Monday, April 20, 2015

அட்சய திரிதியை வழிபடும் முறை!

அட்சய என்ற சொல்லுக்குகுறைவில்லாதது என்று பொருள். இந்நாளில் லட்சுமி, குபேரரை வழிபட வேண்டும். விளக்கிற்கு சந்தனம், குங்குமம் இட்டு பூக்களால் அலங்கரித்து ஐந்து முகங்களையும் ஏற்ற வேண்டும். பாற்கடலில் அவதரித்தவளே! தாமரையில் வாசம் செய்பவளே! செல்வ வளத்தை தந்தருள்வாயாக! என்று வேண்டிக் கொள்ள வேண்டும். ஐந்து முகம் ஏற்றுவதன் மூலம் செல்வச்செழிப்புடன், அன்பு, மன உறுதி, நிதானம், சகிப்புத்தன்மை, சமயோசிதம் ஆகிய குணங்கள் வளரும். நகை, மஞ்சள், அரிசி, பருப்பு, உப்பு, சர்க்கரைஉள்ளிட்டமளிகைப்பொருட்கள், புத்தாடை வாங்கினால் வளமான வாழ்வு உண்டாகும்.

No comments:

Post a Comment