம் சொன்னால் நன்மை தருபவள்
நாமம் சொன்னால் நன்மை தருபவள்

No comments:

Post a Comment