Monday, April 2, 2012

இழந்த செல்வம் மீண்டும் கிடைக்க...

திருநள்ளாறு-காரைக்கால் செல்லும் சாலையில், 20 கி.மீ., தொலைவில் உள்ளது திருத்தண்டிகை என்னும் தலம். இங்கு சவுந்தரநாயகி உடனுறை சனத்குமாரேஸ்வரர் அருள்புரிகிறார். ஒருசமயம் வடதிசை அதிபதியான குபேரன் தர்மம் தவறியதால் சாபம் பெற்றான். சப்தரிஷிகளின் ஆலோசனைப்படி திருத்தண்டிகை வந்து வழிபட்டு சாப விமோசனமும் இழந்த செல்வங்களையும் பெற்றான். தான் வரம் பெற்ற நாளில் இங்கு வந்து வழிபடும் பக்தர்களுக்கும் இழந்த செல்வத்தை அடையும் வரம் அருள வேண்டும் என்று இறைவனிடம் வேண்டினான்; இறைவனும் அவ்வாறே அருளினார். குபேரன் பேறு பெற்ற நாள் மாசி மாதப் பவுர்ணமி.

No comments:

Post a Comment