Wednesday, October 1, 2014
வீட்டில் வழிபாட்டிற்காக வைத்த மஞ்சள்பிள்ளையாரை என்ன செய்ய வேண்டும்?
வீட்டில் எந்த வழிபாடு செய்வதாக இருந்தாலும், விசேஷ நிகழ்ச்சிகள் நடத்தினாலும் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வழிபடுவது அவசியம். விநாயகர் வழிபாட்டால் தொடங்கிய செயல் தடையின்றி இனிதே நிறைவேறும் என்பது ஐதீகம். பூஜை முடிந்த மூன்றாம் நாள் வெற்றிலை, பாக்கு சேர்த்து மஞ்சள்பிள்ளையாரையும் ஓடும் ஆற்றிலோ, குளத்திலோ கரைத்து விட வேண்டும் என்பது நியதி.
| |
சரஸ்வதி 108 போற்றி!
சரஸ்வதி பூஜையன்று மட்டுமல்ல! தினமும் மாலையில் மாணவர்கள்
சொல்ல வேண்டிய போற்றியைத் தந்துள்ளோம். இதைச் சொல்வதால்
கல்வியில் அபிவிருத்தி உண்டாகும். பாடங்கள் மனதில் பதியும்.
ஓம் அறிவின் வடிவே போற்றி
ஓம் அறியாமை நீக்குவாய் போற்றி
ஓம் அபயம் அளிப்பாய் போற்றி
ஓம் அனுபூதி அருள்வாய் போற்றி
ஓம் அட்சமாலை கரத்தாய் போற்றி
ஓம் அறிவின் தலைவியே போற்றி
ஓம் அழகில் அன்னமே போற்றி
ஓம் அளவிலா புகழினாய் போற்றி
ஓம் அன்ன வாகினியே போற்றி
ஓம் அகிலம் காப்பாய் போற்றி
ஓம் ஆசான் வடிவே போற்றி
ஓம் ஆனந்த ரூபினியே போற்றி
ஓம் ஆதார சக்தியே போற்றி
ஓம் ஆயகலை அருள்வாய் போற்றி
ஓம் இகபர சுகம் தருவாய் போற்றி
ஓம் இசை வடிவானாய் போற்றி
ஓம் இளமான் சாயலாய் போற்றி
ஓம் இன்னிசை குயிலே போற்றி
ஓம் ஈகை குணத்தாளே போற்றி
ஓம் ஈடிணை இலாளே போற்றி
ஓம் ஈடேற்றுபவளே போற்றி
ஓம் உண்மைப் பொருளே போற்றி
ஓம் உலகம் உய்விப்பாய் போற்றி
ஓம் எண் எழுத்து ஆனாய் போற்றி
ஓம் எழிலே உருவானாய் போற்றி
ஓம் ஏடு ஏந்தியவளே போற்றி
ஓம் ஏகாந்த ரூபிணியே போற்றி
ஓம் கல்விக்கு வித்தே போற்றி
ஓம் கலைமகள் தாயே போற்றி
ஓம் கலை களஞ்சியமே போற்றி
ஓம் கற்றோர்க்கு இனியாய் போற்றி
ஓம் கரை சேர்ப்பவளே போற்றி
ஓம் கலைவாணி தாயே போற்றி
ஓம் கலைக்கு அரசியே போற்றி
ஓம் கம்பரைக் காத்தாய் போற்றி
ஓம் காட்சிக்கு எளியாய் போற்றி
ஓம் காயத்ரியானவளே போற்றி
ஓம் குருவின் வடிவே போற்றி
ஓம் குறை பொறுப்பாய் போற்றி
ஓம் குணக் குன்று ஆனாய் போற்றி
ஓம் குணம் கடந்தவளே போற்றி
ஓம் குருபரர் நாவில் உறைவாய் போற்றி
ஓம் கூத்தருக்கு அருளினாய் போற்றி
ஓம் கூத்தனுõர் வாழ்பவளே போற்றி
ஓம் சகலகலா வல்லியே போற்றி
ஓம் சரஸ்வதி தாயே போற்றி
ஓம் சதுர்முகன் நாயகியே போற்றி
ஓம் சந்தேகம் தீர்ப்பாய் போற்றி
ஓம் சங்கடம் தவிர்ப்பாய் போற்றி
ஓம் சச்சிதானந்த ரூபமே போற்றி
ஓம் சாரதாம்பிகையே போற்றி
ஓம் சாந்த சொரூபினியே போற்றி
ஓம் சான்றோர் வடிவே போற்றி
ஓம் சித்தம் தெளிவிப்பாய் போற்றி
ஓம் சித்தி அளிப்பாய் போற்றி
ஓம் சுருதி மறை பொருளே போற்றி
ஓம் ஞான வித்யாம்பிகையே போற்றி
ஓம் ஞானேஸ்வரித் தாயே போற்றி
ஓம் ஞாலம் வாழ்விப்பாய் போற்றி
ஓம் ஞான சக்தி வடிவே போற்றி
ஓம் ஞானாசிரியை ஆனாய் போற்றி
ஓம் தவக்கோலத் தாயே போற்றி
ஓம் தஞ்சம் அளிப்பாய் போற்றி
ஓம் தயை மிக்கவளே போற்றி
ஓம் தயாநிதி தருபவளே போற்றி
ஓம் துõய மனத்தினாய் போற்றி
ஓம் நவமி தேவதையே போற்றி
ஓம் நன்னெறி நாயகியே போற்றி
ஓம் நலம் அருள்பவளே போற்றி
ஓம் நாவின் அரசியே போற்றி
ஓம் நான்மறை வித்தகியே போற்றி
ஓம் நாத வெள்ளமே போற்றி
ஓம் நாதாந்த வடிவே போற்றி
ஓம் நிறைவாழ்வு தருவாய் போற்றி
ஓம் நுட்பம் மிக்கவளே போற்றி
ஓம் பக்தர் தம் திலகமே போற்றி
ஓம் பண்ணின் வடிவாய் போற்றி
ஓம் பளிங்கு மனத்தினாய் போற்றி
ஓம் படிக நிறத்தினாய் போற்றி
ஓம் பாட்டின் இனிமையே போற்றி
ஓம் பாட்டின் பொருளே போற்றி
ஓம் பிரணவப் பொருளே போற்றி
ஓம் பிரம்ம ஞானியே போற்றி
ஓம் பிரம்மன் துணைவியே போற்றி
ஓம் புலமை மிக்கவளே போற்றி
ஓம் பூரண வடிவினளே போற்றி
ஓம் புவனம் காப்பவளே போற்றி
ஓம் புனிதம் மிக்கவளே போற்றி
ஓம் வாக்கில் இருப்பவளே போற்றி
ஓம் வாக்கு தேவதையே போற்றி
ஓம் வித்யாம்பிகையே போற்றி
ஓம் வித்தக ரத்தினமே போற்றி
ஓம் மந்திர வடிவினாய் போற்றி
ஓம் மயக்கம் தீர்ப்பாய் போற்றி
ஓம் முக்காலம் அறிந்தாய் போற்றி
ஓம் முக்தி அருள்பவளே போற்றி
ஓம் மூல நட்சத்திரத்தாளே போற்றி
ஓம் மேதா ரத்தினமே போற்றி
ஓம் மேன்மை மிக்காய் போற்றி
ஓம் வழித்துணை வருவாய் போற்றி
ஓம் வரம் பல தருவாய் போற்றி
ஓம் வீணை தாங்கியவளே போற்றி
ஓம் வெண்தாமரை உறைவாய் போற்றி
ஓம் வெள்ளாடை உடுத்தாய் போற்றி
ஓம் வித்தகம் அளிப்பாய் போற்றி
ஓம் வேதாந்த நாயகியே போற்றி
ஓம் வேத வடிவானவளே போற்றி
ஓம் வையம் வாழ்விப்பாய் போற்றி
சொல்ல வேண்டிய போற்றியைத் தந்துள்ளோம். இதைச் சொல்வதால்
கல்வியில் அபிவிருத்தி உண்டாகும். பாடங்கள் மனதில் பதியும்.
ஓம் அறிவின் வடிவே போற்றி
ஓம் அறியாமை நீக்குவாய் போற்றி
ஓம் அபயம் அளிப்பாய் போற்றி
ஓம் அனுபூதி அருள்வாய் போற்றி
ஓம் அட்சமாலை கரத்தாய் போற்றி
ஓம் அறிவின் தலைவியே போற்றி
ஓம் அழகில் அன்னமே போற்றி
ஓம் அளவிலா புகழினாய் போற்றி
ஓம் அன்ன வாகினியே போற்றி
ஓம் அகிலம் காப்பாய் போற்றி
ஓம் ஆசான் வடிவே போற்றி
ஓம் ஆனந்த ரூபினியே போற்றி
ஓம் ஆதார சக்தியே போற்றி
ஓம் ஆயகலை அருள்வாய் போற்றி
ஓம் இகபர சுகம் தருவாய் போற்றி
ஓம் இசை வடிவானாய் போற்றி
ஓம் இளமான் சாயலாய் போற்றி
ஓம் இன்னிசை குயிலே போற்றி
ஓம் ஈகை குணத்தாளே போற்றி
ஓம் ஈடிணை இலாளே போற்றி
ஓம் ஈடேற்றுபவளே போற்றி
ஓம் உண்மைப் பொருளே போற்றி
ஓம் உலகம் உய்விப்பாய் போற்றி
ஓம் எண் எழுத்து ஆனாய் போற்றி
ஓம் எழிலே உருவானாய் போற்றி
ஓம் ஏடு ஏந்தியவளே போற்றி
ஓம் ஏகாந்த ரூபிணியே போற்றி
ஓம் கல்விக்கு வித்தே போற்றி
ஓம் கலைமகள் தாயே போற்றி
ஓம் கலை களஞ்சியமே போற்றி
ஓம் கற்றோர்க்கு இனியாய் போற்றி
ஓம் கரை சேர்ப்பவளே போற்றி
ஓம் கலைவாணி தாயே போற்றி
ஓம் கலைக்கு அரசியே போற்றி
ஓம் கம்பரைக் காத்தாய் போற்றி
ஓம் காட்சிக்கு எளியாய் போற்றி
ஓம் காயத்ரியானவளே போற்றி
ஓம் குருவின் வடிவே போற்றி
ஓம் குறை பொறுப்பாய் போற்றி
ஓம் குணக் குன்று ஆனாய் போற்றி
ஓம் குணம் கடந்தவளே போற்றி
ஓம் குருபரர் நாவில் உறைவாய் போற்றி
ஓம் கூத்தருக்கு அருளினாய் போற்றி
ஓம் கூத்தனுõர் வாழ்பவளே போற்றி
ஓம் சகலகலா வல்லியே போற்றி
ஓம் சரஸ்வதி தாயே போற்றி
ஓம் சதுர்முகன் நாயகியே போற்றி
ஓம் சந்தேகம் தீர்ப்பாய் போற்றி
ஓம் சங்கடம் தவிர்ப்பாய் போற்றி
ஓம் சச்சிதானந்த ரூபமே போற்றி
ஓம் சாரதாம்பிகையே போற்றி
ஓம் சாந்த சொரூபினியே போற்றி
ஓம் சான்றோர் வடிவே போற்றி
ஓம் சித்தம் தெளிவிப்பாய் போற்றி
ஓம் சித்தி அளிப்பாய் போற்றி
ஓம் சுருதி மறை பொருளே போற்றி
ஓம் ஞான வித்யாம்பிகையே போற்றி
ஓம் ஞானேஸ்வரித் தாயே போற்றி
ஓம் ஞாலம் வாழ்விப்பாய் போற்றி
ஓம் ஞான சக்தி வடிவே போற்றி
ஓம் ஞானாசிரியை ஆனாய் போற்றி
ஓம் தவக்கோலத் தாயே போற்றி
ஓம் தஞ்சம் அளிப்பாய் போற்றி
ஓம் தயை மிக்கவளே போற்றி
ஓம் தயாநிதி தருபவளே போற்றி
ஓம் துõய மனத்தினாய் போற்றி
ஓம் நவமி தேவதையே போற்றி
ஓம் நன்னெறி நாயகியே போற்றி
ஓம் நலம் அருள்பவளே போற்றி
ஓம் நாவின் அரசியே போற்றி
ஓம் நான்மறை வித்தகியே போற்றி
ஓம் நாத வெள்ளமே போற்றி
ஓம் நாதாந்த வடிவே போற்றி
ஓம் நிறைவாழ்வு தருவாய் போற்றி
ஓம் நுட்பம் மிக்கவளே போற்றி
ஓம் பக்தர் தம் திலகமே போற்றி
ஓம் பண்ணின் வடிவாய் போற்றி
ஓம் பளிங்கு மனத்தினாய் போற்றி
ஓம் படிக நிறத்தினாய் போற்றி
ஓம் பாட்டின் இனிமையே போற்றி
ஓம் பாட்டின் பொருளே போற்றி
ஓம் பிரணவப் பொருளே போற்றி
ஓம் பிரம்ம ஞானியே போற்றி
ஓம் பிரம்மன் துணைவியே போற்றி
ஓம் புலமை மிக்கவளே போற்றி
ஓம் பூரண வடிவினளே போற்றி
ஓம் புவனம் காப்பவளே போற்றி
ஓம் புனிதம் மிக்கவளே போற்றி
ஓம் வாக்கில் இருப்பவளே போற்றி
ஓம் வாக்கு தேவதையே போற்றி
ஓம் வித்யாம்பிகையே போற்றி
ஓம் வித்தக ரத்தினமே போற்றி
ஓம் மந்திர வடிவினாய் போற்றி
ஓம் மயக்கம் தீர்ப்பாய் போற்றி
ஓம் முக்காலம் அறிந்தாய் போற்றி
ஓம் முக்தி அருள்பவளே போற்றி
ஓம் மூல நட்சத்திரத்தாளே போற்றி
ஓம் மேதா ரத்தினமே போற்றி
ஓம் மேன்மை மிக்காய் போற்றி
ஓம் வழித்துணை வருவாய் போற்றி
ஓம் வரம் பல தருவாய் போற்றி
ஓம் வீணை தாங்கியவளே போற்றி
ஓம் வெண்தாமரை உறைவாய் போற்றி
ஓம் வெள்ளாடை உடுத்தாய் போற்றி
ஓம் வித்தகம் அளிப்பாய் போற்றி
ஓம் வேதாந்த நாயகியே போற்றி
ஓம் வேத வடிவானவளே போற்றி
ஓம் வையம் வாழ்விப்பாய் போற்றி
Sunday, September 21, 2014
தெரிந்துகொள்ள வேண்டிய பூஜையறை டிப்ஸ்!
கற்பூரத்துடன் மிளகு சேர்த்து வைத்தால் கற்பூரம் கரையாமல் இருக்கும். தேவதைகளை ஆகர்ஷணம் செய்யும் சக்தி மயிலிறகுக்கு உண்டு என்கின்றன ஞான நூல்கள். அதனால், பூஜையறையில் மயிலிறகை வைத்து வழிபடுவது சிறந்தது. மழை நாட்களில், தீப்பெட்டி தீக்குச்சிகள் நமத்துப் போகும். நான்கு ஐந்து அரிசி மணிகளை உள்ளே போட்டுவைத்தால் தீக்குச்சிகள் நமத்துப் போகாது. காலையிலும் மாலையிலும் கோதூளி லக்னம் எனப்படும் 5 முதல் 6மணி வரையிலான நேரத்தில் பூஜை அறையில் விளக்கேற்றுவது மிக நல்லது. அப்போது வீட்டின் வாசலுக்கு வெளியேயும் விளக்கேற்றி வைத்தால் தேவதைகளின் ஆசி கிட்டும். விளக்கெண்ணெயும் நெய்யும் கலந்து தீபம் ஏற்றி குலதெய்வத்தை வழிபடுவதால், வீட்டில் சர்வ சுபி ட்சங்களும் பெருகும்.
சனியே என திட்டாதீர்!
சனீஸ்வரன் மந்த கதியுள்ளவர் என்பது இயற்கையான விதி. இந்தக் கிரகம் மற்ற கிரகங்களை விட சூரியனை மெதுவாகவே சுற்றும் என்பதால், அறிவியல் ரீதியாக இவ்வாறு சொல்வதுண்டு. வீட்டில் கூட குழந்தை சரியாகப் படிக்கவில்லை என்றால், ஏன் மந்தமாக இருக்கிறாய்? என கேட்பதுண்டு. மந்தகதி உள்ளவர்களுக்காக சனீஸ்வரனுக்கு அர்ச்சனை செய்யலாம். ஆனால் சனியே என திட்டக்கூடாது. இவ்வாறு திட்டினால், யார் திட்டுகிறாரோ, அவர் தன்னைக் கேலி செய்ததாகக் கருதி, சனீஸ்வரன் அவர் மீதும் தன் பார்வையை செலுத்தி விடுவார் என்பது ஐதீகம். மந்தகதி உடையவர்களிடம் பக்குவமாக பேசி திருத்துபவர்களுக்கு, சனீஸ்வரனின் அருள் கிடைக்கும்
வழிபாட்டில் எலுமிச்சம்பழத்திற்கு முக்கியத்துவம் ஏன்?
இறைவனுக்கு நம்மால் இயன்றவற்றை பக்தியுடன் அளிப்பதே பூஜை. ஆண்டவனுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனானது அவருக்கு மட்டும் இல்லாமல் அனைத்து ஜீவராசிகளையும் சென்றடைந்து பயன் அளிக்கிறது. நாம் நமது சக்திக்கு ஏற்றவாறு பக்தியுடன் அளிக்கும் அனைத்து பொருட்களையும், இறைவன் அன்புடன் ஏற்கிறார். ஆகமங்களில் ஒவ்வொரு தெய்வ வடிவங்களுக்கும் அவர்களுக்கு உரிய சிறப்பான மலர், பழங்கள், மந்திரங்கள், வஸ்திரங்கள், எந்த நாட்களில் செய்ய வேண்டும் என மிகச் சிறப்பாக வகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றில் ஒரு சில அனைத்து தெய்வங்களுக்கும் பொதுவானதாக உள்ளது. புஷ்பங்களைத் தொடுத்து மாலையாக அணிவிப்பதைப் போல, சில சிறப்பான பழங்களையும் மாலையாகக் கட்டி கடவுளுக்கு அர்ப்பணிப்பதை ஆகமங்கள் ஆமோதிக்கின்றன. அவற்றில் முக்கியமான ஒன்று தான் எலுமிச்சம்பழம்.
தீயவற்றைப் போக்கி நன்மையை அளிக்கக்கூடிய மிகப் பெரிய மருந்து இது. வெற்றியின் அடையாளமாகவும் வீரத்தின் அடையாளமாகவும் எலுமிச்சம்பழம் உள்ளது. காளி, மாரி, துர்கா போன்ற வீரத்தை வெளிப்படுத்தி நம்மைக் காக்கும் தெய்வங்களுக்கு இவை மிக உகந்தது. எனினும், மற்ற தெய்வங்களுக்கும் இவற்றை அளிக்கலாம். இவ்வகையில் எலுமிச்சம்பழத்தை மாலையாகக் கடவுளுக்கு அளிப்பதினால், அந்தப் பழத்தின் சிறந்த மஞ்சள் நிறத்தினாலும் தன்மையாலும் நாம் நமது காரியங்களில் வெற்றியடையலாம் என்பது உறுதி. அக்காலங்களில் நாம் நமது பிரார்த்தனையைத் தெரிவிக்க வேண்டுமெனில், அவர்களாகவே தங்களின் பிரார்த்தனைகளை சங்கல்பித்துக்கொண்டு பூவையோ பழங்களையோ தொடுத்து கடவுளுக்கு அளித்து நன்மைகளைப் பெற்றார்கள். முயன்றவரை நாமும் நம் கைகளால் பூவையோ, பழங்களையோ மாலையாகத் தொடுத்து இறைவனுக்குப் படைத்து பயனடைவோம்.
தீயவற்றைப் போக்கி நன்மையை அளிக்கக்கூடிய மிகப் பெரிய மருந்து இது. வெற்றியின் அடையாளமாகவும் வீரத்தின் அடையாளமாகவும் எலுமிச்சம்பழம் உள்ளது. காளி, மாரி, துர்கா போன்ற வீரத்தை வெளிப்படுத்தி நம்மைக் காக்கும் தெய்வங்களுக்கு இவை மிக உகந்தது. எனினும், மற்ற தெய்வங்களுக்கும் இவற்றை அளிக்கலாம். இவ்வகையில் எலுமிச்சம்பழத்தை மாலையாகக் கடவுளுக்கு அளிப்பதினால், அந்தப் பழத்தின் சிறந்த மஞ்சள் நிறத்தினாலும் தன்மையாலும் நாம் நமது காரியங்களில் வெற்றியடையலாம் என்பது உறுதி. அக்காலங்களில் நாம் நமது பிரார்த்தனையைத் தெரிவிக்க வேண்டுமெனில், அவர்களாகவே தங்களின் பிரார்த்தனைகளை சங்கல்பித்துக்கொண்டு பூவையோ பழங்களையோ தொடுத்து கடவுளுக்கு அளித்து நன்மைகளைப் பெற்றார்கள். முயன்றவரை நாமும் நம் கைகளால் பூவையோ, பழங்களையோ மாலையாகத் தொடுத்து இறைவனுக்குப் படைத்து பயனடைவோம்.
Thursday, September 11, 2014
சித்தர்கள் இன்றும் இருக்கிறார்களா?
இன்றும் சித்தர்கள் உலகில் இருக்கிறார்கள்; ஆனால், அவர்கள் மனிதர்களின் கண்களுக்குப் புலப்படுவதில்லை என்கிறார்கள். ஒரு ஞானி இதற்கொரு கதை சொல்கிறார். ஒரு துறவி தம்முடைய சில சீடர்களுடன் ஒரு நகரத்திற்கு வந்திருந்தார். அந்தத் துறவிக்கு ஒரு சக்தி இருந்தது. தம் உடலிலிருந்து ஒரு துளி ரத்தம் எடுத்து, அதன்மூலம் குழந்தைகளின் நோய்களை உடனுக்குடன் குணப்படுத்தும் ஆற்றல் அது. இந்த செய்தி மெல்ல மெல்ல நகரம் முழுவதும் பரவிவிட்டது. தமக்கு தேவியின் அருள் கிட்டியிருப்பதாகவும் அந்த சித்தியின் மூலம் தான் தம்முடைய ரத்தத்தில் மருந்துக்குணம் இருப்பதாகவும் துறவி தெரிவித்தார். அன்று முதல், துறவியின் இருப்பிடத்தில் பொன், வெள்ளிக்காசுகளும் பழங்களும் மலர்களும் பூஜைக்கான பொருள்களும் வந்து குவியலாயின. ஏகப்பட்ட பெற்றோர்கள், நோய்வாய்ப்பட்ட தமது குழந்தைகளுடன் துறவியின் ஆசிரமத்தை முற்றுகையிடலானார்கள். நோயால் வருந்திய சின்னஞ்சிறு குழந்தைகளின் திரளான கூட்டத்தைக் கண்ட துறவியின் மனதில் கருணை பொங்கித் ததும்பியது.
மறுகணமே துறவி தம் ஆள்காட்டி விரலொன்றைத் திரிசூலத்தில் அழுத்தினார். குபுகுபுவென்று ரத்தம் வெளிப்பட்டது. ரத்தத் துளிகளின் மகிமையால் குழந்தைகளின் நிலைமையில் அப்போதே முன்னேற்றம் ஏற்பட்டது. பெற்றோர்களின் முகத்தில் வியப்பும் மகிழ்ச்சியும் பொங்கியது. ஒரு விரலில் ரத்தம் வருவது நின்றதும், துறவி தமது இன்னொரு விரலைத் திரிசூலத்தின் மேல் வைத்தார். குணமடைந்த நோயாளிகளின் கூட்டம் அங்கிருந்து மெல்ல மெல்ல நகர்ந்தது. ஆனால், நோயாளிகளின் வரிசை வளர்ந்து கொண்டே போயிற்று. துறவியின் பத்து விரல்களிலிருந்தும் ரத்தம் வெளியேறி முடிந்தாயிற்று. அதற்கு மேல் ரத்தம் நின்று விட்டது. ஆயினும், நோயாளிகளின் வருகைக்கு ஒரு முடிவு இருப்பதாகவே தெரியவில்லை. அக்கம் பக்கத்து ஊரின் மக்களும் அங்கே வரத் தொடங்கி விட்டார்கள். கதையை விவரிப்பானேன்? காரணம், கடைசி கட்டம் முழுக் கதையையும் விளக்கி விடுகிறது. அகதிகள் சிலர் இந்த விவரம் தங்களுக்கு எட்டியதும் அந்தத் துறவியின் குடிசைக்கு விரைந்தார்கள். அங்கே அவர்கள் கண்ட காட்சி - ஐயகோ!
கால்கள் ஒரு மரக்கிளையில் கட்டப்பட்டு துறவி தலை கீழாகத் தொங்கிக் கொண்டிருக்கிறார். திரிசூலத்தால் குத்தப்பட்டு உடல் முழுவதும் சல்லடைக் கண்களாகி வெளுத்துப் போய் விட்டிருக்கிறது. துறவியின் அருகில், கையில் ஒரு நோயாளிக் குழந்தையுடன் நின்ற ஒரு தம்பதியர் சுவாமி! ஒரு துளி ரத்தம் மட்டும் எங்களுக்குத் தாருங்கள். எங்களுடைய ஒரே குழந்தை இது. தங்கள் சாந்நித்தியத்திலிருந்து நம்பிக்கை இழந்து திரும்ப வேண்டிய அளவுக்கு எங்களுக்கு மட்டும் ஏன் இந்தத் துர்பாக்கியம்? என்று மன்றாடிக் கொண்டிருக்கிறார்கள். இன்றைய மனிதர்கள், அந்த நகரத்தின் அந்நாளைய மனிதர்களிலிருந்து வேறுபட்டுவிட்டனரா? இல்லை! என்பதுதான், மனிதனின் இயற்கை குணங்களை ஆராய்ந்தறிந்த உளவியல் அறிஞர்களின் கூற்று! இந்த சம்பவத்துக்குப் பிறகு இறைவனும் இறைவியும் கொஞ்சம் உஷாராகி விட்டனர். இந்தத் துறவியைப் போன்ற வரம் பெற்ற சித்தர்கள் இன்றுகூட இந்த உலகில் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், அவர்கள் இப்படி வெளிப்படையாக மனிதர்களிடையே செல்வதற்கு அவர்களுக்கு அனுமதி
Subscribe to:
Posts (Atom)




