Sunday, September 21, 2014

தெரிந்துகொள்ள வேண்டிய பூஜையறை டிப்ஸ்!

கற்பூரத்துடன் மிளகு சேர்த்து வைத்தால் கற்பூரம் கரையாமல் இருக்கும். தேவதைகளை ஆகர்ஷணம் செய்யும் சக்தி மயிலிறகுக்கு உண்டு என்கின்றன  ஞான நூல்கள். அதனால், பூஜையறையில் மயிலிறகை வைத்து வழிபடுவது சிறந்தது. மழை நாட்களில், தீப்பெட்டி தீக்குச்சிகள் நமத்துப் போகும்.  நான்கு ஐந்து அரிசி மணிகளை உள்ளே போட்டுவைத்தால் தீக்குச்சிகள் நமத்துப் போகாது. காலையிலும் மாலையிலும் கோதூளி லக்னம் எனப்படும்  5 முதல் 6மணி வரையிலான நேரத்தில் பூஜை அறையில் விளக்கேற்றுவது மிக நல்லது. அப்போது வீட்டின் வாசலுக்கு வெளியேயும் விளக்கேற்றி  வைத்தால் தேவதைகளின் ஆசி கிட்டும். விளக்கெண்ணெயும் நெய்யும் கலந்து தீபம் ஏற்றி குலதெய்வத்தை வழிபடுவதால், வீட்டில் சர்வ சுபி ட்சங்களும் பெருகும்.

No comments:

Post a Comment