Sunday, March 17, 2013

கண்திருஷ்டி, ஏவல் போன்ற துஷ்ட சக்திகள் இருப்பது உண்மைதானா?

உலகில் இருவேறு சக்திகள் இருக்கின்றன. நல்ல, தீயசக்திகள் அவை. தேவர்களுக்கு நேர் எதிரான அசுரர்களும் இருந்ததை புராணங்களில் படித்திருப்பீர்கள். அதுபோல, அருட்சக்திக்கு எதிரான இருட்சக்தி உலகில் இருக்கத் தான் இருக்கிறது. கண்திருஷ்டி, ஏவல், சூன்யம் போன்றவையும் அதில் அடக்கம். நோய் பரப்பும் கிருமிகள் போல அவை கெடுபலன்களை உண்டாக்குகின்றன. இதிலிருந்து தப்பிக்க தெய்வசக்தியைத் தான் பிடித்துகொள்ள வேண்டும். யோகநரசிம்மர், சக்கரத்தாழ்வார் வழிபாடு பயன்தரும். நரசிம்ம துதியான மந்திரராஜபத ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்வது நல்லது. முடியாவிட்டால் இயன்ற போதெல்லாம் யோக நரசிம்மம் சரணம் பிரபத்யே என்ற மந்திரத்தை ஜெபித்து வாருங்கள்.

No comments:

Post a Comment