Thursday, July 19, 2012

மாங்காடு காமாட்சி அம்மன் துதி

மாங்காடு திருக்கோயில் காமாட்சி
மாட்சிமை நிறைந்தவளே காமாட்சி
மகிமை மிகக் கொண்ட காமாட்சி
பஞ்ச அக்நி உச்சியிலே காமாட்சி
சிவனுக்கு தவமிருந்த காமாட்சி

ஆதிசங்கரன் பூஜித்த காமாட்சி
ஸ்ரீ சக்கரத்தில் அமர்ந்தவளே காமாட்சி
திருக்காஞ்சி அரசாளும் காமாட்சி
திருமணக்கோலம் கொண்ட காமாட்சி
அர்த்தமேரு அழகூட்டும் காமாட்சி

அண்டினோரின் அடைக்கலமே காமாட்சி
அணைத்தெம்மைக் காக்கின்ற காமாட்சி
கண்ணின் கருமனியே காமாட்சி
கண்கண்ட தெய்வமடி காமாட்சி
ஈசனை அடைந்திடவே காமாட்சி

இராப்பகலாய் தவமிருந்த காமாட்சி
ஆடிப்பூரத் திருநாளில் காமாட்சி
ஆனந்தக் கொலுவிருப்பான் காமாட்சி
பங்குனியின் உத்திரம்தான் காமாட்சி
மகேசனை நீ மணந்கநாள் காமாட்சி

கரும்பொகை அபயமொரு கை காமாட்சி
அரும்பிடும் ஆனந்தமுகம் கொள் காமாட்சி
பச்சைக்கிளி கரமேந்திய காமாட்சி
இச்சைக்கு இசைந்திடுவாய் காமாட்சி
மச்சத்தின் வடிவான கண்ணழகே காமாட்சி

அச்சமில்லா வாழ்வருளும் காமாட்சி
சூதவனம் உன்கோயில் காமாட்சி
சூதுகளை அழித்திடுவாய் காமாட்சி
இடப்புறத்தை தனதாக்கிய காமாட்சி
வலப்புறமும் உனக்கே சொந்தம் காமாட்சி

ஓராறு வாரங்கள் உன் விரதம் காமாட்சி
தீராத துயர் தீர்ப்பான் முடிவினிலே காமாட்சி
மாறாத பாசமதை காமாட்சி
மகனுக்கே பொலிந்திருவாள் காமாட்சி
முதல் வாரம் வெள்ளியன்று முதல் பூஜை

முன்வந்து எதுவேண்டும் என்றிடுவாள் காமாட்சி
இரண்டாம் வார பூஜையிலே காமாட்சி
குறை கேட்டு இரக்கம் கொள்வாள் காமாட்சி
மூன்றாம் வார பூஜையிலே காமாட்சி
முன்நின்று இடுக்கண் களைவாள் காமாட்சி

நான்காம் வார பூஜையிலே காமாட்சி
நானே தான் துணையென்பாள் காமாட்சி
ஐந்தாம் வார பூஜையிலே காமாட்சி
ஐங்கரினின் அருள் இணைப்பாள் காமாட்சி
ஆறாம் வார பூஜையிலே காமாட்சி

எண்ணமெல்லாம் ஈடேற்றும் காமாட்சி
ஆறுமுகன் துணை தருவாள் காமாட்சி
பேறு பல தந்திடுவாள் காமாட்சி
மாவடியில் காப்பவளே காமாட்சி
மாங்கல்யம் காப்பவளே காமாட்சி

தாம்பூலம் தரி உதட்டில் காமாட்சி
தளிர்நகை பூத்திடுவாள் காமாட்சி
திருவிளக்கின் ஒளிச்சுடரில் காமாட்சி
தீபதுர்க்கை ஆகி நிற்பாள் காமாட்சி
கற்பூரம் ஏற்றுவித்தால் காமாட்சி

பொற்பாதம் பரிமளிக்கும் காமாட்சி
இளஞ் சூட்டில் பசும்பாலில் காமாட்சி
கரைந்திட்ட கற்கண்டும் காமாட்சி
ஏலக்காய் நறுந்தேனும் காமாட்சி
நாலும் கலந்தெடுத்து காமாட்சி

நான் தருவேன் நிவேதனம் காமாட்சி
எழுமிச்சை கனி (விழைவாள்) ஏற்பாள் காமாட்சி
ஏழு பிறவி துணை நிற்பாள் காமாட்சி
மாதாவே என்றழைத்தால் காமாட்சி
மடிதந்து ஆதரிப்பாள் காமாட்சி

மாங்காடு சரணடைந்தால் காமாட்சி
மங்காத வாழ்வளிப்பாள் காமாட்சி
வெற்றி மேல் வெற்றி தரும் காமாட்சி
வற்றாத ஜீவ நதி காமாட்சி
தொழில் செய்ய வழி சொல்வாள் காமாட்சி

தொல்லையில்லா வாழ்வருள்வாள் காமாட்சி
உத்தியோகம் உடன் கோட்டாள் காமாட்சி
உத்திரவு உடன் இடுவாள் காமாட்சி
சந்நிதியை சரணடைந்தால் காமாட்சி
சந்தோஷி யாகிடுவாள் காமாட்சி

தூளிகளை ஏற்றிடுவாள் காமாட்சி
தாலி பாக்கியம் தந்திடுவாள் காமாட்சி
தாளினை தண்டனிட்டால் காமாட்சி
தாலிக்கு வேலியவள் காமாட்சி
தாயாரே தஞ்சமென்றடைந்தால் காமாட்சி

தாயாகும் பாக்கியம் தருவாள் காமாட்சி
மாங்கனியின் தீஞ்சுவையை காமாட்சி
மாங்காட்டு மாருதமே காமாட்சி
காணிக்கை ஏற்றிடுவாள் காமாட்சி
கண்ணீரை துடைத்திடுவாள் காமாட்சி

ஜெபமாலை கைக் கொண்டாள் காமாட்சி
ஜெகம்புகழும் ஜெயம் தருவாள் காமாட்சி
காமகோடி நாயகியே காமாட்சி
காலமெல்லாம் காத்தருள் செய் காமாட்சி
சிவபூஜை செய்கின்ற காமாட்சி

சிவம்பாதி கொண்ட சக்தி காமாட்சி
பிள்ளை நான் பின்வருவேன் காமாட்சி
தள்ளாமல் வழிநடத்து காமாட்சி
கன்னியர்கள் கைதொழுதால் காமாட்சி
கல்யர்ணம் கைகூட்டும் காமாட்சி

அம்மையப்பன் அவளோயாம் காமாட்சி
ஐயப்பன் தாயவளே காமாட்சி
கணபதியை பெற்றவளும் காமாட்சி
கந்த முருகன் சொந்தத்தாய் காமாட்சி
அகிலாண்ட ஈஸ்வரியே காமாட்சி

அகில் மணக்கும் <உண் கோயில் காமாட்சி
வண்ணமயில் விரித்தாடும் காமாட்சி
வனதுர்க்கை வனத்தரசி காமாட்சி
கீதங்கள் இயற்றிடவே காமாட்சி
போதனைகள் புகட்டிடுவாய் காமாட்சி

கல்லாத வேதங்கள் காமாட்சி
கற்றறியும் திறம் தருவாய் காமாட்சி
தாய்தந்தை உறவும் நீயே காமாட்சி
சேயெனக்கு குருவும் நீயே காமாட்சி
குழந்தை நான் மகிழ்ந்திடுவேன் காமாட்சி

குமரனோடு நீ காட்சி தந்தால் காமாட்சி
எல்லையிலே காவல் தெய்வம் காமாட்சி
ஏழ்மையை வீழ்த்தும் விழியாள் காமாட்சி
கெஞ்சிக்கதறி அழுதிட்டால் காமாட்சி
நெஞ்சுருகி நெஞ்சணைப்பாள் காமாட்சி

செய்யுமிந்த அர்ச்சனையில் காமாட்சி
மெய்யுருகி மகிழ்ந்திடுவாய் காமாட்சி
சீக்கிரமே வரம் தந்து காமாட்சி
சிரித்தபடி வழியனுப்பு காமாட்சி

No comments:

Post a Comment