Tuesday, August 9, 2016

உங்கள் கர்மவினை தீர மரக்கன்று நடுங்கள்

இதுவும் இறைவழிபாடுதான்


வீட்டின் முன்புறம் அல்லது பின்புறம் (இதில் வாஸ்து தேவையில்லை) பசுமையாகவும் விலங்கினங்களுக்கு பயன்தரும் வகையில் மரம், செடிகள் இருத்தல் அவசியம்.

இயற்கையே இறைவனின் வடிவம்தான்

அனில், கிளிகள், குருவி, வண்டு, ஓணான், பட்டாம்பூச்சி இவைகள் வாழ இடம் தந்து உண்டு மகிழ வழிசெய்தால் நம்வீடு கோயிலாகும்

காலையில் குயில் கூவும் இல்லமே இறைவனின் இருப்பிடம்

தென்னை, வாழை ஆகியன காய் இனத்தை சார்ந்தவை இவை வழிபாட்டில் மிகமுக்கிய பங்கு வகித்தாலும் அணில், கிளிகள், காகம் ஆகியன வாழும் வீடாகும்.

மா, சப்போட்டா, மாதுளம், கொய்யா, சீத்தாப்பழம் போன்றவை பறவைகள், அனில் விரும்பி உண்டு தன் இனத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தால் நம் இனம் வாழும்

பூக்கள் இல்லாத வழிபாடே இல்லை. பூக்கள் வாசனையும், தேனி, வண்டு, பட்டாம்பூச்சிகளுக்கு தேனை தந்து வீட்டே அலங்கரிக்கிறது

எனவே இல்லத்தை இயற்கையால் அலங்கரித்து இறைவன் வாழும் கோயிலாக்குவோம்

இயற்கையை நேசிப்பவன் மனிதன் !

இயற்கையை காப்பவன் இறைவன் !!

மரம் இல்லம் எனும் கோவிலின் விமானம்

ஒரு மரம் வெட்டினால் 10 மரம் நடவேண்டும்

மனையடி சாஸ்திரம்

No comments:

Post a Comment