Friday, March 4, 2011

ஆலய தரிசனம் ஏன்?










ஆலய தரிசனம் ஒரு மனிதனுக்கு அவசியம் தேவை. வீட்டில் இருந்தபடியே கடவுளை வணங்கினால் போதாதா என கேட்கலாம். எங்கும் பரவி இருக்கும் பரம்பொருளை ஒரு குறிப்பிட்ட இடத்தில் தியானிப்பதால் விசேஷ நன்மைகள் உண்டு. உலகம் முழுவதும் தண்ணீர் இருந்தாலும் அந்த தண்ணீரை கிணறுகள் தோண்டி எடுப்பதுபோல நம் மனதை ஆண்டவனிடம் செலுத்திக் கொண்டே வந்தால் அவன் அருள் நமக்கு இலகுவாக கிடைக்கும். இதற்காக ஜபமோ, ஹோமமோ, பூஜையோ செய்ய வேண்டும் என்பதில்லை. தினமும் ஆண்டவன் சன்னிதானத்தில் ஐந்து நிமிடம் கண்மூடி தியானித்தாலே போதும். தேவைகளை அவரிடம் சொல்ல வேண்டியதில்லை. அவருக்கே நமது தேவைகள் தெரியும்

No comments:

Post a Comment