Sunday, May 10, 2015

விரைவில் சொந்த வீடு அமைய வேண்டுமா?

சிவபெருமான், பார்வதி தேவியிடம் கருத்து வேறுபாடு கொள்வது போல் திருவிளையாடல் நிகழ்த்தி, அவளைப் பிரிந்து தியானத்தில் ஆழ்ந்தார். அப்போது அவரின் உடம்பில் அரும்பிய வியர்வை பூமியில் விழுந்து குழந்தையாக மாறியது. அக்குழந்தைக்கு மங்களன் என பெயரிட்டு பூமாதேவி வளர்த்தாள். மங்களனும் தவத்தில் ஈடுபட்டு கிரகபதவி பெற்றான். அவனே செவ்வாய் என வழங்கப்படுகிறான். இதற்கு ரத்தம் போல சிவந்த நிறம் கொண்டவன் என்பது பொருள். ஒருவரது ஜாதகத்தில் செவ்வாய் பலம் பெற்று இருந்தால், நிலபுலம், வீடுவாசல் அமையும் யோகமுண்டாகும். செவ்வாய் பலமற்றவர்கள், சிவப்பு நிற மலர்களால் செவ்வாயை அர்ச்சித்து வர விரைவில் சொந்தவீடு அமையும்.

No comments:

Post a Comment