Tuesday, October 12, 2010

முருகன் வழிபாடு- தமிழ்

முருகன் வழிபாடு- தமிழ்


முருகன் போற்றி


ஓம் அருவாம் உருவாம் முருகா போற்றி
ஓம் திருவார் மறையின் செம்பொருள் போற்றி
ஓம் ஆறுமுகத்தெம் அரசே போற்றி
ஓம் மாறுகொள் சூரரை வதைத்தாய் போற்றி
ஓம் இருள்கெடுத் தின்பருள் எந்தாய் போற்றி
ஓம் உருள்பூங் கடம்பணி உரவோய் போற்றி
ஓம் ஈசற் இனிய சேயே போற்றி
ஓம் மாசறு திருவடி மலரோய் போற்றி
ஓம் உறுநரத் தாங்கும் உறவோய் போற்றி
ஓம் செறுநர்த் தேய்த்த செவ்வேள் போற்றி

ஓம் ஊனில் ஆவியாய் உயிர்ப்போய் போற்றி
ஓம் கானில் வள்ளியின் கணவ போற்றி
ஓம் எழில்கொள் இன்ப வாரிதி போற்றி
ஓம் அழிவிலாக் கந்தனாம் அண்ணல் போற்றி
ஓம் ஏறு மயிலூர்ந் தேகுவாய் போற்றி
ஓம் கூறு மன்பர்க்குக் குழைவாய் போற்றி
ஓம் ஐயனாய் உலகை ஆக்குவாய் போற்றி
ஓம் செய்ய மேனியனே தேவே போற்றி
ஓம் ஒருவனாய் உலகெலாம் ஒளிர்வாய் போற்றி
ஓம் பருவம் முதிராப் பண்பே போற்றி 



ஓம் ஓவற இமைக்கும் ஒளியே போற்றி
ஓம் மாமுதல் தடிந்த மறவ போற்றி
ஓம் ஒளவியம் அறுத்தோர்க் கருள்வாய் போற்றி
ஓம் தெய்வம் எல்லாந்தொழும் செய்யாய் போற்றி
ஓம் அஃகுதல் அற்றார் விளக்கே போற்றி
ஓம் கந்தா மணமார் கடம்பா போற்றி
ஓம் நந்தா விளக்கே நாயக போற்றி
ஓம் காப்பாய் படைப்பாய் கழிப்பாய் போற்றி
ஓம் மூப்பீறற்ற முதல்வா போற்றி
ஓம் முத்தமிழ் முதல்வனே போற்றி  


ஓம் கள்ளப் புலனைக் களைவாய் போற்றி
ஓம் கீழறும் அடியர் கிழிவோய் போற்றி
ஓம் ஏழல குந்தொழும் இறைவா போற்றி
ஓம் குன்றும் குழைதோட் குமர போற்றி
ஓம் என்றும் இளைய ஏறே போற்றி
ஓம் கூம்புகைத் தேவர் கோவே போற்றி
ஓம் பாம்பணி சிவனார் பாலக போற்றி
ஓம் கெண்டைக் கண்ணியர் கேள்வ போற்றி
ஓம் அண்டினர்க் கருளும் அங்கண போற்றி
ஓம் கேடில் முருகனாய்க் கிளர்ந்தாய் போற்றி


ஓம் வீடில் வீடருள் விமல போற்றி 
ஓம் கைவேல் கொண்ட காவல போற்றி
ஓம் நைவேற் கருள்வாய் நாயக போற்றி
ஓம் கொடைக் கடன்கொண்ட குழக போற்றி
ஓம் படைக்கடல் தலைவ பரனே போற்றி
ஓம் கோதில் அமிழ்தே குருமணி போற்றி
ஓம் போதில் அமர்ந்த பொன்னே போற்றி
ஓம் சிவபிரான் கண்வரு சேயே போற்றி
ஓம் நவசர வணத்தில் நகர்ந்தாய் போற்றி
ஓம் அறுவுரு அமைந்தே ஆடினாய் போற்றி


ஓம் அறுமீன் பாலுண் அமர போற்றி
ஓம் உருவுமை சேர்க்க உற்றாய் போற்றி
ஓம் பெருமை பிறங்கு பெரியோய் போற்றி
ஓம் நான் முகனைச் சிறை நாட்டினாய் போற்றி
ஓம் மான்மகள் வள்ளியை மணந்தாய் போற்றி
ஓம் செங்கண் கடாவைச் செலுத்தினாய் போற்றி
ஓம் அங்கண் குறிஞ்சிக் கரசே போற்றி
ஓம் இறைவனுக் கரும்பொருள் இசைத்தாய் போற்றி
ஓம் மறையிடைப் பொருளாய் வளர்ந்தாய் போற்றி
ஓம் பரங்குன்றமர்ந்த பரம்பர போற்றி 


ஓம் திருச்செந்தில் வளர் சேவக போற்றி
ஓம் ஆவினன்கு குடி ஆண்டாய் போற்றி
ஓம் மேவி ஏரகம்வாழ் மிக்கவ போற்றி
ஓம் குன்று தோறாடும் குழந்தாய் போற்றி
ஓம் துன்று பழமுதிர் சோலையாய் போற்றி
ஓம் திசைமுகம் விளக்கும் செம்முக போற்றி
ஓம் இசைபெரு வேள்வி இனமுக போற்றி
ஓம் செங்களம் ஓர்க்கும் திருமுருக போற்றி
ஓம் மங்கல மான வானவ போற்றி
ஓம் வள்ளிபால் நகைகொள் மாமுக போற்றி 


  ஓம் திங்களின் ஒளிரும் சீர்முக போற்றி
ஓம் ஆர்வலர் ஏத்த அருள்முக போற்றி
ஓம் சிர்வளர் அழகின் செல்வா போற்றி
ஓம் மணிமுடி புனையாறணி முடி போற்றி
ஓம் துணையடி தொழுவார்க் கணைவாய் போற்றி
ஓம் செவியீராறுடைச் செம்மால் போற்றி
ஓம் கவித்தொடை புனைதோட் கந்தா போற்றி
ஓம் பன்னிரு கண்ணுடைப் பண்ணவ போற்றி
ஓம் என்னிரு கண்ணின் இலகுவோய் போற்றி
ஓம் பொருவில் ஒருவனாம் புலவ போற்றி 



ஓம் அருணகிரிக்குக் கருள் அமல போற்றி
ஓம் நக்கீரற் கருள் நாதா போற்றி
ஓம் தக்க சங்கத்தமிழ் தந்தாய் போற்றி
ஓம் குமர குருபரற் கருளினை போற்றி
ஓம் அமரர் அறிஞர்களை அளியோய் போற்றி
ஓம் பந்த பாசங்களைப் பறிப்போய் போற்றி
ஓம் கந்தபுரி வாழ்வுகந்தோய் போற்றி
ஓம் தெய்வானை யம்மையைச் சேர்ந்தோய் போற்றி
ஓம் பொய்யிலா மனத்துட் புகுவோய் போற்றி
ஓம் கோழி வெல்கொடிக் கோவே போற்றி 


ஓம் ஊழி தோறூழி உள்ளாய் போற்றி
ஓம் செய்யாய் சிவந்த ஆடையாய் போற்றி
ஓம் மெய் யெலாம் வெண்ணீறணிவோய் போற்றி
ஓம் மேவலர் மடங்காலம் விசாக போற்றி
ஓம் மூவர்கள் போற்றும் முத்த போற்றி
ஓம் தேவர்கள் சிறைமீள் சீர்வலாய் போற்றி
ஓம் சேவலும் மயிலும் சேர்த்தோய் போற்றி
ஓம் போர்மிகு பொருந புரவல போற்றி
ஓம் ஏர்மிகு இளஞ்சேய் எம்மிறை போற்றி
ஓம் தாரகற் கொன்ற தாழ்விலாய் போற்றி 


ஓம் பாரகம் அடங்கலும் பரவுவோய் போற்றி
ஓம் தமிழ்மொழி இன்பில் தழைப்பாய் போற்றி
ஓம் அமிழ்திற் குழைத்த அழகா போற்றி
ஓம் கல்வியும் செல்வமும் களித்தருள் போற்றி
ஓம் பல்வகை வளனும் பணித்தருள் போற்றி
ஓம் இன்பார் இளைய ஏந்தால் போற்றி
ஓம் என்பால் அருள்புரி என்றும் போற்றி
ஓம் தமிழுக்குரிய பண்ணே போற்றி  
      

No comments:

Post a Comment