Saturday, February 2, 2013

வேண்டாத சிந்தனை விலக...

வேண்டாத சிந்தனைகளை மனதில் வளர்த்துக் கொண்டு சிலர் இரவும் பகலும் பயத்தில் மூழ்கிக் கிடப்பர். ஆனால், பயத்திற்கு நியாயமான காரணம் ஏதும் இருக்காது. சிலர் இன்டர்வியூ கிளம்புவார்கள். பயத்தில் நாக்கு உலர்ந்து விடும். பதில் தெரிந்தாலும், மனோதைரியக் குறைவால் சொல்ல முடியாமல் தத்தளிப்பர். சிலர் இரவில் தனியாக வீட்டில் இருக்க பயப்படுவதும் உண்டு. தேவையற்ற இந்த பயத்தில் இருந்து தப்பிக்க வழிபடவேண்டிய தெய்வம் காளி. காளியை வழிபட்டால் பயம் பஞ்சாய் பறந்து விடும். தேவையற்ற பயமுள்ளவர்கள் வெள்ளிக்கிழமைகளில் காளிகோயிலுக்குச் சென்று வழிபடலாம். காளி கோயில் அருகில் இல்லையென்றால் துர்க்கையை வழிபடலாம். எலுமிச்சம்பழம் ஒன்றை கையில் வைத்துக் கொண்டு ஓம் காளி என்ற மந்திரத்தை 108 அல்லது 1008 முறை காளி அல்லது துர்க்கை முன் அமர்ந்து ஜெபியுங்கள். அந்த பழத்தைப் பிழிந்து வெல்லம் அல்லது சர்க்கரை சேர்த்து பிரசாதமாக அருந்துங்கள். நிச்சயம் பயம் உங்களை விட்டு ஓடிவிடும்.

  சிலருக்கு தோல் அலர்ஜி, தோல் வியாதிகள் இருப்பதுண்டு. இவர்கள் மருத்துவம் எடுத்தால் மட்டும் போதாது. டம்ளர் நிறைய தண்ணீரை எடுத்து திருவிளக்கின் முன் வைத்து ஓம் காளி மந்திரத்தை 108 முறை ஜெபித்து, அதை அருந்த வேண்டும். இதற்கு சிறந்த பலன் வேகமாக கிடைக்கும்.

No comments:

Post a Comment