Tuesday, August 6, 2013

ஓம் என்பதன் பொருள் என்ன?

ஓம் என்பதை ஓங்காரம் என்று குறிப்பிடுவர். இதுவே உலகின் முதலான ஆதிஒலி. மந்திரங்களை ஓங்காரம் சொல்லி உச்சரித்தால் மட்டுமே பலன் கிடைக்கும். நசிகேதன் என்ற சிறுவனுக்கு, எமதர்மன் இந்த மந்திரத்தின் மகத்துவத்தை கடோபநிஷத்தில் உபதேசித்து உள்ளார். வேதம் எல்லாம் பிரபஞ்சத்தின் ஆதாரமான பிரணவம் எனப்படும் ஓம் என்பதைப் போற்றுகின்றன. பிரணவம் என்றால் என்றும் புதியது. புனிதமானதும், என்றும் புதியதுமான ஓம் என்னும் பிரணவம் அழிவே இல்லாத தத்துவப் பொருளாகும்.

No comments:

Post a Comment