Tuesday, December 31, 2013

2014 - இந்தியாவில் என்ன நடக்கும்?

அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்!: ஆங்கில புத்தாண்டுக்கும், தமிழ் புத்தாண்டுக்கும் மாறுபாடு உண்டு.  சூரியனின் நிலை கொண்டு அதன் இடமாற்றத்தை கணக்கில் எடுத்து தமிழ் மாதம் கணிக்கப்படும். ஆங்கில ஆண்டு உலக நாடுகள் அனைத்திலும் பின்பற்றப்படுவது. அதையே நடைமுறையிலும் கையாண்டு வருகிறோம். மனிதர்கள் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ அது இறைவனின் அருளால்  புனிதத்துவம் பெற்றதாகி விடுகிறது.  

2014ம் ஆண்டின் தொடக்கத்தில் முக்கிய கிரகங்களில் குருபகவான் மிதுனத்தில் வக்கிரம் அடைந்து நிற்கிறார். சனிபகவானும் ராகுவும் துலாமில் இணைந்து உள்ளனர். கேது மேஷத்தில் உள்ளார். குரு, மார்ச் 12ல், வக்கிர நிவர்த்தி அடைகிறார். சனிபகவான் மார்ச் 4 முதல் ஜூலை 19 வரை வக்கிரம் அடைகிறார். அவர் வக்கிரம்  அடைந்தாலும் அதே ராசியில்தான் இருக்கிறார். குருபகவான், ஜூன் 12ல், மிதுனத்தில் இருந்து கடகத்திற்கு செல்கிறார். ராகுகேது கன்னிக்கும், மீனத்திற்கும் ஜூன் 20ல் பெயர்ச்சி அடைகிறார்கள். சனிப் பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கப்படி, டிசம்பர் 17ல் நிகழ்கிறது. அவர் துலாமில் இருந்து  விருச்சிகத்திற்கு செல்கிறார். இவைகளை கருத்தில் கொண்டு, பலன்கள்  கோச்சார அடிப்படையில்தான் கணிக்கப்பட்டு உள்ளது, இதில் சுமாரான பலன்கள் சிலருக்கு இருக்கலாம். ஆனால், ஜாதக  ரீதியாக நல்ல தசாபுத்தி நடந்தால் சிறப்பான பலன்கள் தான் கிடைக்கும். மேலும், எளிய பரிகாரங்களும் கொடுக்கப்பட்டு உள்ளது. காழியூர் நாராயணன்

2014ம் ஆண்டிற்கான உங்கள் பலன் அறிய கிளிக் செய்யவும்..

2014இந்தியாவில் என்ன நடக்கும்?

*ஆட்சி மாறுவதற்குரிய சாத்தியக்கூறு அதிகம்.
*பணமதிப்பு கடந்த ஆண்டு இருந்ததை விட அதிகரிக்கும்.
*ஆன்மிகப்பணிகளில் மக்கள் தீவிரமாக ஈடுபடுவர்.
*அரசின் திட்டங்கள் மக்களைச் சென்றடைவதில் தொய்வு ஏற்படும்.
*மின்சார உற்பத்தியை அதிகரிக்க திட்டங்கள் தீட்டப்படும்.
*வெளிநாட்டு வர்த்தகர்களின் கை ஓங்குவதைத் தடுக்க கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
*வங்கிகளின் கையிருப்பு அதிகரிப்பால் கல்விக்கடன் உள்ளிட்டவை தாராளமாக வழங்க முயற்சிக்கப்படும்.
*வங்கி கடனுக்காக போராட்டம் நடத்தும் நிலை ஏற்படும்.

புத்தாண்டில் தமிழக நிலைமை எப்படி?: *மத்தியில் ஆட்சி மாற்ற அறிகுறி தெரிவதால், தமிழகத் திட்டங்களுக்கு முன்னுரிமை தரப்படும்.
*மின்சார உற்பத்தியைப் பெருக்க, மாநில அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும்.
*விலை உயர்வு ஒருபுறம் இருந்தாலும், வாங்கும் சக்தி அதிகரிப்பால் விற்பனை சரிவு இருக்காது.
*எலக்ட்ரானிக் கருவிகள் விற்பனை அதிகரிக்கும். மக்கள் இது தொடர்பான விஷயங்களில் ஆர்வம் காட்டுவர்.
*கலாசார சீரழிவைத் தடுக்கும் வகையில், ஆன்மிக ஆர்வலர்கள் பிரசாரம் செய்வர். அது ஓரளவுக்கு பலனும் கொடுக்கும்.
*கல்வி, மருத்துவத் துறையில் தமிழகத்திற்கென தனியிடம் கிடைக்கும்.
*நிம்மதிக்குறைவால், மக்கள் ஞானமார்க்கத்தில் ஈடுபட ஆர்வம் கொள்வர்.

No comments:

Post a Comment