Saturday, April 25, 2015

சக்தி மிக்க ஸ்ரீசக்ரம்

அம்பிகையை யந்திர முறையில் ஸ்ரீ சக்ரம் வரைந்து வழிபடுவது சிறப்பு. அம்பாளின் சூட்சும வடிவமான ஸ்ரீ சக்ரத்தை, அம்பிகையின் முன்போ அல்லது சிலையின் அடியிலோ பிரதிஷ்டை செய்வர்."ஸ்ரீ சக்ரம்' என்பதற்கு "பெருமைமிகு சக்கரம்' என்று பொருள். ஸ்ரீசக்ரத்தில் பராசக்தியின் சக்தி மட்டுமல்ல, 64 கோடி தேவதைகளும் இருப்பதாக "தேவி புஜங்கம்' என்னும் நூல் கூறுகிறது. முற்பிறவியில் செய்த புண்ணியத்தால் மட்டுமே சக்கர வழிபாடு செய்யமுடியும். திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில், கோமதி அம்மன் சந்நிதி முன்புள்ள ஸ்ரீசக்ரம், திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரியின் காதிலுள்ள தோடு வடிவிலான ஸ்ரீசக்ரம் ஆகியவை மிகவும் சக்தி வாய்ந்தவை.

No comments:

Post a Comment