Saturday, February 7, 2015

சகல மங்களமும் உண்டாக!

சர்வேஷாம் மங்களம் பவது

வேத பாராயணத்தை முடிக்கும் போது சொல்லப்படுகின்ற சாந்தி மந்திரங்களில் இதுவும் ஒன்று. பிரபஞ்சத்தில் எங்கும், எல்லாவற்றிலும் வளம் உண்டாகட்டும் என்பதன் இதன் பொருள்.

வேதம் என்பது தனி மனிதனுக்கு மட்டுமல்ல; சகல உலகங்களுக்கும் - நாடு, மதம், இனம், மொழி என்று பேசப்படுகின்ற எந்த பேதங்களையும் கருத்தில் கொள்ளாமல், அனைத்து உயிர்களுக்கும் நன்மையைக் கோருவதே வேதத்தின் உன்னதம். இந்த மந்திரத்தில், வளம் என்று சொன்னதாலேயே பயிர்கள், அதற்குத் தேவையான நீர், காற்று, சூரிய ஒளி, விலங்குகள், பறவைகள், மனிதர்கள் என்று எல்லா ஜீவன்களும் அவரவர்களின் தேவையான உணவு உள்ளிட்ட அனைத்தும் கிடைக்கப்பெற்று இனிது வாழட்டும் என்பது இந்தப் பிரார்த்தனையின் பொருள் என்பது புலனாகிறது. தினசரி நாம் செய்கின்ற பல்வேறு பிரார்த்தனைகளுடன் இந்தத் துதியையும் சேர்த்துக் கொள்வோம். நமக்காகவும், நாம் வாழும் இந்த உலகின் நன்மைக்காகவும்!

No comments:

Post a Comment