Monday, April 18, 2011

ஒரே கருவறையில் 3 லிங்கம்



பொள்ளாச்சி அருகிலுள்ள தேவனாம்பாளையம் அம்மணீஸ்வரர் கோயிலில் ஒரே கருவறைக்குள் மூன்று லிங்கங்கள் இருக்கிறது. இவற்றை மும்மூர்த்திகளாக கருதி பூஜை செய்கிறார்கள். மேற்கு நோக்கி அமைந்த தலம் இது. தனது கற்பை சோதிக்க வந்த மும்மூர்த்திகளை, தன் கற்பு வலிமையால் குழந்தைகளாக மாற்றி பாலூட்டினாள் அத்திரி முனிவரின் மனைவியான அனுசூயா. இந்த சம்பவத்தின் அடிப்படையில் இத்தலம் எழுப்பப்பட்டதால், மூன்று தெய்வங்களையும் லிங்கத்தின் வடிவமாக படைத்து விட்டனர். இப்பகுதியில் ஓடும் கற்பக நதியின் மத்தியிலுள்ள பாறையில் இக்கோயில் அமைந்துள்ளது. மழைக்காலங்களில் இந்நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். அப்போது, இக்கோயிலுக்கு செல்ல முடியாது. ஆடி, ஐப்பசி, மாசி மாதங்களில் மாலையில் நடுவில் உள்ள சிவலிங்கத்தின் மீது மட்டும் ஒளி விழும்.

No comments:

Post a Comment