Thursday, July 5, 2012

அறிவியல் அறிஞர்களுக்கே அதிர்ச்சி தந்த திருநள்ளாறு திருத்தலம்!

திருநள்ளாறு என்றாலே தீர்த்த ஸ்தலம் என்று அனைவருக்கும் தெரியும், தற்போது கோயிலைச் சுற்றி நளதீர்த்தம், பிரம்மதீர்த்தம், வாணி தீர்த்தம் ஆகியவை உள்ளன. இதில் நள தீர்த்தத்தில் குளித்தால் சனித்தொல்லை நீங்கும். பிரம்ம தீர்த்தத்தில் குளித்தால் முந்தைய சாபங்கள் ஒழியும். வாணி தீர்ததம் எனப்படும் சரஸ்வதி தீர்த்தத்தில் நீராடினால் மூடன் கூட கவி பாடுவான் என்று நம்பிக்கை. இங்கு தர்ப்பாரண்யேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார், இது அனைவரும் அறிந்தது. இதற்கு அறிவியல் பூர்வமான சிறப்பு என்ன தெரியுமா?..
பல நாடுகளின் செயற்கைக்கோள்கள் பல்வேறு காரணங்களுக்காக பூமியை சுற்றி வருகின்றன. சில வருடங்களுக்கு முன்பு, ஒரு நாட்டின்  செயற்கைக்கோள் பூமியின் குறிப்பிட்ட பகுதியினைக் கடக்கும் போது மட்டும் 3வினாடிகள் ஸ்தம்பித்து விடுகிறது. 3வினாடிகளுக்குப் பிறகு வழக்கம் போல வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை தந்தது. இது எப்படி என்பதை ஆராய்ந்த போது ஆய்வு முடிவு மிரள வைத்தது.
எந்த ஒரு செயற்கைக்கோளும் பூமியில் இந்தியாவின் புதுச்சேரியின் திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோயிலுக்கு நேர் மேலே உள்ள வான்பகுதியினைக் கடக்கும் போது 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகின்றன. அதற்கு காரணம்? ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் சனிக்கிரகத்திலிருந்து கண்ணுக்குப் புலனாகாத கருநீலக்கதிர்கள் அந்தக் கோயில் மீது விழுந்து கொண்டே இருக்கின்றன. 2 1/2 வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் ஒவ்வொரு சனிப் பெயர்ச்சியின் போதும் இந்த கருநீலக்கதிர்களின் அடர்த்தி 45 நாட்கள் வரை மிக அடர்த்தியாக இருக்கின்றன. விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் செயற்கைக் கோள்கள் இந்த கருநீலக்கதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும் போது ஸ்தம்பித்துவிடுகின்றன. அதே சமயம்,செயற்கைக்கோளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை. இதில் முக்கிய அம்சம் என்னவென்றால், இந்தக் கோவில்தான் இந்துக்களால் சனிபகவான் தலம் என்று போற்றப்படுகிறது. இதன்மூலம் உலகிலேயே அறிவுத்திறனும், அறிவியலில் ஞானமும் கொண்டவர்கள் அக்காலத்திலேயே இந்தியாவில் இருந்துள்ளனர் என்பது இதன் மூலம் புலனாகிறது.
சனி கிரகத்தை இத்தாலி விஞ்ஞானி கலிலியோ வானமண்டலத்தில் இருந்ததை முதன் முதலாக பார்த்தார். பூமியில் இருந்து 128 கோடி கி.மீ., தூரத்தில் உள்ளது. சில சமயத்தில் பூமியிலிருந்து விலகிப் போனால் 164 கோடி கி.மீ., தூரம் இருக்கும். பூமியை விட 750 மடங்கு பெரியது. சூரியனை சுற்றும் கிரகங்களில் மிகப்பெரிய கிரகம் வியாழன். அதற்கடுத்த இடத்தை சனி பெறுகிறது.

Tuesday, July 3, 2012

சூரியனை பார்க்கக்கூடாத நேரங்கள் எவை தெரியுமா?

காலை வேளையில் கதிரவனை தரிசிப்பதும் வணங்குவதும் நன்று; மாலை நேரத்தில் சூரியனைப் பார்ப்பதும் சூரிய ஒளியை உடலில் ஏற்பதும் அழகை அதிகரிப்பதற்கு உதவும். ஆனால் சூரியனைப் பார்க்கக்கூடாத நேரங்களும் உள்ளன. நீரில் பிரதிபலிக்கும் போதும், நடுபகலிலும் சூரியனைப் பார்க்கக் கூடாது. ஜொலித்து நிற்கும் சூரியனை வெறும் கண்களால் காண்பது தீங்கு விளைவிக்கும். நடுப்பகலில் சூரியனைப் பார்ப்பதால் பார்வைக் கோளாறுகள் ஏற்பட வழியுண்டு. விஞ்ஞானமும் இதனை ஒப்புகொள்கிறது. பழங்காலத்தில் நீரில் பிரதிபலிக்கும் சூரியனை மக்கள் பார்க்கக்கூடாது என்பதற்காக, சூரியன் வருண பகவானுடன் இணைந்திருக்கும் காட்சியைக் காணக்கூடாது என்று கூறி விலக்கினர்.

Sunday, July 1, 2012

எது உண்மையான ஆன்மீக வாழ்கை தெரியுமா?

ஆன்மீகம் என்பது நெற்றியில் விபூதி அணிந்து கொண்டு, எந்நேரமும் இறைவனின் நாமத்தை உச்சரித்துக் கொண்டும், பலர் பார்க்கும்படி கோயிலுக்கு நன்கொடை செய்வதும், அடுத்தவருக்கு பலர் முன்னிலையில் உதவி செய்வது மட்டுமல்ல. மனதில் தீய எண்ணங்கள் இல்லாமல், அடுத்தவருக்கு நல்லது செய்யாவிட்டாலும், கெடுதல் செய்யாமல் மனசாட்சிக்கு பயந்து வாழ்வது ஒருவகை ஆன்மீகம்.

அடுத்ததாக, பல மணி நேரம் வேறு பல சிந்தனையுடன் பூஜை செய்யாமல்,   இறைவனை ஒரு நிமிடம் வணங்கினாலும் எந்தவித சிந்தனையுமின்றி ஆத்மார்த்தமாக வணங்கி, எனக்கு உன்னை தவிற வேறு யாரும் தெரியாது, உன்னை தவிற வேறு யாரும் கிடையாது அனைத்தும் நீயாக இருக்கிறாய், இந்த உடலை நீயே வழிநடத்தி செல், என இறைவனிடம் சரணடைந்து விட்டு நமது கடமைகளை மிகச்சரியானதாக செய்வது ஒரு வகை ஆன்மீக வாழ்க்கை.

நான் தினமும் நான்கு முறை குளிக்கிறேன். ஆறு முறை சுவாமி கும்பிடுகிறேன். ஆனால், இறைவன் என்னை கண்திறந்து பார்க்க மாட்டேன் என்கிறார், என்றெல்லாம் நிறைய பேர் குறைபட்டுக்கொள்கின்றனர். ஆனால், நமக்கு ஏற்படும் நன்மைகளுக்கும், தீமைகளுக்கும் நாமே பொறுப்பு. அனைவரிடமும் அன்பாக பேசுதல், அனைவருக்கும் நன்மை செய்தல், அனைவரையும் மரியாதையுடன் நடத்துதல், எதற்குமே ஆசைப்படாமல் இருத்தல், நமது வலது கையில் செயல் திறமை உள்ளது, அதை மிகச் சரியாக செய்து உண்மையாக வாழ்ந்தால், இடது கையில் வெற்றி தானாகவே வந்து சேரும். இது ஒரு வகை ஆன்மீக வாழ்க்கை. 

இறைவனுக்கு நீங்கள் பிரசாதம் செய்து, படையலிட்டு, மிகப்பிரமாண்டமான பூஜை செய்ய வேண்டும் என்பதெல்லாம் இல்லை. அதை அவன் விரும்புவதும் இல்லை. அவன் விரும்புவதெல்லாம் ஒன்றே ஒன்று தான். அது தான் உண்மையான பக்தி. இறைவனுக்கு நம் உள்ளத்தின் ஒரு சிறு ஓரத்தில் உண்மையான பக்தியை வைத்து, சதா சர்வ காலமும் அவனை நினைத்து, எந்த செயல் செய்தாலும், அது அவனால் தான் செய்யப்படுகிறது, என்ற நினைப்புடன் செய்து, அந்த செயலின் பலனை அவனுக்கு சமர்ப்பணம் செய்து வாழ்ந்து வந்தால் அதுவே உச்சகட்ட ஆன்மீகம்.

 கடவுள் அனைத்திலும் இல்லை. ஆனால் அனைத்துமே கடவுளாக இருக்கிறார் என்ற பழமொழி ஒன்று உண்டு. இதன் அடிப்படையில் இந்த உலக உயிர்களுக்கு உங்களால் இயன்ற உதவி செய்து, அதற்கான பலனை எதிர்பார்க்காமல், வாழ்ந்து வந்தால், மிகச்சரியான பாதையில் இறைவனை நீங்கள் நெருங்கி கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

Friday, June 29, 2012

ஸ்ரீ காளஹஸ்தி திருத்தல வரலாறு

ஸ்ரீ காளஹஸ்தி திருத்தலம்

ஸ்ரீ(சீ) - காளம் - அத்தி = சிலந்தி - பாம்பு - யானை ஆகிய மூன்றும் வழிபட்டுப் பேறு பெற்ற சிறப்புடைய தலம்.

இங்கு வந்த அகத்தியர் விநாயகரை வழிபடாமற் போகவே, பொன்முகலி ஆறு நீரின்றி வற்றியது; அகத்தியர் தம் தவறுணர்ந்து பாதாளத்தில் - ஆழத்தில் விநாயகரைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு அருள் பெற்றார் என்பது தல வரலாற்றுச் செய்தி. (பாதாள விநாயகர் சந்நிதி உள்ளது.)


'திருமஞ்சனக் கோபுரம் ' எனப்படும் கோபுரத்திலிருந்து பார்த்தால், நேரே பொன்முகலி ஆறு தெரியும்; ஆற்றுக்குச் செல்வதற்கு படிக்கட்டுகள் உள்ளன. இவ்வழியேதான் திண்ணனார் (கண்ணப்பர்) பொன்முகலி நீரைக் கொண்டுவந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்தார் என்று சொல்லப்படுகிறது.


சண்டேசுவரர் சந்நிதி - மூலவர் பாணம் மட்டும் ஒன்று மிக உயரமாக உள்ளது; முகலாயர் படையெடுப்பின்போது கோயிலில் உள்ள மூல விக்ரகங்களை உடைத்துச் செல்வங்களை அபகரித்து வந்தனர்; அவ்வாறு இங்கு நிகழாதபடி தடுக்கவே மூலவருக்கு முன்னால் இதைப் பிரதிஷ்டை செய்துவைத்து அவ்விடத்தை மூடிவிட, வந்தவர்கள் இதையே உண்மையான மூலவர் என்றெண்ணி, உடைத்துப்பார்த்து, ஒன்றும் கிடைக்காமையால் திரும்பிவிட, பின்பு சிலகாலம் கழித்து மூலவர் சந்நிதி திறக்கப்பட்டதாம். அப்போது முன் இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, படையெடுப்பாளர்களால் உடைக்கப்பட்ட பாணமே இது என்று சொல்லப்படுகிறது.

Thursday, June 28, 2012

அனைத்து அம்மன்களின் காயத்திரி மந்திரங்கள் (ராகுதோஷ நிவர்த்திக்காக)

காயத்திரி
(சகல காரியங்கள் வெற்றி அடைய)

ஓம் பூர்புவஸ்ஸுவஹ் தத்ஸ விதுர்
வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோனஹ் ப்ரசோதயாத்

துர்கை
(ராகுதோஷ நிவர்த்திக்காக)

ஓம் காத்யாயனாய வித்மஹே
கன்யகுமரி தீமஹி
தன்னோ துர்கிஹ் ப்ரசோதயாத்

ஓம் சிம்மத் வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தன்னோ மாரி ப்ரசோதயாத்

அன்னபூரணி தேவி
(நித்தியான்ன பிராப்திக்காக)

ஓம் பக்வத்யைஹ் வித்மஹே
மஹேஸ்வர்யைஹ் தீமஹி
தன்னோ அன்னபூர்ண ப்ரசோதயாத்

சிவதூதி

ஓம் சிவதூத்யை ச வித்மஹே
சிவங்கர்யைச தீமஹி
தன்னோ நித்யஹ் ப்ரசோதயாத்

பாலா

ஓம் திருபுரசுந்தரீ வித்மஹே
காமேஸ்வரீ ச தீமஹி
தன்னோ பாலா ப்ரசோதயாத்

அம்ருதேஸ்வரி தேவி
(ஆயுள் ஆரோக்கியம் பெற)

ஓம் சௌஹ் த்ரிபுரதேவி ச வித்மஹே
சக்தீஸ்வரீ ச தீமஹி
தன்னோ அம்ருத ப்ரசோதயாத்

வாக்பலா
(பேச்சுபிழை சரியாக)

ஓம் ஐம் திரிபிராதேவீ வித்மஹே
வாக்பவேஸ்வரீ தீமஹி
தன்னோ முக்திஹ் ப்ரசோதயாத்

சர்வமங்கள
(நல் பயணத்திற்கு)

ஓம் சர்வமங்களை வித்மஹே
மஹாச் சந்த்ரத்மிகயை தீமஹி
தன்னோ நித்ய ப்ரசோதயாத்

கன்னிகா பரமேஸ்வரி

(மாங்கல்ய பிராப்தம் கிடைக்க)

ஓம் பாலாரூபிணி வித்மஹே
பரமேஸ்வரி தீமஹி
தன்னோ கந்யா ப்ரசோதயாத்

ஓம் த்ரிபுராதேவீ வித்மஹே
கந்யாரூபிணீ தீமஹி
தன்னோ கந்யா ப்ரசோதயாத்

காமேச்வரி
(மங்களம் உண்டாக)

ஓம் க்லீம் த்ரிபுரதேவீ வித்மஹே
காமேச்வர்யை தீமஹி
தன்னோ க்லிண்ணே ப்ரசோதயாத்

ஓம் காமேஸ்வர்யை வித்மஹே
நித்யக்லிந்நாய தீமஹி
தன்னோ நித்யஹ் ப்ரசோதயாத்

காமதேனு
(கேட்டது கிடைக்க)

ஓம் சுபகாமாயை வித்மஹே
காமதாத்ரை ச தீமஹி
தன்னோ தேனுஹ் ப்ரசோதயாத்

காளிகா தேவி
(கேட்ட வரம் கிடைக்க)

ஓம் காளிகாயை ச வித்மஹே
ஸ்மசான வாசின்யை தீமஹி
தன்னோ கோரா ப்ரசோதயாத்

வாராஹி
(நினைத்தது நிறைவேற)

ஓம் வராஹமுகி வித்மஹே
ஆந்த்ராஸனீ தீமஹி
தன்னோ யமுனா ப்ரசோதயாத்

குலசுந்தரி
(சொத்து, கவுரவம் அடைய)

ஓம் குலசுந்தர்யை வித்மஹே
காமேஸ்வர்யை தீமஹி
தன்னோ நித்யஹ் ப்ரசோதயாத்

சந்தோஷி மாதா
(திருமண தடை நீங்க)

ஓம் ருபாதேவீ ச வித்மஹே
சக்திரூபிணி தீமஹி
தன்னோ சந்தோஷி ப்ரசோதயாத்

கவுமாரி தேவி
(சக்தி பெற)

ஓம் சிகித்வஜாயை வித்மஹே
வஜ்ர (சக்தி) ஹஸ்தாயை தீமஹி
தன்னோ கௌமாரீ ப்ரசோதயாத்

கவுரிதேவி
(தியானம் சித்தி அடைய)

ஓம் சுவபாகாயை வித்மஹே
காம மாளினை தீமஹி
தன்னோ கௌரீஹ் ப்ரசோதயாத்

ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
ருத்ரபத்ன்யை ச தீமஹி
தன்னோ கௌரீஹ் ப்ரசோதயாத்

ஓம் கணாம்பிகாய வித்மஹே
மஹாதபாய தீமஹி
தன்னோ கௌரீஹ் ப்ரசோதயாத்

ஓம் சௌபாக்யதாயை வித்மஹே
காம மாலாய தீமஹி
தன்னோ கௌரீஹ் ப்ரசோதயாத்

ஓம் ஸோஹம்ச வித்மஹே
பரமஹம்ஸாய தீமஹி
தன்னோ கௌரீஹ் ப்ரசோதயாத்

கங்காதேவி
(ஞாபக சக்தி பெற)

ஓம் த்ரிபதகாமினி வித்மஹே
ருத்ரபத்ன்யை ச தீமஹி
தன்னோ கங்கா ப்ரசோதயாத்

சாமுண்டி

ஓம் பிசாசத்வஜாய வித்மஹே
சூலஹஸ்தாய தீமஹி
தன்னோ காளி ப்ரசோதயாத்

ஓம் சாமுண்டேஸ்வரி வித்மஹே
சக்ரதாரிணி தீமஹி
தன்னோ சாமுண்டிஹ் ப்ரசோதயாத்

சித்ரா
(கலைகளில் தேர்ச்சி பெற)

ஓம் ஸ்ரீசித்ர்யை ச வித்மஹே
மஹாநித்யை ச தீமஹி
தன்னோ நித்ய ப்ர சோதயாத்

சின்னமஸ்தா
(எதிரிகளை வெல்ல)

ஓம் வைரேசான்யை ச வித்மஹே
சின்னமஸ்தாயை ச தீமஹி
தன்னோ தேவி ப்ரசோதயாத்

சண்டீஸ்வரி
(நவகிரக தோஷங்கள் விலக)

ஓம் சண்டீஸ்வரி ச வித்மஹே
மஹாதேவீ ச தீமஹி
தன்னோ சண்டீ ப்ரசோதயாத்

ஓம் அப்ஜஹஸ்தாய வித்மஹே
கௌரீஸித்தாய தீமஹி
தன்னோ சண்டீ ப்ரசோதயாத்

ஜெயதுர்கா
(வெற்றி கிடைக்க)

ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
துர்காயை ச தீமஹி
தன்னோ தேவீ ப்ரசோதயாத்

ஓம் நாராண்யை வித்மஹே
துர்காயை ச தீமஹி
தன்னோ கேணீ ப்ரசோதயாத்

ஜானகிதேவி
(கணவன் மனைவி ஒற்றுமை நிலைக்க)

ஓம் ஜனகனாயை வித்மஹே
ராமபிரியாய தீமஹி
தன்னோ சீதா ப்ரசோதயாத்

ஓம் அயோநிஜாயை வித்மஹே
ராமபத்ன்யை ச தீமஹி
தன்னோ சீதா ப்ரசோதயாத்

ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
ராமபத்ன்யை ச தீமஹி
தன்னோ சீதா ப்ரசோதயாத்

ஜ்வாலாமாலினி
(பகைவரை வெல்ல)

1ஓம் ஜ்வாலாமாலினி வித்மஹே
மஹா ஜ்வாலாயை தீமஹி
தன்னோ நித்ய ப்ரசோதயாத்

ஜேஷ்டலக்ஷ்மி
(மந்திர சக்தி பெற)

ஓம் ரக்த ஜேஷ்டாயை வித்மஹே
நீலஜேஷ்டாயை தீமஹி
தன்னோ லக்ஷ்மீஹ் ப்ரசோதயாத்

துவரிதா

ஓம் த்வரிதாயை வித்மஹே
மஹாநித்யாய தீமஹி
தன்னோ தேவீ ப்ரசோதயாத்

தாராதேவி

ஓம் தாராயை ச வித்மஹே
மனோக்ரஹாயை தீமஹி
தன்னோ தேவீ ப்ரசோதயாத்

திரிபுரசுந்தரி

ஓம் ஐம் திரிருபுரதேவ்யை வித்மஹே
க்ளீம் காமேஸ்வர்யை தீமஹி
சௌஹ் தன்னோ க்ளின்னே ப்ரசோதயாத்

ஓம் ஹைம் திரிபுரதேவி வித்மஹே
க்ளீம் காமேஸ்வரீ தீமஹி
சௌஹ் தன்னோ க்ளின்வியை ப்ரசோதயாத்

மஹா திரிபுரசுந்தரி

ஓம் ஹைம் திரிபுராதேவி வித்மஹே
சௌஹ் சக்தீஸ்வரி ச தீமஹி
தன்னோ சக்திஹ் ப்ரசோதயாத்

ஓம் வாக்பவேஸ்வரி வித்மஹே
காமேஸ்வரி ச தீமஹி
தன்னோ சக்திஹ் ப்ரசோதயாத்

ஓம் க்ளீம் திரிபுராதேவி வித்மஹே
காமேஸ்வரி ச தீமஹி
தன்னோ க்ளிண்ணெ ப்ரசோதயாத்

தனலட்சுமி
(செல்வம் பெற)

ஓம் தம்தனதாயை வித்மஹே
ஸ்ரீம் ரதிபிரியாயை தீமஹி
ஹ்ரீம் ஸ்வாஹா சக்தி ப்ரசோதயாத்

பராசக்தி
(வாக்குவன்மை பெற)

ஓம் தசவனாய வித்மஹே
ஜ்வாமாலாயை ச தீமஹி
தன்னோ பராசக்தி ப்ரசோதயாத்

பிரணவதேவி

ஓம் ஓம்காராய வித்மஹே
பவதாராய தீமஹி
தன்னோ ப்ரணவஹ் ப்ரசோதயாத்

தரா

ஓம் தனுர்தைர்யை ச வித்மஹே
சர்வ சித்தை ச தீமஹி
தன்னோ தரா ப்ரசோதயாத்

தூமாவதி

ஓம் தூமாவத்யை ச வித்மஹே
சம்ஹாரின்யை ச தீமஹி
தன்னோ தூம ப்ரசோதயாத்

நீலபதாகை
(தேர்தலில் மற்றும் பரீட்சையில் வெற்றி பெற)

ஓம் நீலபதாகை வித்மஹே
மஹாநித்யாயை தீமஹி
தன்னோ நித்ய ப்ரசோதயாத்

நீளா

ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
விஷ்ணுபத்ன்யை ச தீமஹி
தன்னோ நீளாஹ் ப்ரசோதயாத்

ஓம் விஷ்ணுபத்ன்யை ச வித்மஹே
ஸ்ரீ பூ சகை ச தீமஹி
தன்னோ நீளாஹ் ப்ரசோதயாத்

ஸ்ரீ(மகாலட்சுமி)

ஓம் தேஜோரூப்யை ச வித்மஹே
விஷ்ணுபத்ன்யை ச தீமஹி
தன்னோ ஸ்ரீஹ் ப்ரசோதயாத்

ஸ்ரீதேவி

ஓம் தேவீமனௌஜ ச வித்மஹே
மஹாசக்த்யை தீமஹி
தன்னோ தேவீஹ் ப்ரசோதயாத்

தேவி பிராஹ்மணி

ஓம் தேவீ பிராஹ்மணி வித்மஹே
மஹாசக்த்யை ச தீமஹி
தன்னோ தேவீ ப்ரசோதயாத்

சூலினிதேவி

(தீய சக்திகளிலிருந்து காக்க)

ஓம் ஜ்வாலாமாலினி வித்மஹே
மஹாசூலினி தீமஹி
தன்னோ துர்கா ப்ரசோதயாத்

ஓம் ஜ்வாலாமாலினி வித்மஹே
மஹாசூலினி தீமஹி
தன்னோ துர்கஹ் ப்ரசோதயாத்

சரஸ்வதி
(கல்வியும், விவேகமும் பெருக)

ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே
விரிஞ்சிபத்ன்யை ச தீமஹி
தன்னோ வாணீஹ் ப்ரசோதயாத்

ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே
ஸர்வ ஸித்தீச தீமஹி
தன்னோ வாணீஹ் ப்ரசோதயாத்

ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே
பிரஹ்மபத்ன்யை ச தீமஹி
தன்னோ வாணீஹ் ப்ரசோதயாத்

 ஓம் யேயே சர்வபிரியவாக் வித்மஹே
ப்ரீம் வாகீஸ்வரீ தீமஹி
தன்னோ சக்திஹ் ப்ரசோதயாத்

ஓம் ஐம் வாக்தேவ்யை ச வித்மஹே
காமராஜாய தீமஹி
தன்னோ தேவீ ப்ரசோதயாத்

ஓம் சரஸ்வத்யை ச வித்மஹே
பிரஹ்ம பத்ன்யை ச தீமஹி
தன்னோ தேவீ ப்ரசோதயாத்

ஓம் வாகீஸ்வர்யை ச வித்மஹே
பிரஹ்ம பத்ன்யை ச தீமஹி
தன்னோ வாணீ ப்ரசோதயாத்

லட்சுமி
(சகல செல்வங்களையும் அடைய)

ஓம் மஹாலக்ஷ்மை ச வித்மஹே
விஷ்ணுபத்ன்யை ச தீமஹி
தன்னோ லக்ஷ்மீஹ் ப்ரசோதயாத்

ஓம் லக்ஷ்மிர் பூர்புவஹ் லக்ஷ்மி
ஸ்வஹ் காலகம் தீமஹி
தன்னோ மஹாலக்ஷ்மீஹ் ப்ரசோதயாத்

ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
விஷ்ணுபந்தாய ச தீமஹி
தன்னோ லக்ஷ்மீஹ் ப்ரசோதயாத்

ஓம் பூ ஸக்யைச வித்மஹே
விஷ்ணுபத்னீ ச தீமஹி
தன்னோ லக்ஷ்மீஹ் ப்ரசோதயாத்

ஓம் அமிர்தவாசினி வித்மஹே
பத்மலோசனீ தீமஹி
தன்னோ லக்ஷ்மீஹ் ப்ரசோதயாத்

சப்தமாத்ருகா தேவி

ஓம் ஹம்சத்வஜாய வித்மஹே
கூர்ச்ச ஹஸ்தாய தீமஹி
தன்னோ பிராஹ்மீ ப்ரசோதயாத்

பகமாளினி
(சுக பிரசவத்திற்காக)

ஓம் பகமாளிணி வித்மஹே
சர்வ வசங்கர்யை தீமஹி
தன்னோ நித்ய ப்ரசோதயாத்

பகளாதேவி

ஓம் ஜம்பகளாமுகீ வித்மஹே
ஓம் க்ளீம் காந்தேஸ்வரீ தீமஹி
தன்னோ ஸெளஹ் தந்தஹ் ப்ரஹ்லீம் ப்ரசோதயாத்

ஓம் குலகுமாரை வித்மஹே
பீதாம்பராயை தீமஹி
தன்னோ பகளா ப்ரசோதயாத்

பகளாமுகி

ஓம் பகளாமுக்யை ச வித்மஹே
சதம்பின்யை ச தீமஹி
தன்னோ தேவ ப்ரசோதயாத்

ஓம் ப்ரஹ்மாஸ்த்ராய வித்மஹே
மஹாஸ்தம்பிணி தீமஹி
தன்னோ பகளா ப்ரசோதயாத்

ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
பகளாமுகி தீமஹி
தன்னோ அஸ்த்ரஹ் ப்ரசோதயாத்

பாரதிதேவி

ஓம் நாகாராயை ச வித்மஹே
மஹா வித்யாயை தீமஹி
தன்னோ பாரதீ ப்ரசோதயாத்

புவனேஸ்வரி தேவி

ஓம் நாராயந்யை வித்மஹே
புவநேஸ்வர்யை தீமஹி
தன்னோ தேவி ப்ரசோதயாத்

பூமா தேவி
(வீடு, நிலம் வாங்க)

ஓம் தநுர்தராயை ச வித்மஹே
சர்வஸித்தைச தீமஹி
தன்னோ தராஹ் ப்ரசோதயாத்

பைரவி தேவி

ஓம் த்ரிபுராதேவி வித்மஹே
காமேஸ்வரி ச தீமஹி
தன்னோ பைரவீ ப்ரசோதயாத்

ஓம் த்ரிபுராயை வித்மஹே
பைரவைச தீமஹி
தன்னோ தேவி ப்ரசோதயாத்

மகாமாரி
(அம்மை வியாதி குணமடைய)

ஓம் பிசாசத்வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தன்னோ மாரி ப்ரசோதயாத்

மஹா வஜ்ரேஸ்வரி
(பிரச்சனைகளில் தீர்வு காண)

ஓம் மஹா வஜ்ரேஸ்வராய வித்மஹே
வஜ்ரநித்யாய தீமஹி
தன்னோ நித்ய ப்ரசோதயாத்

மகாசக்தி
(மந்திர சக்தியில் வல்லமை பெற)

ஓம் தபோமயை வித்மஹே
காமத்ருஷ்ணை ச தீமஹி
தன்னோ மஹாசக்தி ப்ரசோதயாத்

மஹிஷாஸுரமர்தினி
(பகைவர்கள் சரணாகதி அடைய)

ஓம் மஹிஷமர்தின்யை வித்மஹே
துர்காதேவ்யை ச தீமஹி
தன்னோ தேவீ ப்ரசோதயாத்

மகேஸ்வரி
(சர்ப தோஷம் நீங்க)

ஓம் வ்ருஷத்வஜாய வித்மஹே
மிருக ஹஸ்தாய தீமஹி
தன்னோ ரௌத்ரீ ப்ரசோதயாத்

மாதங்கி
(அஷ்ட ஐஸ்வர்யங்களை அடைய)

ஓம் மாதங்க்யை வித்மஹே
உச்சிஷ்ட சாண்டால்யை தீமஹி
தன்னோ தேவி ப்ரசோதயாத்

மாத்ரு (கா)
ஓம் சர்வசக்திஸ்ச வித்மஹே
ஸப்தரூப ச தீமஹி
தன்னோ தேவீ ப்ரசோதயாத்

மீனாக்ஷி
(சகல சவுபாக்கயங்களை பெற)

ஓம் உன்னித்ரியை ச வித்மஹே
சுந்தபப்ரியாயை ச தீமஹி
தன்னோ மீனாக்ஷீ ப்ரசோதயாத்

முக்தீஸ்வரி

ஓம் த்ரிபுரதேவி வித்மஹே
முக்தீஸ்வரி ச தீமஹி
தன்னோ முக்திஹ் ப்ரசோதயாத்

யமுனா

ஓம் யமுனா தேவ்யை ச வித்மஹே
தீர்தவாசினி தீமஹி
தன்னோ யமுனா ப்ரசோதயாத்

ராதா
(அனுகிரகஹம் பெற)

ஓம் விருஷபானுஜாயை வித்மஹே
கிருஷ்ணப்ரியாயை தீமஹி
தன்னோ ராதிகா ப்ரசோதயாத்

ஓம் ஸர்வ ஸம்மோஹின்யை வித்மஹே
விஸ்வஜனன்யை தீமஹி
தன்னோ சக்தி ப்ரசோதயாத்

வாணி
(கலைகளில் தேர்ச்சி பெற)

ஓம் நாதமயை ச வித்மஹே
வீணாதராயை தீமஹி
தன்னோ வாணீ ப்ரசோதயாத்

வாசவி

ஓம் வாசவ்யை ச வித்மஹே
குசுமபுத்ர்யை ச தீமஹி
தன்னோ கண்யகா ப்ரசோதயாத்

விஜயா
(வழக்குகளில் வெற்றி பெற)

ஓம் விஜயதேவ்யை வித்மஹே
மஹாநித்யாய தீமஹி
தன்னோ நித்ய ப்ரசோதயாத்

வைஷ்ணவி தேவி
(திருமண தடை நீங்க)

ஓம் தார்க்ஷ்யத்வஜாய வித்மஹே
சக்ர ஹஸ்தாய தீமஹி
தன்னோ வைஷ்ணவீ ப்ரசோதயாத்

ஓம் சக்ரதாரிணீ வித்மஹே
வைஷ்ணவீதேவீ தீமஹி
தன்னோ சக்திஹ் ப்ரசோதயாத்

சியாமளா
(சகல சவுபாக்யங்களும் கிடைக்க)

ஓம் ஐம் சுகப்பிரியாயை வித்மஹே
க்லீம் காமேஸ்வரி தீமஹி
தன்னோ சியாமா ப்ரசோதயாத்

ஓம் மாதங்கேஸ்வரி வித்மஹே
காமேஸ்வரி ச தீமஹி
தன்னோ க்லின்னே ப்ரசோதயாத்

துர்கா தேவி

ஓம் காத்யாயனாய வித்மஹே
கன்யகுமரி தீமஹி
தன்னோ துர்கிஹ் ப்ரசோதயாத்

வனதுர்கா

ஓம் உத்திஷ்ட புருஷ்யை வித்மஹே
மகாசக்த்யை தீமஹி
தன்னோ வனதுர்கா ப்ரசோதயாத்

ஆஸூரி துர்கா

ஓம் மகா காம்பீர்யை வித்மஹே
சத்ரு பக்ஷிண்யை தீமஹி
தன்னோ ஆஸூரி துர்கா ப்ரசோதயாத்

திருஷ்டி துர்கா

ஓம் ஹ்ரீம் தும் திருஷ்டிநாசின்யை வித்மஹே
தும் ஹ்ரீம் ஓம் துஷ்ட நாசின்யை தீமஹி
தன்னோ திருஷ்டி துர்கா ப்ரசோதயாத்   

ஜாதவேதா துர்கா

ஓம் ஜாதவேதாயை வித்மஹே
வந்தி ரூபாயை தீமஹி
தன்னோ ஜாதவேதோ ப்ரசோதயாத்

வனதுர்கா

ஓம் ஹ்ரீம் தும் லவந்தராயை வித்மஹே
தும் ஹ்ரீம் ஓம் பயநாசிந்யை தீமஹி
தன்னோ வந துர்கா ப்ரசோதயாத்

சந்தான துர்கா

ஓம் காத்யாயண்யை வித்மஹே
கர்பரக்ஷிண்யை தீமஹி
தன்னோ சந்தான துர்கா ப்ரசோதயாத்

சபரி துர்கா

ஓம் காத்யாயண்யை வித்மஹே
கால ராத்ர்யை தீமஹி
தன்னோ சபரி துர்கா ப்ரசோதயாத்

சாந்தி துர்கா

ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
ஜயவரதாயை தீமஹி
தன்னோ சாந்தி துர்கா ப்ரசோதயாத்

தொழிலாளி செய்யும் தவறுக்கு யார் பொறுப்பு?

ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளி பணியில் தவறு செய்து விடுகிறான். இதனால் அந்த நிறுவனத்திற்கு சிறிது நஷ்டம் ஏற்படுவதுடன், கெட்ட பெயரும் ஏற்படுகிறது.  இப்படி  ஏற்பட்ட அந்த தவறுக்கு யார் பொறுப்பாளி? என்பதை ஒரு புராணக்கதை மூலம் தெரிந்து கொள்வோமா?

விபீஷணனை காட்டில் சில அந்தணர்கள் சிறைபிடித்து விட்டதாக ராமர் கேள்விப்பட்டார். அந்தணர்களிடம் நேரில் சென்ற ராமர், அங்கு கை, கால் கட்டப்பட்ட நிலையில் அவர் இருந்ததைக் கண்டு அதிர்ந்தார். ராமரைக் கண்ட அந்தணர்கள் அவரது திருவடியில் விழுந்து வணங்கி வரவேற்றனர். காட்டில் கிடைத்த கனிவகைகளை கொடுத்து உபசரித்தனர். விபீஷணரைத் தேடித் தான் ராமர் வந்திருக்கிறார் என்பதை உணர்ந்தனர். அவரிடம் சுவாமி! தர்ப்பை சேகரிப்பதற்காக வயோதிக அந்தணர் ஒருவர் வனப்பகுதிக்கு  வந்திருந்தார். அவர் எப்போதும் மவுன விரதம் மேற்கொள்பவர். அப்போது தேரில் வந்த இந்த அரக்கன் அவருடன் பேச முற்பட்டான். ஆனால், அவரோ மவுனம் காத்தார். கோபம் கொண்டு காலால் அவரை உதைத்து விட்டான். நிலைகுலைந்து விழுந்த அந்தணரின் உயிர் போய்விட்டது. அதனால் இவனைக் கட்டி வைத்தோம். எங்களின் நல்லகாலம். உத்தமரான நீங்கள் இங்கு வந்திருக்கிறீர்கள். கொலைகாரப்பாவியான இவனுக்கு தண்டனை வழங்குங்கள், என்று கேட்டுக் கொண்டனர். விபீஷணன் தலை குனிந்து நின்றான். ராமர் அந்தணர்களிடம்,இவன் என்னுடைய பணியாளன்.ஒரு பணியாளனின் செய்கைக்கு எஜமானான நானே பொறுப்பாளி. இவனுக்கு கொடுக்க நினைக்கும் தண்டனையை நான் ஏற்றுக் கொள்கிறேன், என்றார். இதைக் கேட்டு அந்தணர்களின் உள்ளம் நெகிழ்ந்தது.  விபீஷணனுக்கு அவரைக் கொல்ல வேண்டும் என்ற நோக்கம் இல்லை என்பதையும், அவருடைய மரணம் தற்செயலாக நடந்தது என்பதையும் உணர்ந்தனர். விபீஷணனை விடுவித்து ராமருடன் அனுப்பி வைத்தனர்.

Tuesday, June 26, 2012

காயந்திரி மந்தரம் ≠ காயத்ரீ மகாமந்த்ரம்

‘காயம் + திரி + மந்திரம் = காயந்திரி மந்திரம்’ என்ற பேருண்மை தெரியாததால் தமிழர்கள், ஆரியர்களுக்குரிய வடமொழி ‘சமசுக்கிருதம்’ மந்திரமே ‘காயத்திரி மந்திரம்’ என்று தவறாகக் கருதுகிறார்கள். இது தவறு.
 “மெய் உய்ய,  மெய்யும் உயிரும் வாய்மை பெற,  பத்தி சத்தி சித்தி முத்தி எனும் நான்கு நிலைகளைப் பெற்றிட,  அச்சம் இச்சை கூச்சம் மாச்சரியம் எனும் நான்கும் வாழ்வை நலிவடையாமல் காத்திடக் காயந்திரி மந்திரம் காலை மாலை இருவேளை கூறப்படல் வேண்டும்....” என்று குருபாரம்பரியம் மிகத் தெளிவாகக் காயத்திரி மந்திரம் பற்றிக் கூறுகிறது.
      பன்னெடுங் காலமாகச் சித்தர்களின் விந்துவழி வாரிசுகளன்றிப் பிறர் அறிய முடியாது இருந்த ‘கருவறை உயிர்ப்பு மந்திறம்’, ‘கட்டு மந்திறம்’, ‘ஐந்தீ வேட்டம் தோத்திறம்’ .... முதலியவைகளை யாம் இப்போது நம்மவர்களுக்கு வழங்கி வருகிறோம். இது புதுமை, புரட்சி, மறுமலர்ச்சி, வளர்ச்சி.... எனப் பாராட்டப் படுகிறது. 
          'காயத்திரி மந்தரம்' என்று சமசுக்கிருதத்தில் கூறப்பட்டு வருவதைத் தவிர்த்து தமிழில் உள்ள இம்மந்தரத்தை அனைவரும் நாடு, மொழி, இன, மத.... வேறுபாடின்றி உடனடியாகப் பயன்படுத்தித் தங்களை அமைதியான, அறிவான, இளமையான, இனிமையான.... வாழ்க்கைக்கு உட்படுத்திக் கொண்டு சிறக்கும்படி வேண்டுகிறோம். தமிழில் உள்ள மந்திறங்கள்தான் குறிப்பிட்ட ஒரு இனத்துக்கு உரியன என்றில்லாமல் அனைவரும் பயன்படுத்தக் கூடிய விதத்தில் பதினெண் சித்தர்கள்   படைத்துள்ளனர்.




ஓம் பூர்வ புலன்கள் சுவையாகுக!
தத்துவ வித்துக்கள் அரணாகுக!
பாரின்கோ தேவர் வசிக்கும் தீ மகிழட்டும்!
தீயே யோகப் பரஞ்சோதி யாகும்!"
இதுவே காயந்திரி மந்தரம் (காயம் = உடல், திரி = திரியாமல், மாறாமல்) ஆகும்.
"அனைவரும் ஓதிப் பயனடையட்டும்"
"தனிமனிதச் செழுச்சியே இந்துமதம்"
"தனிமனித வழிபாட்டு ஈட்டமே கூட்டுவழிபாடு"
-குருபாரம்பரியம்
         சமசுக்கிருத வேதங்களால் நடக்கும் ஓமம், ஓகம், யாகம், யக்ஞம், வேள்வி, தவம், பூசை..... முதலிய அனைத்துமே கோடியில் ஒரு பங்கு கூட தமிழ் வேதங்களால் செய்யப்படுவனவற்றால் கிடைக்கும் பயன் போலத் தர முடியாதவை.  இதனால்தான், சித்தர்கள் கட்டிய 48 வகையான வழிபாட்டு நிலையங்களும் அருள்நலம் குன்றிப் பொலிவிழந்து விட்டன.  குறிப்பாகக் குடமுழுக்கு விழாக்கள், கருவறைப் புத்துயிர்ப்புக்கள், எழுந்தருளிப் புத்துயிர்ப்புக்கள், சக்கரப் பூசைகள், ஏந்தரப் பூசைகள்.... எல்லாம் சித்தர்களின் மரபுப்படி 'இலைக் குலுங்கா நடுச் சாமத்தில்' (நடுநிசியே உயிர்ப்புப் பூசைக்குரியது - குருவாக்கு),  'அனைத்தும் உறங்கும் நள்ளிரவில்'  'அருவ, அருவுருவ ஆட்சிக்குரிய நடு யாமத்தில்தான்' செய்ய்பப்பட வேண்டும்' என்ற சித்தர் நெறி, சட்டம், ஒழுங்கு, மரபு, பூசாவிதி, படி, கட்டளை, ஆணை, அருளுரை, அறிவுரை..... முதலியவைகளை மீறி ஆரியர்கள் செயல்பட்டே இந்துமதத்தின் பத்தி, சத்தி, சித்தி, முத்தி எனும் நான்கையும் பகற்கனவாக, மாயமாக ஆக்கி விட்டார்கள். இதனால்தான் 'கடவுளைக் கண்டவர் விண்டதில்லை, விண்டவர் கண்டதில்லை' என்று தவறான பழமொழி பிறந்தது. எல்லோருமே இறை, கடவுள், தெய்வம், ஆண்டவர், பட்டவர்,..... எனும் நாற்பத்தெட்டு வகையினரையும் காணலாம், யார் விரும்பினாலும் மேற்கூறிய 48 நிலைகளில் யாராகவும் மாறலாம்.... என்ற சித்தர் நெறியே மக்களுக்குத் தெரியாத ஒன்றாகிவிட்டது.
    காயத்திரி மந்திரம் என்று ஒலியைக் குறிக்கும் பொருளற்ற சொற்களால் உருவான ஒரு பூசை மந்திரத்தை உருவாக்கி அதனை ஆரியர்கள் ஓதுவதன் மூலம் தமிழர்கள் தங்களிடமிருந்த காயந்திரி மந்தரம், மாந்தரம், மாந்தரீகம், மந்திரம், மந்திறம்.... என்பவைகள் ஆரியர்களிடமிருந்து வந்தவையென்றும், ஆரியர்கள் சமசுக்கிருதத்தில் ஓதுவதுபோல் ஓதினால்தான் பயனென்றும் கருதித் தங்களுடைய ஐந்தையும் விட்டு ஆரியருடைய காயத்ரீ மந்த்ரத்தையே ஓத ஆரம்பித்து நாளடைவில் அதனால் பயன் தெரியாமையால் அதனையும் ஓதாது விட்டு விட்டனர். இதுதான் சமசுக்கிருதத்தால் தமிழுக்கும் தமிழருக்கும் இந்துமதத்துக்கும் ஏற்பட்ட பேரழிவு, பெருங்கேடு. 
  •     காயந்திரி மந்திரங்கள் தமிழர்களுடையவைதான். தமிழில்தான் முதன் முதல் பதினெண் சித்தர்களால் படைக்கப்பட்டன.
  •     காயந்திரி மந்தரம் பெரியவர், சிறியவர், ஆண், பெண்...... என்ற வேறுபாடு இல்லாமல் அனைவரும் ஓதிப் பதினெட்டாண்டுகளில் மனித வாழ்வுக்குத் தேவையான சத்திகளைப் போதுமான அளவு பெற்றுக் கொள்ள உதவுகிறது.
  •     காயந்திரி மந்தரத்தைச் சொல்லுகின்ற பெண் தன் மனதில் எந்தக் கடவுளை நினைக்கிறாளோ அந்தக் கடவுளாகவே மாறிவிடுகிறாள்.
  •     சூரியனை முழுமுதலாகக் கொண்டு அவனிருக்கும் திசை நோக்கித் தொழுவதுதான் காயந்திரி மந்தரம்.
  •     சாதாரண மானுட வாழ்வில் கடவுளின் அருளைத் தேவையான அளவு பெற்று நிம்மதியும், நிறைவும், அமைதியும், அன்பும் உடைய வாழ்வு வாழ்ந்திடக் காயந்திரி மந்தரம்தான் பேருதவி புரியும். அன்றாடம் 108 முறை ஓதினால் போதும். எல்லா நலங்களும், விழிச்சிகளும், எழுச்சிகளும், செழுச்சிகளும் ஏற்பட்டிடும்.
ஒவ்வொரு மனிதனும் தனது தாய்மொழியில் தமிழில் உள்ள காயந்திரி மந்தரத்தை ஒலி நயம் கெடாமல் அன்றாடம் நூற்றெட்டுத் (108) தடவை ஓதினால், பத்தி, சத்தி, சித்தி, முத்தி.... முதலியவற்றில் படிப்படியாகத் தேர்ச்சியடைவான். நாடு, மொழி, இனம், காலம்.... என்ற எல்லைகளைக் கடந்து இப்பூவுலகில் வாழும் எந்த மனிதன் வேண்டுமானாலும் தமிழில் உள்ள காயந்திரி மந்தரத்தைச் சொல்லி அருளுலகச் செல்வங்களை அடையலாம் (காயந்திரி மந்தரம் ஓர் உலக மந்தரம், மத வேறுபாடு இல்லாமல் ஓதலாம்).  ஏனெனில், இவ்வுலகில் உள்ள அனைத்து வழிபாட்டு நிலையங்களும், வழிபடு நிலையினரும், வழிபாட்டு வாசகங்களும்.... பதினெண் சித்தர்களால்தான் உருவாக்கப்பட்டவை.
    ஞானி, தவசி, கடமைவீரர், இளைஞர், அருளாளர்.... முதலியோர்கள் ஒரு நாளைக்கு ஆறுகாலம் காயந்திரி மந்தரத்தை ஓத வேண்டும். இது காயசித்தி, மாயாசத்தி, ஓயாசத்தி, சாயாசத்தி.... எனும் நாற்பத்தெட்டு வகைச் சித்திகளையும் வழங்கும்.
    ஒவ்வொரு தமிழரும் உடனடியாக அன்றாடம் பதினெண்சித்தர்கள் பகர்ந்துள்ளது போல் காயந்திரி மந்தரம் முறையாக ஓதி நிறைவான அருள்நிலைகளைப் பெற வேண்டும். அதுதான், தனி மனிதர்களைக் காக்கும். தமிழைக் காக்கும், இந்துமதத்தைக் காக்கும்.
    அனைத்து அருளாளர்களும், அருளுலக ஆர்வலர்களும், ஆதரவாளர்களும் காயந்திரி மந்தரம் ஓதி அருட்செல்வர்களாக உருவாவதுதான், இந்து மத மறுமலர்ச்சிப் பணியை வெற்றி பெறச் செய்யும்.