Tuesday, May 20, 2014

ஐஸ்வர்யம் பெருக ..

திருவான்மியூர் தலத்தில் மருந்தீஸ்வரர் கோயில் உள்ளது. இத்தல ஈசனை தரிசிக்க அப்பைய தீட்சிதர் வந்தபேதது பெருமழை பொழிந்தது. தீட்சிதரால் சுவாமியின் முதுகுப் புறத்தையே தரிசிக்க முடிந்தது. ஈசனிடம்  திருமுக தரிசனம் வேண்டி முறையிட ஈசன் மேற்கு நோக்கி திரும்பிக் காட்சி தந்தார். ஈசன் மேற்கே திரும்பியதால் அம்பாள் சுவாமிக்குப் பின்புறமாக தெற்கு நோக்கியும், முருகனும், விநாயகரும் கிழக்கு நோக்கியும் காட்சி தருகிறார்கள். இங்கு அன்னையின் மண்டப விதானத்தில் அஷ்டலட்சுமி சக்கரம் உள்ளது. இங்கு நின்று வேண்டிக்கொண்டால் குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும்.

No comments:

Post a Comment