Tuesday, May 1, 2012

ஜோதிடர் சொல்லும் பரிகாரப்படி குறிப்பிட்ட கோயிலில் தான் வழிபட வேண்டுமா?

ஒவ்வொரு கோயிலுக்கு ஒவ்வொரு தனிச்சிறப்பு இருக்கிறது. இன்ன தோஷத்திற்கு இன்ன தலத்தில் பரிகாரம் கிடைக்கும் என்று ஜோதிடர் கூறினால் நம்பிக்கையோடு அதனைச் செய்யுங்கள். கண்டிப்பாக பயன் கிடைக்கும். நளதமயந்தி சரித்திரத்தில், திருநள்ளாறு சென்று வழிபட்ட பிறகு தான் அவர்கள் வாழ்க்கை மீண்டும் இன்பமயமானதாக தகவல் இருக்கிறது. எல்லா கோயில்களிலும் சனீஸ்வரன் இருந்தாலும், சனிக்கே தோஷம் ஏற்பட்டு அது விலகிய தலமாக திருநள்ளாறு விளங்குவதால் தனிச்சிறப்பைப் பெற்றிருக்கிறது. இதேபோன்று தான் ஒவ்வொருபரிகாரத் தலமும்.

No comments:

Post a Comment