Saturday, April 25, 2015

உங்க வீட்டில் மகாலட்சுமி தங்கணுமா

பாற்கடலில் விஷ்ணுவைச் சந்திக்க நாரதர் வந்தார். அருகில் இருந்த லட்சுமியிடம், தாயே! நீ எங்கெல்லாம்  குடியிருக்க விரும்புவாய்? என்று கேட்டார்,நாரதரே! தினமும் விளக்கேற்றும் வீடு, துளசிமாடம், சங்கு, சாளக்கிராமம், தாமரை மலர், தானியக்குவியல், அன்னதானம் செய்யும் இடம், பசு கொட்டில், தயாள குணம் கொண்டவர், இனிமையாகப் பேசுபவர், சுறுசுறுப்பு மிக்கவர், தற்பெருமை இல்லாதவர், சத்திய வழி நடப்பவர், எண்ணம், சொல், செயல் மூன்றாலும் துõய்மை காப்பவர், உணவின் போது ஈரக்காலுடன் அமர்பவர், ஈரக்காலை துடைத்துவிட்டு துõங்கச் செல்பவர், உடல் சுத்தம் பேணுபவர், கூந்தலை எப்போதும் பின்னி முடித்த பெண்கள், கற்புக்கரசிகள் ஆகியோர் இருக்கும் இடங்களிலும் நிரந்தரமாக தங்கியிருப்பேன் என்றாள்.

No comments:

Post a Comment