Sunday, October 13, 2013

மது போதையா! காதல் போதையா! படியுங்க! நிம்மதி கிடைக்கும்!

என் கணவர் ஒரு குடிகாரர், சூதாடி, கெட்ட பெண்களுடன் சகவாசம், என் மகனும் குடிக்கிறான், தொழிலில், படிப்பில் கவனம் இல்லை, மனைவியை அடிக்கிறான். குழந்தைகள் மீது பாசமில்லை... இப்படி ஒரு புறம். சில வீடுகளில் பெண்கள் வழிதவறி காதல்... அது இதுவென மயக்கத்தில் அலைகிறார்கள். இப்படி இக்காலத்தில் பலரும் நிம்மதியின்றி தவிக்கின்றனர். அவர்களுக்கு இதோ ஒரு நல்ல செய்தி. ஒரு கணவன் பிற பெண்களை விரும்புபவன், மனைவியும் அதே போல...அழகான ஆண்களை விரும்புவாள். தன் நடத்தைக்கு கணவன் தடையாக இருப்பான் எனக்கருதிய மனைவி அவனைக் கொன்று விட்டு தகாத செயல்களைத் தடையின்றி நடத்தினாள். ஒரு கட்டத்தில் அவளும் இறந்தாள். மறுபிறப்பில் கணவன் பருந்தாகவும், மனைவி கிளியாகவும் பிறந்தனர். ஒருமுறை கிளியைப் பார்த்தது பருந்து. அப்போது முற்பிறவி நினைவுக்கு வர, தன்னைக் கொன்ற கிளியைக் கடித்து குதறியது. கிளி, அங்கு தலைகீழாக கவிழ்ந்து கிடந்த ஒரு மண்டை ஓட்டில் இருந்த நீரில் போய் விழுந்து இறந்தது. அதே சமயம், ஒரு வேடன் பருந்தின் மீது அம்பு எய்ய, அதுவும் அதே மண்டை ஓட்டில் விழ, அதிலிருந்த தண்ணீர் அதன் மேல் தெறித்தது. அந்த ஜீவன்கள் எமதர்மனால் வைகுண்டம் அனுப்பப்பட்டனர். தாங்கள் தகாத செயல் செய்தும், தங்களை வைகுண்டம் அனுப்பக் காரணம் என்ன என்று எமனிடம் அந்த ஜீவன்கள் கேட்டன. குழந்தைகளே! நீங்கள் விழுந்தது சாதாரண மண்டை ஓடு அல்ல. வடர் என்ற ரிஷியினுடையது. அவர் கண்ணன் சொன்ன கீதை ஸ்லோகங்களைத் தவறாமல் படிப்பவர். அந்த ஸ்லோகங்களில் ஒன்றைச் சொன்னால் கூட, பாவச்செயல் செய்வோரும் திருந்தி விடுவார்கள். அது மட்டுமல்ல, கெட்ட வழக்கங்களும் அவர்களை அண்டாது, என்றார் எமதர்மன். அந்த ஸ்லோகத்தின் தமிழாக்கம் இது தான். தவறாமல் படியுங்கள். உங்கள் வீட்டிற்கும் விமோசனம் கிடைக்கும். உடம்பையே வெற்றி கொள்வோன் மனத்தாலும் துறவியாகி திடமுற எதையும் செய்யாது அமைகுவன் பிறரைச் செய்ய விட அவன் முயலான் ஒன்பான் வாசலை உடைய தேகப்  படலம் தன்னில் நல்ல சுகமுடன் வாழுவானே!

No comments:

Post a Comment