Saturday, February 16, 2013

பூஜையில் மணக்கும் சாம்பிராணி எவ்வாறு தயாரிக்கப்படுகிறது தெரியுமா?

இறைவழிபாட்டில் சாம்பிராணி முக்கிய இடம் பெறுகிறது. பாறை போல் இறுகிக் கிடக்கும் சாம்பிராணிக் கட்டிகள், தீயில் பட்டவுடன் புகையாகிப் போகிறது. அதுபோல், கடினமாகக் கிடக்கும் துன்பங்கள் எல்லாம், அக்னி உருவாக உள்ள இறைவனின் அருள் கடாட்சம் கிட்டியவுடனே, புகையைப் போன்று லேசாகி விலகிவிடும் என்பதற்காகவே பூஜையில் சாம்பிராணி பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு இறைவழிபாட்டுக்குப் பயன்படுத்தப்படும் ஊதுபத்தி, கற்பூரம், சாம்பிராணி எதிலிருந்து தயாரிக்கப்படுகின்றன; அவற்றின் மருத்துவ குணங்கள் என்ன என்பது பலருக்குத் தெரியாது. சாம்பிராணி, பாஸ்வெல் லியா செர்ராட்டா எனப்படும் தாவர வகைக் குடும்பத்தைச் சேர்ந்ததாகும். பிரா ங்கின்செ ன்ஸ் எனப்படும் மரத்திலிருந்து வடியும் பால் தான் நாளடைவில் காய்ந்து, கடினமாகி சாம்பிராணி என்ற பெயரில் நமக்குக் கிடைக்கிறது.  ஆவியாக்கப்பட்ட சாம்பிராணியில் போஸ்வெல்யா, டர்பென்டைன் உள்ளிட்ட எண்ணெய்களை எடுக்கின்றனர். இதிலிருந்து வார்னிஷ் தயாரிக்க ப்படுகிறது. சோப்பு தயாரிப்பிலும் சாம்பிராணி பயன் படுத்தப்படுகிறது. சாம்பிராணி கிடைக்கும் பிராங்கின்சென்ஸ் மரத்திலிருந்துதான் கோந்தும் கிடைக்கிறது. இந்த கோந்துடன் தண்ணீர் சேர்த்து பெண்டோஸ் சர்க்கரை தயாரிக்கப்படுகிறது. இது இருமல், காமாலை, நாள் பட்ட புண், சொறி, சிரங்கு, படர்தாமரை போன்றவற்றுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.

No comments:

Post a Comment