Friday, June 5, 2015
காளியை வணங்கும் முறை (ராகுதோஷம் நீங்க )
ஓம் காள்யை நம:
ஓம் க்ருஷ்ண ரூபாயை நம:
ஓம் பராத்மகாயை நம:
ஓம் முண்டமாலாதராயை நம:
ஓம் மஹாமாயாயை நம:
ஓம் ஆத்யாயை நம:
ஓம் கராளிகாயை நம:
ஓம் ப்ரேதவாஹாயை நம:
ஓம் ஸித்தலக்ஷ்மையை நம:
ஓம் கால ஹராயை நம:
ஓம் ப்ராஹ்மை நம:
ஓம் நாராயண்யை நம:
ஓம் மாஹேஸ்வர்யை நம:
ஓம் சாமுண்டாயை நம:
ஓம் கவுமார்யை நம:
ஓம் அபராஜிதாயை நம:
ஓம் வராஹ்யை நம:
ஓம் நாரஸிம்ஹாயை நம:
ஓம் கபாலின்யை நம:
ஓம் வரதாயின்யை நம:
ஓம் பயநாசின்யை நம:
ஓம் ஸர்வ மங்களாயை நம:
கிரக தோஷம் நீங்க!
ஸம்ரக்த சூர்ணம் ஸஸுவர்ணதோயம்
ஸகுங்குமாபம் ஸகுஸம் ஸபுஷ்பம்
ப்ரதத்த மாதாய ச ஹேம பாத்ரே
ஸஹஸ்ரபானோ பகவன் ப்ரஸீத
- சூர்ய ஸ்லோகம்
பொருள்: சிந்தூரம் போன்ற சிவந்த நிறமுள்ளவரே, அழகிய மண்டலத்தைக் கொண்டவரே, ஸ்வர்ணம், ரத்னமிழைத்த ஆபரணத்தைத் தரித்தவரே, சூரிய பகவானே, நமஸ்காரம், தாமரையின் ஒளி போன்ற கண்களை உடையவரே, அழகிய தாமரையைக் கையிலேந் தியவரே, பிரம்மா, இந்திரன் நாராயணன், சங்கரன் ஆகியோரின் வடிவமாகத் திகழ்பவரே, நமஸ்காரம். இச்சுலோகத்தைச் சொல்ல, கிரக தோஷங்கள் சூரியனைக் கண்ட பனி போல நீங்கும்.
ஸகுங்குமாபம் ஸகுஸம் ஸபுஷ்பம்
ப்ரதத்த மாதாய ச ஹேம பாத்ரே
ஸஹஸ்ரபானோ பகவன் ப்ரஸீத
- சூர்ய ஸ்லோகம்
பொருள்: சிந்தூரம் போன்ற சிவந்த நிறமுள்ளவரே, அழகிய மண்டலத்தைக் கொண்டவரே, ஸ்வர்ணம், ரத்னமிழைத்த ஆபரணத்தைத் தரித்தவரே, சூரிய பகவானே, நமஸ்காரம், தாமரையின் ஒளி போன்ற கண்களை உடையவரே, அழகிய தாமரையைக் கையிலேந் தியவரே, பிரம்மா, இந்திரன் நாராயணன், சங்கரன் ஆகியோரின் வடிவமாகத் திகழ்பவரே, நமஸ்காரம். இச்சுலோகத்தைச் சொல்ல, கிரக தோஷங்கள் சூரியனைக் கண்ட பனி போல நீங்கும்.
Thursday, May 14, 2015
கடவுளிடம் வேண்டியது பணிவா? பயமா?
பயபக்தி என்றே சொல்வார்கள். கடவுள் தண்டிப்பவர் என்ற எண்ணத்தால், பக்தி முதலில் பயத்துடன் தொடங்கும். ஆனால், மனம் பக்குவம் பெற்ற பின், எல்லாம் அவன் செயல் என்ற எண்ணம் உண்டாகும். அப்போது பயம் பணிவாக மாறி விடும். இதை திருவள்ளுவர், கற்றதனால் ஆய பயனென் கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின் என்று குறிப்பிடுகிறார்.
பெற்றோரை மதிக்காதவன் தெய்வத்தை வணங்கினால் பலன் உண்டா?
பெற்றோருக்கு சேவை செய்த ஹரிதாஸ் என்ற பக்தரை எதிர்பார்த்து, பாண்டுரங்கன் காத்திருந்ததாக வரலாறு கூறுகிறது. கண்கண்ட தெய்வமான பெற்றோரை மதிக்காமல் கடவுள் மீது பக்திசெலுத்துவதால் பயனில்லை. மாத்ரு தேவோ பவ; பித்ரு தேவோ பவ என்கிறது வேதம். இதையே அன்னையும், பிதாவும் முன்னறி தெய்வம் என்கிறார் அவ்வையார். பெற்றோருக்குப் பணிவிடை செய்வது பிள்ளைகளின் கடமை.
திருமண வீட்டில் தேங்காய் கொடுத்து அனுப்புவது ஏன்?
சுபநிகழ்ச்சிக்கு அழைக்கும்போதும், வழியனுப்பும் போதும் லட்சுமியின் அம்சமான வெற்றிலை,பாக்கு கொடுப்பது வழக்கம். இதனை தாம்பூலம் என்பர். சுபநிகழ்ச்சிகளுக்கு வரும் உறவினர்கள் மீண்டும் இன்னொரு சுபவிஷயத்தில் சேர வேண்டும் என்பதற்காக இவ்வாறு தரும் வழக்கம் உருவானது. தாம்பூலத்தோடு தேங்காய், பழம், இனிப்பு, சாக்லெட் சேர்த்து கொடுத்ததெல்லாம் பிற்காலத்தில்!. தற்போது வெற்றிலை, பாக்கு வழக்கம் குறைந்து விட்டதால் தேங்காய், பிஸ்கட், தின்பண்டங்கள் கொடுக்க ஆரம்பித்து விட்டனர்.
Sunday, May 10, 2015
வீட்டில் விளக்கேற்றி இருக்கும் போது வாசலை மூடக் கூடாதா?
தலை வாசலைத் திறந்து வைப்பதோடு, கொல்லைப்புறத்தைப் பூட்டிய பிறகே விளக்கேற்ற வேண்டும். அப்போது திருமகள் வீட்டுக்கு வருவதாக ஐதீகம். அவள் வீட்டில் தங்க வேண்டும் என்பதற்காக இப்படி செய்கிறார்கள்.
Subscribe to:
Posts (Atom)




