Thursday, May 26, 2011

ஞாபக மறதிக்கு மருந்து





சில குழந்தைகள் எவ்வளவு படித்தாலும், மறதி காரணமாக, தேர்வில் குறைந்த மதிப்பெண்களே பெறுவர். இந்த பிரச்னையை தீர்த்து வைத்து, ஞாபக மறதியை நீக்குபவராக திருவள்ளூர் அருகிலுள்ள திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் அருளுகிறார். நடராஜருக்குரிய பஞ்ச சபைகளில் முதலாவதான ரத்தினசபை இது. கயிலாயத்தில் சிவபெருமானைத் தரிசித்த காரைக்காலம்மையார், எப்போதும் அவரது திருவடியில் அமர்ந்து அவரது நாட்டியத்தைத் தரிசிக்க அருளும்படி வரம் கேட்டார். அவருக்கு அருளிய சிவன், அம்மையாரை இத்தலத்திற்கு அனுப்பி வைத்தார். இங்கு வந்த காரைக்காலம்மையார் காலை தரையில் ஊன்றாமல், தலைகீழாக நடந்து வந்தார். பிற்காலத்தில் இங்கு வந்த திருஞானசம்பந்தர், இத்தலத்தின் மகிமையை அறிந்து தரையில் நடக்க அஞ்சினார். இதற்காக இக்கோயிலில் இருந்து 2 கி.மீ., தூரத்திலுள்ள பழையனூர் என்னும் தலத்தில் தங்கினார். அன்றிரவில் சம்பந்தர் முன் தோன்றிய சிவன், என்னை பாட மறந்து விட்டாயா? எனக்கேட்டார். உடன் சம்பந்தர் அங்கிருந்தபடியே, பாடும்படி ஞாபகப்படுத்திக் கேட்ட பெருமானே! எனக் குறிப்பிட்டு சுவாமியைப் போற்றி பதிகம் பாடினார். இவ்வாறு, சம்பந்தருக்கு பதிகம் பாட ஞாபகப்படுத்தியவர் என்பதால், மறதி பிரச்னை நீங்க இத்தலத்தில் வேண்டிக்கொள்கிறார்கள். ஞாபக மறதி உள்ள குழந்தைகளை அழைத்து வந்து, சிவன், நடராஜர் சன்னதியில் வழிபடுகின்றனர்.

No comments:

Post a Comment