Friday, May 22, 2026

இறைவழிபாட்டின் போது ஏன் மணி அடிக்கிறோம்?

இறை வழிபாட்டில் குறிப்பாக நிவேதனம், தீப ஆராதனை செய்யும் போது மணி அடிப்பது வழக்கம். அபிஷேகம் செய்யும் போது மணி அடித்துக் கொண்டு தான் இருக்கும். அதன் பிறகு அலங்காரம், அர்ச்சனை எல்லாம் முடிந்து வழிபாடு நிறைவடைய உள்ளது என்பதற்கான அறிவிப்பு தான் மணியோசை. இறை வழிபாட்டில் மனம் ஈடுபட இயலாமல் அலைந்து கொண்டு இருப்பது சகஜம்தான். அலைபாயும் மனதை இறைவன் பால் திருப்ப, அவரவர் விருப்பத்தை வேண்டுதல் செய்து கொள்ள கொடுக்கப்படும் சமிக்ஞை தான் மணியோசை. வேடிக்கை என்னவென்றால், வழிபாட்டை முன்னின்று நடத்தும் நபருக்கும் மனம் வழிபாட்டில் மட்டுமே நிலைத்திருக்கும் என்று கூறிவிட இயலாது. எங்கோ மனதை அலைய விட்டு, அனிச்சை செயலாக வழிபாட்டு நடைமுறைகளை பக்தர்கள் காண செய்து முடித்து விட்டால், அவர் மீது நம்பிக்கை இழந்து விட வாய்ப்பு அதிகம். அவரது மனமும் சிறிது நேரமாவது, நிறைவு பகுதியில் இறை வழிபாட்டில் ஈடுபடவும், ஏற்படுத்திக் கொண்ட ஒரு நடைமுறை,,அவரே ஒரு கையில் தீபாராதனை, மறு கையில் மணி என்று தீபாராதனை செய்து பக்தர்களுக்கு பிரசாதங்கள் கொடுக்கும் நேரத்திலாவது அவரது பிரச்சினைகளை மறந்து, அவர்களுக்கு நாலு வார்த்தைகள் அவரவர் வேண்டுதலுக்கு ஏற்றவாறு அவரும் இறைவனிடம் வேண்டுதல் செய்து கொள்வார். பக்தர்கள் மனமொன்றி வழிபாட்டில் முழுவதுமாக ஈடுபடாமல் இருந்திருந்தாலும், நமது பிரார்த்தனை இறைவனை சென்றடைந்து விட்டது, பிரச்சினைகளை தீர்த்து வைத்து விடுவார் ,,என்ற நம்பிக்கையோடு இருக்கலாம். ,,,புற வயப்பட்ட வழிபாடு சில மனித உளவியலோடு நேரடியாக தொடர்பு கொண்டவை. ஸ்தூல வழிபாடு, ,அதாவது மற்றவர்கள் பார்க்கும் வழிபாடு முறையில் இது முக்கியத்துவம் வாய்ந்தது.

No comments:

Post a Comment